Wednesday, September 12, 2018







திரைப்படம் 

ஒரு கலைவடிவமா ...?---4




சலனப்படம் வந்ததும் தன்னுடைய தகவல் தொடர்பு சாதனம் ஒரு முழுமையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக மனிதன் நினைத்தான் .அது தகவல் தொடர்பு சாதனமாக இருந்தாலும் அதில் கதைப்படங்களை சலனப்படமாகவே எடுக்கவும் செய்தான்." சௌகார் -கி -பாஷ் " என்ற படம் அதில் முக்கியமானது .

மத்திய  மும்பையில் ஒரு நூற்பாலை. தொழிலாளர்கள் அதற்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள்> அவர்களில் வயது முதிர்ந்த ஒருவரும் செல்கிறார். வாசலில் நிற்கும் காவலாளி அவரைத்தடுக்கிறான். உனக்கு வயதாகிவிட்டது. உன்னை ஓய்வுகொடுத்து அனுப்பி விட்டார்கள்  என்று காவலாளி தடுக்கிறான்.தொழிலாளி நான் போவேன் என்று சீ றுகிறான்தள்ளுமுள்ள நடந்து அவனை காவலாளி தள்ளி விடுகிறான். அந்த முதியவன் கல்லில் அடிபட்டு விழுகிறான்> தொழிலாளியின் மகன் ஓடிவந்து அவனை தான் மடியில்கிடத்திக்கொள்கிறான்.காட்ச்சி மாறுகிறது.

புனே அருகில் உள்ள கிராமம்> விவசாயி தன் வயலுக்கு நீர் பாய்சசி கொண்டிருக்கிறான். அவன் மனைவி அவனுக்கு கஞ்சி காய்ச்சி கொண்டு வருகிறாள்.அவனுடைய மகன் மம்பிட்டியால் வாய்க்காலில் ஓடும்நீரை ஒழுங்கு படுத்து கிறான் .விளை ந்த பயிரை அறுத்து விவசாயி முட்டை காட்டுகிறான். அப்போது சௌகார் வந்து முட்டைகளை தன அடியாட்களை முலம் பறித்துக்கொள்கிறான். நிலத்தையும் ஆர்ஜிதம் செய்து விவசாயியை வெளியேற்றுகிறான் காட்ச்சி மாறுகிறது.

மடியில் கிடத்தப்பட்ட தொழிலாளி தன மகன் முகத்தையே பார்க்கிறான். மகனே கந்துவட்டி காரணிடம் கடன் மட்டும் வாங்காதே என்று கூறி மரி க்கிறான்.

பாபுராவ் பெயிண்டர் விவசாயியாக நடிக்கிறார் .அவர் மகனாக சாந்தாராம் நடித்தார். சித்தார்த் காக் என்ற ஆராய்ச்சியாளர் cinema என்ற பத்திரிகையில் எழுதியுள்ளார்.

நல்லகாலம் " மேற்கு தொடர்ச்சி மலை" படத்தை விமரிசித்தவர்கள் அப்போது இல்லை .இருந்திருந்தால் நமக்கு சாந்தாராம் என்ற இயக்குனர் கிடைத்திருக்க மாட்டார்.துவைத்து புதைத்திருப்பார்கள்.

சலனப்படம் பேச ஆரம்பித்தபோது அதனை எதிர்த்தவர்கள் உண்டு. நகைசுசுவை மற்றும் சோக நடிப்பில் உச்சத்தை தோட்ட சார்லிசாப்ளின் பேசும்படத்தை எதிர்த்தவர்களில் முதன்மையானவர். பேச ஆரம்பித்தால் நடிப்பின் தரம் குறைந்து விடும் என்று  அவர் நமபினார்.

பின்னாளில் மாறினார் இந்த நூறு  ஆண்டுகளில்மிகசிறந்த பத்து படமென்று எடுத்தால் அவரின் Great Dictator அதில் ஒன்றாகும் .

சலனப்படம் பேசும்படமாக மாறினாலும் மனிதனின் தேடல்நிற்கவில்லை. 

திரையில் நீளமும் அகலமும்தான் புலப்படுகிறது.மூன்றாவது பரி  மாண மான ஆழம் இல்லையே.? 

தேட  ஆரம்பித்தான்...

(தொடரும் )

0 comments: