Monday, November 12, 2018





"மா பூமி"யும்,



"கவுதம் கோஷு"ம் ...!!!





வங்கத்தில் 1950 ஆண்டு பிறந்தவர் கவுதம் கோஷ.  குறும்படங்கள் தயாரித்துக்கொண்டிருந்த கவுதம் 1979ம் ஆண்டு முழுநீள  கதை ப்படம் தயாரிக்க விரும்பினார்..


இந்திய சுதந்திர போராட்டத்தின் மிக முக்கியமான பகுதியை இந்தியாமுழுவதும் கொண்டு செல்லவேண்டும் என்று விரும்பினார்.

இநதியா  முழுவதும் சுற்றி வந்து தேடினார் விக் ட்டோரியா  லைப்ரரியில் உள்ள ஆவணங்கள், கெஜேட்டுகள் என்று படித்து பார்த்தார்.

சாம்பரான் விவசாயிகள் போராட்டம்,  அவர் கவனத்தை கவர்ந்தாலும் முழு திருப்தி கிடைக்கவில்லை. 

அப்போது தான் தெலுங்கானாவில் விவசாயிகள் நிஜாமை எதிர்த்து போராடினது பற்றி தெரியவந்தது .மீண்டு லைப்ரரியில் சரணடைந்தார். ஒரு கட்டத்தில் ஆந்திர மாநிலம் ஹைதிராபாத் சென்று தகவலை சேகரிக்க  விரும்பினார். ஹதீராபாத்,கம்மம், நந்தியால்,வாரங்கல்  என்று அலைந்தார் . ஹைதிராபாத்தில் Policeaction என்ற பெயரில் ஒரு போராட்டம் நடந்ததாக பலர் சொன்னார்கள் . ஆயுதம் தாங்கிய புரட்ச்சி நடந்த இடத்துலே அதற்கு அடுத்த தலைமுறைக்கு தெரியாமல் அமுக்கப்பட்டு இந்தவீரியமிக்க போராட்டத்தை ஆயுதப்புரட்ச்சியை  முதலில் அந்த தெலுங்கு மொழிபேசும் மக்களுக்கு சொல்லி வீட முடிவு செய்தார் "மா பூமி "  யை தெலுங்கில் உருவாக்க முடிவெடுத்தார்.   

உண்மையான அந்த தளபதி பி.சுந்தரய்யா எழுதிய  telungaanastrugle என்ற நூலை  படித்தார். ராஜசேகர ரெட்டி எழுதிய நூலை யும் படித்தார்.படப்பிடிப்பை ஆரம்பித்தார்.

இந்த படத்தில் விவசாயிகள் ஜமீன்களையும்,ஜாகிரகளையும் விரட்டியடிப்பார்கள்.அவர்கள் ஜமீனை விட்டு ஹைதிராபாத்த்ல் தஞ்சமடைவார்கள்.பின்னாளில் கர்னல் சவுத்திரியின் தலைமையில் இந்திய ராணுவம் வந்து புரட்ச்சியை  நசுக்கிய பின்னர் ஜமீன்தார்கள் காங்கிரஸ் கடசியில் சேர்ந்து ராணுவம் புடை சூழ கதரகுல்லா கதர் ஜிப்பாவோடு ஜமீனுக்குள்நுழைவார்கள் .இதற்காக பிலிம் டிவிஷனின் படசுருளை பயன்படுத்தி இருப்பார் .

தணிக்கையில் இதை அனுமதிப்பார்கள் என்று எப்படி எதிர்பார்த்திர்கள் என்று கேட்ட பொது " படம் எடுக்கும் போதே நான் எதற்கு சமரசம் செய்து கொள்ள வேண்டும். அவர்கள் தடுத்தால்பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்து விட்டேன். மேலும் தணிக்கைக்குழுவின் intelectual level பற்றி எனக்கு ஒரு அனுமானம் இருந்தது. அவர்களின் அறிவு பற்றி நான் கொண்டிருந்த எண்ணம்  சரியாகவே இருந்தது"என்றார் கவுதம்.

கவுதம் இந்தியில் எடுத்து சர்வதேச விருதுகளை வென்ற படம் "பார் " என்பதாகும் . பன்றி வளர்க்கும் சக்கிலிய தம்பதிகள் பற்றிய படம் .பன்றிகளை கங்கை ஆற்றை கடக்க படகில் ஏற்றமாட்டார்கள் . ஆற்று நீரில் நீந்த விட்டு மேய்த்துக் கொண்டு செல்லவேண்டும். மிகவும் ஆபத்தான பணி .சோத்துக்கு வழியில்லாத சகிலிய தம்பதி இந்த பணியை ஏற்றுக்கொண்டு செல்வார்கள் . நசுருதின் ஷாவும்,ஷபானா ஹஷ்மியும்  நடிப்பார்கள்.சர்வதேச விருது சிறந்த நடிப்புக்காக பெற்ற படம் அது.

(பி.கு .  தெலுங்கானா புரட்ச்சியை பின்புலமாக கொண்டு ஒரு நாவல் எழுத விரும்பினேன். அதற்காக குண்டூர்,விஜயவாடா, வாரங்கல் , நந்தியால் என்று அலைந்து தகவல் பெற்றேன்.  தோழர்கள் சுந்தரய்யா,சிந்து பூந்துறை அண்ணாசி ஆகியோரையும் கதையில்சேர்த்தேன். ஆனால் குறுநாவலாக தான் அவசரத்தில் எழுதினேன் . "கிருஷ்ண நதிக்கரையில் இருந்து " என்ற இந்த நாவலை ncbh பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதனை தெலுங்கிலும் இந்தியிலும் மொழிபெயர்க்க முயற்சி ஆரம்பமாகியுள்ளது.

மதிப்பிற்குரிய SAP அவர்கள் இந்த பின்புலத்தில் நாடகம் எழுதி அதனை மதுரை எம்.பி ராமசந்திரன் நாடகமாக போட்டார் . ) 


0 comments: