Wednesday, January 09, 2019






"இட ஒதுக்கீடு "



பொருளாதாரத்தில் 



பின் தங்கியவர்களுக்காம் !!!




"பொழுது போகாத சாமியார் எதையோ தூக்கி  பார்த்தாராம் " என்று கிராமத்தில் ஒரு சொலவடை உண்டு !

இட ஒதுக்கீடு பற்றி  அரசியல்சாசன சட்டம் உருவானபோதே இது பற்றிய விவாதம் நடந்தது.

அண்ணல் அம்பேத்காரிடம் பொருளாதாரத்தில் பின் தங்கையவர்களுக்கும் வேண்டும் என்று கோரிக்கையையே எழுப்பினார்கள் .இப்படி எழுப்புவதில் மூலம் இடஒதுக்கீடு பிரச்சினையை சர்சைக்குள்ளாக்கி நீர்த்து போகசெய்வது தான் அவர்களை நோக்கம்.

"இந்தியாவில் 80 % மக்கள் பொருளாதார ரீதியாக கீழ் மட்டத்திலதான் இருக்கிறார்கள்>இதிலமேல்சாதி,கீழ்சாதி என்ற பேதமில்லை. என்று பதிலளித்தார் அம்பேத்கார்.

சவுண்டி பாப்பான் அம்பட்டனை ஏல முனியா நாளை காலைல வந்துடு " என்று கூற முடியும் "

"அவன்  சரிங்க சாமி " என்றுதான் பதில்கூறவேண்டும்.1

ராமன் குகனை சகோதரா என்று  கூப்பிட்டார் .குகன் கூப்பிட்டதாக வால்மீகி எழுதவில்லை..குகன் ராமனை சகோதரா என்று கூப்பிட்டிருந்தால் அன்றே அயோத்தியில் சாதி கலவரம் தோன்றி இருக்கும்.

தசரத புத்திரர்கள்நால்வர் தான்.என்றுமே அவர்கள்  ஐவரானதில்லை .

அதனால் தான் பொருளாதாரத்தை அடிப்படையாக கொள்ளவில்லை.

இந்த நடவடிக்கையே அபத்தமானது .இந்த கொள்ளையில் 10% தருகிறார்களாம் ."ஏல சட்டில ஒன்னும் இல்லை. இருப்பது 0% .இதுல 10% ஆனா என்ன 80 % ஆனா என்ன ?எல்லா கழுதையும் ஒண்ணுதான்."

இதை நடைமுறைப்படுத்த முடியாது. அரசியல் சாசனத்தை திருத்தணும். அது இப்பபோதைக்கு முடியாது> 50 % மாநிலங்கள் அதை ஏத்துக்கணம்  .நடக்கிற காரியம் இல்லை.

2003 ல வாஜ்பாயாய் செஞ்சு  தோத்தாரு. இப்பம் மோ டி செஞ்சு பாக்காரு..

நமக்கு சந்தோஷம்  தான் .மோடி அலைல இல்லை பயத்துல இருக்காரு.எத்தைத்தின்னா பித்தம் தேளியும் னு பாக்காணுவ ! 

"நாங்க ஜெயித்து வந்தோம்னா ரபெ ல்  ஊழலை விசாரிப்போம். ஊழல் செய்தவர்களுக்கு தண்டனை வாங்கித்தருவோம் " நு   காங்கிரஸ் கடசி அறிவிச்சிருக்கு.

அம்புட்டு பயகளும் பேய் முழி முழிச்சிக்கிட்டு இருகணுவ.! 

கூத்து இன்னும்முடியலை !

சீரழிய போறானுவ !!!



0 comments: