Monday, March 25, 2019


சின்னப்பயலுவ 

தெளிவாத்தான் 

இருக்கானுவ 









"மதத்தை அடிப்படையாக கொண்ட சர்க்கார் வேண்டாம் தானே ? "

"என்ன செய்ய ! மத்தில அப்படித்தானே அரசு  னு வாய்சசிருக்கு ?"

"அத மாத்திரணும்டா ?"

"மாத்திட்டு "

"மொதல்ல மாத்துவம் "

"யாரு வருவா ?"

"மோடி "ய வேண்டாம்  னு சொல்றவங்க "

"அது தாண்ட சிக்கலு ?"

"ஒரு ஆள் இந்தியா பூராவிலும்  லீடர் னு யாரும் கண்ணுல படலையே "

"மொதல்ல கீழ இறக்குவம்டா  !"

"ஆழம் தெரியாம கால விட்ட கதை  ஆகிடும் "

"மோடி ஆட்கள் இத சொல்லித்தான் ஜனங்கள்ட்ட பிரச்சாரம் பண்ணறா ங்க !" 

"நிசசயமா ஆள் வரும் !"

"எப்படி சொல்ற ?" 

 "தேவ கவுடா வருவார் னு நீ நினைச்சையா ?"

"இல்ல .அப்பம் சுர்ஜித் இருந்தாரு !

"குஜ்ரால் வந்தாரு " "வி.பி சிங் சிங் வந்தாரு " சக்கை போடு போட்டாரு."

"அதுமாதிரி வரனும்ல "கண்ணுல படலையே "

"எல்லாரும் மோடி வேண்டாம் கம் "

"ஒண்ணா நிக்க மாட்டாய்ங்காங்களே "

"அகிலேஷும் மாயாவதியும் தனி " சந்திர பாபு தனி " தெலுங்கானா ராவ் தனி "ராகுலும்,ஸ்டாலினும் தனி "

"தனி இல்லை "

"எப்படி சொல்ற ?"

"மோடியை எதுக்கறதுல ஒண்ணா இருக்காங்கல்லா "

"முதல்ல  மோடியை கீழ இறக்குவம் ?அப்புறம் மத்தத பாத்துக்குவம் "

"இதைத்தானே சீத்தாராம் எச்சூரி  சோல்றாரு " 

"எச்சூரி சுர்ஜித் தோடே பிரதம  சிஷ்யன் தான் "

எங்க வீட்ல ரெண்டு பேரன்களும் பேசிக்கிட்டு இருந்தாங்க .ஒருத்தனுக்கு 23 வயது.இன்னொருத்தனுக்கு 22 வயது. சின்ன பயலுகளா இருந்தாலும் தெளிவா இருக்கானுவ .

இரவு கவலைய மறந்து தூங்கினேன் !!!

0 comments: