Friday, March 29, 2019




கேரளத்தில் ,

பா.ஜ .க தலைவர்களிடையே ,

குழப்பம் ...!!!


கேரளத்தில் 20 தொகுதிகளுக்கான தேர்தல் நடக்க விருக்கிறது .ஆளும் இடது முன்னணி யின் சார்பில் மார்க்சிஸ்ட்கட்சி 16 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்டா கட்சி 4 இடங்களிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.

கல்வி யில்   முதல் இடத்தில் உள்ளகேரள மக்கள் பத்தாம் பசலித்தனமான பா/ஜ.க வை நிசசயமாக ஆதரிக்க மாட்டார்கள்.

கேரளத்தில் மாநில ஆட்ச்சியும் மாறி மாறி இடது சாரிகள் அல்லது காங்கிரஸ் என்று தான் வந்திருக்கிறது .

இடது சாரிகள் பலம் பொருந்திய இந்த மாநிலத்தில் காங்கிரஸ் சுயநலமிக்க சில கிறிஸ்துவ அமைப்பு ,மற்றும் முஸ்லீம் அமைப்புகளை தாஜா பண்ணி வெற்றி பெறுவது வழக்கம் .

இது தவிர பாரதிய ஜனதா கட்சி  வடக்கே கண்ணனுரிலும் தெற்கே திருவனந்தபுரத்திலும் சில பகுதிகளில் இருக்கின்றனர் ."ஓழக்கிற்குள் கிழக்கு மேற்கு பார்க்கிறான் " என்று சொலவடை உண்டு. பாஜக விற்குள் கண்ணனுர் கோஷ்டி, திருவனந்தபுரம் கோஷடி என்று உண்டு. கண்னுர் ஆர் எஸ்.எஸ்.வசம் உள்ளது இவர்களுக்கு க  என்ற எழுத்தே பிடிக்காது. கம்யூனிஸ்ட் என்ற வார்த்தையில் க வருவதால் .கேரளம் என்பதற்கு பதிலாக பரசுராமபுரம் என்பார்கள்.

தேர்தலில் தாங்கள் வெற்றி பெறாவிட்டாலும் கம்யூனிஸ்ட்கள் வரக்கூடாது என்பதில் தீர்மாணமா க இருப் பவர்கள் இவர்கள் .

கம்யூனிஸ்டுகளுக்கு,காங்கிரசுக்கும் நடக்கும் போட்டியில் கம்யூனிஸ்டுகள் 1 சத்தம் ஒட்டு வித்தியாசத்தில் வெற்றிபெறுவது வழக்கம். 

சட்டமன்ற தொகுதிக்கு 100 லிருந்து 200 வாக்குகளை வைத்திருக்கும் பாஜக  காங்கிரசுக்கு போட்டு சில சமயங்களில் ஜெயிக்க வைக்கும்.

நடப்பு நாடாளுமனற தேர்தலில் இடது சாரிகள் நிசசயம் கணிசமான வாக்குகளை பெற்று வெற்றி பேற  இருக்கிறார்கள் . 50லட்சம் பெண்கள் கலந்து கொண்டு உலகையே வியக்க வைத்த "சுவர் "  பாஜக வயிறை கலக்கி வருகிறது.

ஆர் எஸ் எஸ் தலைமை இதனை சமாளிக்க தங்கள் வாக்குகளை காங்கிரசுக்கு போட தீர்மானித்துள்ளது என்பது பார்வையாளர்களின் யூகம் .இதனை  திருவனந்தபுரத்தில் இருக்கும்பாஜக தலைவர்கள் எதிர்க்கிறார்கள்.

"வடமாநிலங்களில் நிசசயம் சரிவு ஏற்படும். இந்த சமயத்தில் காங்கிரசுக்கு கூடுதல் உறுப்பினர்கள் கிடைத்தால்  ஆகப்பெரும் கடசியாக வரும் வாய்ப்பிருக்கிறது இது ஆடசி அமைக்க சிக்கலை ஏற்படுத்தலாம்" என்கிறார்கள். 

பாஜக தலைமை இது வரைஇந்த குழப்பத்தில் இருந்து மீளவில்லை.

   

0 comments: