Sunday, June 09, 2019





லெனின் பாரதிக்கு ,

ஏன்  இந்த ,

முரட்டுக் கோபம் ?





"விஞ்ஞன ரீதியில் செயல்படும் ஒரு இயக்கம் இப்படி வாக்களித்திருக்கக்கூடாது..பொருளாதார ரீதியில் பின் தங் கியவர்களுக்கு 10% இட் ஒதுக்கீடு மசோதாவினை ஆதரித்து வாக்களித்தது கண்டிக்கத்தக்கது" 

தன முரட்டு கோபத்தை லெனின் பாரதி அவர்கள் வெளிப்படுத்தி இருக்கிறார் .

சுப வீர பாண்டியன் ஒரு படி மேலே போய்விட்டார் . " மார்க்சிஸ்ட் கடசி நமது கூட்டணியில் இருக்கிறது.ஆனாலும் விமரிசனம் உள்ளது. தோழர் ரங்கராஜன் மாநிலங்கள் அவையில் பேசிவிட்டு 10 சாதமானம் இடஒதுக்கீடு மசோதாவுக்கு வாக்களித்த பொது கனிமொழி அவர்கள் கொதித்து எழுந்தார் .கோபப்பட்டார்> அந்த காட்ச்சியை என்னால் மறக்கவே முடியாது. பெரியாரின் பேத்தி என்பதை நிரூபித்து விட்டார் " என்றார் .

குடியரசு துணைத்தலைவர் அலுவலகத்தில் 49 அதிகாரிகள் உள்ளனர்> அதில் 39 பேர் "அவாள் ".10 பேர்தான் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடியினர்" என்றார் . பட்டியல் உண்மைதான்

"விசிக"கவின் இரவிக்குமார் உசச   நீதி மனற நீதிபதிகள்,  அரசு உயர் அதிகாரைக ப்பாட்டியலைத்தந்து அதில் யார் யார் என்ன சாதி என்பதை தெளிவாக்கினா  .

இது இன்று நேற்று எழுப்பப்படது  அல்ல. என்று வி.பி. சிங்க 27 சதம் ஒதுக்கீடு கொண்டு வந்தாரோ அன்றே  எழுந்த பிரசினை> காங்கிரஸ் பாஜக, கம்யூனிஸ்டுகள் இந்த நிலையை எடுத்தனர் .எத்தனை சாதமானம் என்பதில் வேறுபாடு இருந்ததுதான் உண்மை .

ஆனாலும் காங்கிரஸ் கம்யூனிஸ்ட்கள், திமுக  ஒன்றிணைந்து தான் தமிழத்தில் மகத்தான வெற்றியை பெற்றது என்பது ம் உண்மை.

மத்திய அரசு ஐ ஏ எஸ், ஐ பி எஸ் , என்று தேர்வு மூலம் அதிகாரிகளை தேர்ந்தெடுத்த்து பயிற்சி கொடுத்து கலெக்டர்களாக, போலீஸ் அதிகாரிகளாக நியமிக்கிறது. துடிப்பும்,நுண்ணறியவும் மிக்க ஏராளமான இளைஞ்ர்கள்  ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தை கொடுத்து மக்கள்பால் நிற்க வேண்டும் என்ற ஆர்வத்தில் மாநிலங்களில் பணியில் அமர்த்தப்படுகிறார்கள்.

இது தவிர மிகவும் நேர்மையான , திறமை மிக்க முத்த அதிகாரிகளை மாநில அரசுகள் சிபாரிசின் பேரில் ஐ ஏ எஸ்,ஐ பி. எஸ் பட்டங்கள் கொடுத்து கலெக்டர்,டி  எஸ் பி என்று அமர்ந்து கிறார்கள்.

சமீபத்தில் ஒரு ஐ பி எஸ் அதிகாரி கூறினார் ." முக்கியமான அதிகாரமுள்ள பதவிகளில் மாநில அரசு conferd அரசு அலுவலர்களை போடு கிறார்கள் .எங்களை எந்த அதிகாரமும் இல்லாத பதவிகளில் ஓரம் சாரமுமாக அமர்ந்து கிறார்கல்  என்றார்.

சமீபத்தில தமிழக அரசு சுமார் 40 பேருக்கு காணபர் செய்து பதவி அளித்திருவதாக தெரிகிறது. 

இதில் விருமாண்டி,சம்மந்தம், ராமலிங்கம் உண்டு .ஒரு முனியாண்டியோ மாயாண்டியோ இல்லை . இந்த பட்டியலில் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் எத்தனைபேர் என்றார் பட்டியலை இரவிக்குமார் சொல்ல மாட்டார் .

ஒரு தலித் குடிமகன் தாசிலாதாராக நியமிக்கப்பட்டான் என்றால் அந்த தாஸிலில் தலித்துகளின் பாடு  குறையுமே. ஒரு டிஸ் பி தலித்தாக இருந்தால் அந்த சரகத்திலாவது தலித்துகள் கொஞ்ச்ம நிம்மதி அடைவார்கள் .ஒரு தலித் ரெவின்யூ இன்ஸ்பெக்டராக இருந்தால் அரசு இடிந்து வீழ்ந்து விடுமா?

இதற்கான ஒரே பதில்  மாநில அரசு ஊழியத்தில்  பதவி உயர்வுக்கு இட ஒதுக்கீடு இல்லை என்பதாகும்.

மாநில அரசின் பதவி உயர்வில்  ஏன் இட ஒதுக்கீடு இல்லை? 


ஏன் இவர்கள் அதனை கேட்டு பெற மறுக்கிறார்கள்?


ரவிக்குமாரை நாடாளுமனறத்தில் தன கன்னி  பேச்சில் இதனை கேட்பாரா ? 


மாட்டார்!


அவர் வெற்றி பெற்ற சின்னம் அதை  அனுமதிக்குமா?

 

0 comments: