Tuesday, June 11, 2019






"செலுவி " திரைப்படமும் ,

கிரிஷ் கர்னாடின் ,

உன்னதமும் ...!!!





அந்த கிராமத்தில் வசிக்கும் சிறுமி தான் "செலுவி". செல்வி என்று தமிழில் அழைப்பதை  கன்னடத்தில் செலு வி என்கிறார்கள். மிகவும் வசதிக்குறை வான வாழ்க்கையில் சுளுவி அவள் சகோதரி,  தாயாரோடு வாழ்கிறாள். 

அவளுக்கு ஒரு மந்திரம் தெரியும் .அதன் மூலம்  ஒருமரமாக மாறி வண்ண வண்ண மான நறுமணம் வீசும் மலர்களை தருவாள். தன சகோதரியுடன் காட்டிற்கு சென்று அதனை செய்து காட்டுகிறாள் .சகோதரி இரண்டு வாளி யில்நிற்கொண்டுவந்து அதன் ஒன்றை செலுவி மீது தெளிக்கிறாள். மரமாக மாறிய செலுவி  பூக்களை சொரிகிறாள். சகோதரி தேவையான பூக்களை சேகரித்து விட்டு அடுத்தவாளியில் உள்ள நீரை மரத்தின் மீது தெளிக்கிறாள். செலுவி மனித உருவை அடைகிறாள் .பூக்களை சேகரிக்கும் பொது எந்த கிளையையோ இலையையோ பறி க்கக் கூடாது என்பது நிபந்தனை.

இந்த ரகசியத்தை அந்த ஊர் நாட்டாமையின் மகன் குமார் தெரிந்து கொள்கிறான் .செலுவியோடு பழகுகிறான்.செலுவியும் அவனை மணந்து கொள்கிறாள் .குமார் செலுவி மரமாவதை பார்க்க விரும்புகிறான் .எவ்வளவோ தடுத்தும் பிடிவாதமாக இருக்கிறான் ஒருநாள் செலுவி அவனை காட்டிற்குள் அழைத்து சென்று மரமாக மாறி பூக்களை சொரிகிறாள். பூக்கள் ஆற்றில் விழுந்து செல்கிறது .இதனைப்பார்த்த சிறுவர்கள் ஓடிவந்து பூக்களை பறிக்கிறார்கள்> பல இலைகளும் கிளைகளும் அவர்களால் சேதப்படுத்தப்படுகிறது .

செலுவி கைகால் அற்ற முண்டமாக அந்த மரத்தின் அடிமரமாக கிடக்கிறாள் .விறகு வெட்டி ஒருவன் அவளை முண்டமாக துக்கி அவள் வீட்டில்  போடுகிறான். வெட்டி எறியப்பட்ட இலைகளையும் கிளைகளையும் சேகரித்து ஓட்டினால் செலுவி மீண்டும் மனித உருவை முழுமையாக அடைவாள்.அவள் கண வன்  அவரை ஒரு கட்டை வண்டியில் ஏறி கிளைகளை தேடி  காட்டிற்குள் செல்கிறான்.

காட்டில் பல மரங்கள் வெட்டப்பட்டு மொட்டையாக இருக்கிறது.இதில் எது செலுவியின் கிளை என்று தெரியாமல் அவள் கணவன் திகைத்து நிற்கிறான்.படம் இங்கு முடிவடைகிறது.

சுமார் 45 நிமிடம் ஓடும் இந்தப்படத்தை பார்த்தவர்கள் தங்கள் உயிர் இருக்கும் வரை ஒரு புல்லைக்கூட கிள்ளி எரியமாட்டார்கள்.கிரீஷ் கர்னாட் இயக்கியுள்ளார்.செலுவியாக சோனாலி குல்கர்னி நடித்துள்ளார்.

தூர்தர்ஷன் தயாரித்த இந்த படத்திற்காக சிறந்த படம்,என்றும் சிறந்த இயக்கம் என்றும் விருதுகளை இந்திய அரசு அளித்தது . கர்நாடக மாநிலத்தின் நாடோடி கதையாகும் இது..

தார்வாரில் வசித்து வந்த க்ரிஷ் கணிதவியலில் பட்டம் கர்நாடகா பல்கலையில் பெற்றவர். உலகத்திலேயே மிகவும் உயர்ந்த scholarship  ஆன RHODES  scholarship பெற்று  ஆக்ஸ்பர்டு பல்கலை சென்றார் . அங்கு தத்துவம், அரசியல், சுற்றுப்புற சூழல் ஆகிய மூன்று உயர்ப்பட்டங்களை பெ.ற்றார்  

. இந்தியா திரும்பியவர் சென்னையில் ஆக்ஸ்பர்ட்டு பிரஸ் நிறுவனத்தில் ஆசிரியராக சேர்ந்தார்> சென்னையில் சரஸ்வதி கணபதி  என்ற  டாக்டரை காதலித்து மணந்தார்.

டாகடர் லோகியாவின் சோஷலிச கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர்.இந்தியாவின் பணமுகத்தனமையைக்காப்பாற்ற நின்றவர் .பாசிச இந்துத்வாவை கடுமையாக எதிர்த்தவர் .

அவருக்கு நம் அஞ்சலிகள். !!!


0 comments: