Wednesday, October 17, 2012

 தோழர்  அச்சுதானந்தனை ஆதரிக்கிறேன்....!!


தோழர் அச்சுதானந்தனை ஆதரிக்கிறேன்.........!!!








1923ம் ஆண்டு பிறந்த அச்சுதானந்தனுக்கு 89 வயதாகிறது. தந்தை தையல் தொழிலாளி. சிறுவயதிலேயே தாயை இழ்ந்துவிட்டார்.11 வயதில் தந்தையும் காலமாகிவிட்டார்.



கயிறு திரிக்கும் ஆலையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்தார். கொஞ்சம் கொஞ்சமாக தொழிற்சங்கப் பணிகளில் கலந்து கொண்டு தொழிற்சங்க தலைவராக மாறினார்.



சிறுவயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டார் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் பல்வேறு பெராட்டங்களில் கலந்து கொண்டு ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் சிறை வாழ்க்கையை அனுபவித்தவர்.1940ல் கம்யூனிஸ்டு கட்சியில் செர்ந்தார்.நான்கு ஆண்டுகளுக்கு மேல் தலமறைவு வாழ்க்கயில் ஏராளமான அனுபவங்களைப் பெற்றவர். .



கேரள அரசியலில் மிகவும் சர்ச்சைகுரிய தலவர்களில் ஒருவர். கட்சியின் அரசியல் தலைமைக்குழுவில் உருப்பினராக இருந்தவர்.



அணு உலையை எதிர்ப்பவர். சமீபத்தில் கூடங்குளம் அணு உலையை எதிர்த்த போரட்டத்திற்கு தன் ஆதரவை தெரிவிக்க கூடங்குளம் நோக்கி பயணமானார்.



மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய தலைமை அதனை ஏற்கவில்லை.சமீபத்தில் கட்சியின் மத்தியகுழு கூடி விவாதித்தது.அச்சுதாஅனந்தன் செய்தது தவறு. அவர் கேரள மார்க்சிஸ்ட் கட்சியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி அவரைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியது.



இரண்டு நாளாக நடந்த கேரள மாநில குழுக் கூட்டத்தில் அச்சுதானந்தன் மன்னிப்பு கேட்டார்.



முன்னாள்முதலமைச்சர். மூத்த தோழர். ஆனாலும் தவறு தவறுதான் என்று கண்டிக்கும் வல்லமை மார்க்சிஸ்ட் கட்சிக்கு இருக்கிறது.



அதன ஏற்று அச்சுதானந்தன் கட்சிக்கு அடிபணிந்தார் !



அவரை அவருடைய மனவளத்தை ஆதரிக்கிறேன். !!!















































0 comments: