Wednesday, November 07, 2012

சின்மயி---மீன்பிடி தொழில்--ராஜன்..........!!!






தமிழக மீனவர்கள் பாடுபற்றி, மிகச்சிறந்த தத்துவ ஞானியும், அரசியல் வித்தகரும், பரந்த அனுபவம் கொண்டவருமான சின்மயி அவர்களிடம் கெட்டுள்ளனர்.அவர் மிகவும் சிறப்பன பதிலை கொடுத்துள்ளார். அது ராஜன் போன்ற சில பதிவர்களுக்கு பிடிக்கவில்லை." யாரோ ஒருவீட்டில், எவரோ தீவைக்க , தங்க மகனன்றோ தண்ணிர் சுமக்கின்றார்" என்று புலவர் செஙகீரன் பாடியது போல் இன்று பதிவுலகம் அதனை சுமக்கிறது.



"ஆமாம்! நீ இருந்தால் என்ன செய்வாய்?" என்று கேட்கலாம். நான் செய்ததைச் சொல்கிறேன்.



தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது பற்றி செய்திகள் வந்த போதே நான் அந்தப் பகுதி நண்பர்களோடு தோடர்பு கோண்டென். பரமகுடி அருகில் வங்கி அதிகாரியாக பணியாற்றும் அவர் கொஞ்சம் சமூகப் பிரஞ்ஞையும் உள்ளாவர்." ஐயா! ரொம்ப சிக்கலானதாச்சே! வெளில தெரிஞ்சது , உள்ள நடக்கிறதுனு பாத்தா கஷ்டம் தான்!" என்று பீடிகையோடு ஆரம்பித்தார்.அவர் சொன்னது------



தமிழக கிழக்கு கட்ற்கரையில் கடல்குதிரை,நண்டு, கடல் அட்டை என்றுதான் உண்டுஇவை தடை செய்யப் பட்டுள்ள வகையில் உள்ளன.. படகை எடுத்துக் கோண்டு நடுக் கடலுக்கு சென்றால் தான் நல்ல மீன் கிடக்கும். ஒருதரம் போய் வரணுமின்னா 50000 ரூ சிலவாகும்.ராட்டு,ஷீலா நு வேணும்னா சிலொன் பகுதிக் போகணும் .போட்ல ஏறுமுன்னயே மீனவருக்கு 500 ரூ வக்கணும். காலைல கிளம்பினா மறுநாள் தான் மதியம் வாக்கில வந்தாகணும். இற்ங்கினாச்சுன்னா 1500 ரூ கொடுக்கணும்.ஒருதரம் போய்ட்டு வந்தா 200000 லட்சம் ரூ மீன் கிடைச்சாதான் வியாபாரிக்குகட்டுபடியாகும்.அப்ப அவன் எங்கன பொய் பிடிப்பான். அங்க போனா நாலஞ்சு லட்சம் கிடைக்கும். சில சமயம் பத்து லட்சம்கிடைக்கும். அப்போ மீனவருக்குபொனஸ் கிடக்கும்.



மீனவர்களுக்கு சர்காரு மாதம் 15 லிட்டர் டீசல் இலவசமா கொடுக்கு.மீன்பிடி தட செய்ய்ப்பட்ட மாதங்களில் நிவாரணத்தொகை கொடுக்கு.ஒருநாளைக்கு ஆயிரத்திலிருந்து ஆயிரத்தைந்நூரு கிடைக்கும்.மாதம் இருபது நாள்தான் வேலை.



அங்க பொனாதான் கட்டும்.நட்டத்தில பொழப்பு நடத்தவாங்கான் வியாபாரி. எதிர் கரைல அடிக்கான் .அதோட தான் இவங்களும் போய் வராங்க. இது சிலோன் அரசாங்கத்துக்கு தெரியும். அது ஒரு சுண்டைக்காய். இந்தியா நினைச்சா தூக்கிப்போட்டு மிதிக்கலாம். ஆனா முடியது. கடல் ஆதிக்கம்,சர்வதேச சட்டம் லொட்டு லொசுக்குனு வரும். முடிஞ்சவரை நீ பாதுகாத்துக உன் கரைய. ரொம்ப போயிராத. அப்புறம் நான் சும்மயிருக்க முடியாது.இது நம்ம அரசு சொல்லுது.



மீன் வியாபாரி, சிலோன்,இந்தியா எல்லாமே ஒரு எழுதப்படாத ஒப்பந்தத்துல வேல பாக்கங்கனு தோணுது.எனக்கு என்ன தோணுதுனா நம்ம ஊரு தலைவர்களுக்கும் அரசல் புரசலா இது தெரியும்.சும்மானாச்சும் கூப்பாடு பொடுதாங்களோ! இருக்கலம்! இல்லமலும் இருக்கலாம்



இது சின்மயிக்கு வள்ளிசா தெரியாது. ரஜனுக்கு தெரியுமா?எனக்கு தெரியாது இவங்க ரெண்டு பெரும் பதிவுலகத்துல சண்டை போட்டாங்க. இதுல பஞ்சாயத்து பண்ண ஏகப்பட்ட ஆளுங்க வாராங்க.ஞாநி உட்பட.!.

1 comments:

”தளிர் சுரேஷ்” said...

புதிய தகவல்கள்! அறிந்து கொண்டேன்! வேறொன்றும் செய்ய இயலாது!