Monday, November 26, 2012

கரும்பு விவசாயியும்,சரத்பவார்,கட்காரி,காங்கிரசும்.......!!!





சர்க்கரை உற்பத்தியில் இந்தியாவிற்கு முக்கியமான பங்கு உண்டு.உத்திர பிரதேசமும்,மகாராஷ்ட்றா மாநிலமும் இதில் முன்ணணியில் உள்ளான. குறிப்பாக மகாராஷ்ட்றாவின் மேற்கு மாவட்டங்களில் சர்க்கரை ஆலைகள் அதிகம்.இவை கரும்பு விவசாயிகளை உறுப்பினராகக்கொண்டகூட்டுற்வு ஆலைகள். அதேசமயம் இன்று அந்த ஆலைகள் சரத்பவர்கட்சி,பா.ஜ.க,மற்றும் காங்கிரஸ் தலைவர்களீன் சட்டை பையில் உள்ளன.



சரத் பவரின் தோகுதி பாராமதி.இந்த தொகுதியில்மொத்தம் 7 சர்க்கரைஆலகள் ,உள்ளன அவை அத்துணையும் அவருடையமற்றும் நெருங்கிய உற்வினர்களின் ஆதிக்கத்திலுள்ளன ..அவர்கட்சியைச்சார்ந்த ஜெயந்த் படெல்.மாநில அமைச்சர்.அவருக்குச்சொந்தமாக 3ஆலைகலுள்ளன.ஆர்.ஆர்.படீல் அமைச்சராக உள்ளார் (பவார் காங்க) அவருக்கும் ஆலகள் உள்ளண..பா.ஜ.க வின் புகழப்பரப்பிவரும் கட்காரிக்கு " பூர்த்தி. " குழுமம் உள்ளது. இவர்கள் சர்க்கரை உற்பத்தியில் ஈடுபடுவதில்லை மாறாக வடிசாராய உற்பத்தியில்சக்கைபோடு போடு கிறார்கள்.



கரும்பு உற்பத்தி செய்யும் விவசாயிகளின்மேல் இவர்களுக்குபாசம் அதிகம்.அரசு நிற்ணயித்த விலை டன்னுக்கு 2300 ரூ.ஆனால் இவர்கள் 3000ரூ கொடுக்கிறர்கள்.வெட்டு கூலி,,பாரவண்டி கூலிகொடுக்கமாட்டார்கள். கரும்பின் ஈரத்தன்மைக்கு ஏற்ப விலை நிர்ணாயம்செய்கிறார்கள்.



ஆலை உற்பத்திசெய்யும் சர்கரையை அரசு நிற்ணயித்த விலையை விட குறைத்து விற்கிறார்கள். வாங்குவது இவர்களின் ஏஜண்டுகள் தான்.இதன் மூலம் கூட்டுறவு ஆலைகள் நட்டத்தில் ஓடும்படி செய்கிறார்கள். அதனல் கரும்பு விவசாயிகளுக்கு பணம் கோடுக்காமல் ஏமாற்றுகிறார்கள். அரசு அதற்கு அவர்களுக்கு உதவி செய்கிறது.



சர்க்கரை ஆலைகள் நட்டப்படுவதாக கணக்குகாட்டப்படுகிறது.அதெசமயம்,அரவையிலிருந்து கிடக்கும், உப பொருட்களான வடிசாராயம்,,உரம் ,மற்றவைகளுக்கும் விவசாயிகளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லாமல்பார்த்துக்கொள்கிறர்கள். இவர்கள் "ஷா வாலாஸ்" .போன்ற கம்பெனி களொடு சேர்ந்து மது உற்பத்தியில் ஈடுபட்டு அடிக்கும் கொள்ளை கணக்கில்வராது.



மராட்டிய மாநிலவிவசாயிகள் இந்த உபபொருட்கள் உற்பத்தியில் தங்களுக்கு பங்கு வேண்டும் எப்ர் கேட்கிறார்கள். இதற்காக பொடப்பட்ட சி.ரங்கராஜன் கமிட்டி இந்த உப பொருள் உற்பத்தியில் விசாயிகளுக்குன் 70 சதம் பங்கு கொடுக்க வேண்டும் என்று அறிகைக கொடுத்துள்ளது. அது தற்போது நம் "தலப்பாகட்டு ".பிரதமர் மேசையில்தூங்குகிறது.



மராட்டிய மாநிலகரும்பு விவசாயிகள் போராடினார்கள். மாநில அரசு துப்பாக்கி சூடு நடத்தியது. ஒரு விவசாயி இறந்தார். அன்று தான் சிவ சேனை தலைவர் தியாகி பாலாசாகிப் மறைந்தார்.



அந்த சொகம் தாங்காமல் பத்திரிகைகள் அதனை பிரசுரிக்க மறந்து விட்டன.

0 comments: