Saturday, December 01, 2012






Red Salute to Com.

P.G. ....!

 

 

கேரள

முற்போக்கு இலக்கிய செயல்பாட்டாளரும், மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஓருவரும், தேசாபிமானை பத்திரிகயின் ஆசிரியராகப் பணியாற்றியவருமான பி. கோவிந்தபீள்ளை மரணமடைந்தார்.முற்போக்கு இலக்கியத்திற்கு அவருடைய மறைவு மிகப்பெரிய இழப்பாகும்.குறிப்பாக தமிழ்நாடு,முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தோடு அவருக்கு இருந்த தோடர்பும், ஆதரவும் முக்கியமானதகும். சங்கம் ஆரம்பிக்கும் காலத்திலேயே அவருடைய ஆளோசனையைப் பெற்றோம்.

1975

ம் ஆண்டு அவசர நிலைக்காலத்தில் த.மு.எ.ச துவங்கப்பட்டது.புதிதாக வந்த இளம் எழுத்தாLaர்கLai ஒருமுகப்படுத்தி அவர்களின் இலக்கிய ஞானத்தை விகசிக்க வைக்க ஒரு பட்டறை நடத்த சங்கம் விரும்பியது. அந்த பட்டறையை நடத்த பி. கோவிந்தபிள்ளைய அழைக்க முடிவாகியது. பட்டறையை எங்கு நடத்துவது? அவசரநிலை காலத்தில் எப்படி,யார் நடத்துவது என்ற கேள்விவந்த போது கு.சின்னப்பபாரதி.நாமக்கல் வக்கீல் சுப்பிரமணியம்,பெரியவர் பழனிச்சாமி ஆகியொர் நாமக்கல்லில் நடத்த முன்வந்தனர்.ரகசியமாக நடத்தபட்ட எழுத்தாளர்கள் பட்டறை.தங்கள் வீடுகளில் கூட எங்கு செல்கிறொம் என்பதை சொல்லவேண்டாம் என்று வரும் எழுத்தாளர்களிடம் சங்கம் கேட்டுக் கொண்டது.(பாதுகாபு கருதி.)

தமிழ்

எழுத்தாளர்கள் கிடடதட்ட 118 பேர்ர்வந்திருந்தனர். அங்கு தான் முதன் முதலாக பொதியவேற்பன், அறிவுறுவோன்,(தஞ்சை)பச்சையப்பன் (சென்னை) பெராசிரியர் செழியன்,ம.ந.ராமசாமி(திச்சி) கவிஞர் செம்மலர் செல்வன்( துறையூர்) ஆகியோர் வந்திருந்தனர்.கேரளத்திலிருந்து ஸ்ரீதரன்,குரூப், ஆந்திராவிலிருந்து சாந்தா ராவ் வந்திருந்தனர். பங்களூரிலிருந்து D.R. நாகராஜ்,சேக்கிழார், மாணவராயிருந்த சித்தலிங்கய்யா, சுப்பிரமணியம் ஆகியொர் வந்திருந்தனர். கோவிந்தபிள்ளக்கு

பெருமைதாங்கவில்லை. அவருக்கு மொழிப்யர்ப்பு வசதிக்காக அவர் பின்னல் என்னை அமரவைத்திருந்தனர்

இந்த

பட்டறையில் தான் சித்தலிங்கையா. தன்னுடைய புகழ் பெற்ற "நன்ன ஜனங்களு" என்ற பாடலை பாடி முதன்முதலாக அரங்கேறினார்.

கண்கள்

கசிந்த P.G. கண்ணடியைக் கழற்றி முகத்தைத் துடைத்துக் கொண்டார்.

"Com ! are you alright?"

நான் கேட்டேன்.

"Yes ! Yes !"

"a bit emotional ?"

"com ! progressive writers from kannada,thelugu,thamizh,malayaalam writers have assembed.! This is the moment faor progressive litterary movement to rejoice ! A literary activist like Me --Iam not shedding tears- it is ANANDHA PASHPAM."

 

RED SALUTE COM.P.G.

2 comments:

S.Raman, Vellore said...

அருமையான பகிர்வு

-தோழன் மபா, தமிழன் வீதி said...

நல்லதொரு பகிர்வு காம்ரேட்!