Tuesday, May 21, 2013

கிரிகெட் சூதட்டமா .......!!!

ஒரு பயல ஒண்ணும் செய்ய  முடியாது ....!!!


எங்க ஊருல இருந்து மாமா வந்திருந்தாரு! தேக்க   "திநேலி  " தான் சொந்த ஊரு! தாசில்தாரா இருந்து ரிடையர் ஆனவரு! ஒரு ஆள  மதிக்க மாட்டாரு ! ஒரு ஆள்ட பேசினா நாலு பெர்கூட சண்டைவரும்! 

"என்ன வெக்கை டே உன்கூர்ல? "
"இன்னக்கி  47.5 மாமா!"
மாமாவை இன்னிக்கு ராத்திரி பங்களுருக்கு விமானத்துல அனுப்பணம்! அங்கேருந்து திருவனந்தபுரம் போய் அம்பை போய்டுவாரு!

"ஏம்பா! எ.சி ரூம்புலயெ இந்தப்பாடா இருக்கே! சனங்க என்ன பாடுபடும் " என்றார் மாமா! "ஒருசவுகரியம் டே இங்க! கரண்ட் கட்டு இல்ல! எங்கவூருன  எப்ப சொல்லமுடியாது ! வள்ளிசா கரண்டுஇல்லனுதான் வச்சுக்கணும் "

"நீரு விரவனல்லுர்ல சிம்னி விளக்குல தானவே படிச்சேரூ "

"சின்னபுள்ளய இருக்கும் பொது தெருவுல "டங் டங் "நு ஆட்டிகிட்டுபோன! இப்ப எனத்துக்குல கோமணம் கட்டுத!"

மேல பேசினா அசிங்கமசிங்கமா  போசுவாரு !

"நாங்க 46ம் ஆண்டுல இங்க இருந்த போது கரண்டு கிடையாது ! எப்படீருந்தோம்னே தெரியல!"

"இப்பவும் என்ன கிழிச்சிப் புட்டணுவ! சைக்கில் ரிக்சா இழுக்கன்! செருப்பு தைக்காண்! ஜீஸ் விக்கான் !அவனுக்கு மட்டும் வெக்கைஇல்லயா !"
மாமா எழுந்து குளிர்ந்த தண்ணிரைகுடித்தார் !" பேப்பர்ல என்னடே போட்டுருக்கான் ?"
"ஸ்ரீசாந்தை  கைது பண்ணியிருக்காங்க ?

"அவன் ஒரு அகராதி புடிச்ச பயல்லா"

"சூதாட்டம் ஆடியிருக்கான்!?"

"ஷாருக்கான் என்ன ஆட்டமாடுதான்! சீனிவாசன் என்ன ஆட்டம் ஆடுதான் !" மாமா சூடானார்!
"அம்ம்புட்டு பயலும் திருட்டு பயலுக ! ஒரே அமுக்க அமுக்கிடுவான் பாரு! "

"யாரை? ஸ்ரீசாந்தையா!"

"ம - - சாந்தை ! தேர்தல்ல தோத்துப் போனான் ! அறிவிச்சாங்க! அப்புறம் ஜெயிச்சாநாக ! மந்திரி  ஆயிடான்னாக !"

"மாமா இது அப்படி இல்லை மாமா!கையும் களவுமா பிடிச்சு இருக்காங்க !"

"ஜாடேஜா  என்னால ஆச்சு ?

"அது...!"நான் இழுத்தேன்

"அசாருதீன்  என்ன ஆச்சு! காங்கிரஸ்ல சேர்ந்தான் !  எம்பிஆனான்! " 

"அப்பம்"

"ஒரு பயல ஒண்ணும் பண்ணமுடியாது!" மாமா முடிவா சொன்னார் !!!








4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல உரையாடல்...

சாமீ...!

”தளிர் சுரேஷ்” said...

உண்மைதான் இதெல்லாம் ஐபிஎல்லை பிரபலபடுத்த நடக்கும் நாடகமோ என்று கூடத்தோன்றுகிறது!

கரந்தை ஜெயக்குமார் said...

மொத்தத்தில் ஏமாறுகிறவர்கள் என்னவோ மக்கள்தான்.

அப்பாதுரை said...

இப்படி ஒரு வழி இருக்கிறதா? அசருத்தீன் காங்கிரசுக்குப் பணம் கொடுத்தாரா வாங்கினாரா?