Friday, September 13, 2013

மோகன் பகவத் என்ற  கால்நடை  மருத்துவர்....!!! 

ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்கத்தின் தற்போதைய தலைவர் மோகன் பகவத் !
இவர் ஆரம்ப காலத்தில் அகோலாவில்  உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் படித்தார் !    நிறுத்திவிட்டு மக்கள் சேவை செய்ய .ஆர் .எஸ். எஸ் இயக்கத்தில் சேர்ந்தார் !

இன்று இந்தியாவின் சகல பிணிகளையும் போக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் ! அடுத்து மிகவும் உத்தமமான ஒருவரை இந்தியாவின் பிரதமராக்குவது என்று தீர்மானமாகச் செயல்பட்டு வருகிறார் ! 

அவர் சொல்லும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்பவர் யாரானாலும் அவர்களை பிரதமராக்குவேன்  என்று அறிவித்துள்ளார் ! அவருடைய நான்கு நிபந்தனைகள்  என்ன?

1. பிரதமரானதும் பிரும்மாண்டமான   அளவில் அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்ட வேண்டும் !

2.முஸ்லிம்,கிறிஸ்துவன், இந்து என்று பாரபட்சமில்லாமல் சட்ட திருத்தமாக பொது சிவில் சட்டம்கொண்டுவரவேண்டும் .

3. மத்திய பிரதேசத்து தேஷ்முக் கேரளத்தில் வியாபாரம் செய்யலாம் ! அங்கு சம்பாதித்து கேரளத்தில் வீடு கட்டிக் கொள்ளலாம் ! அதே தேஷ்முக் காஷ் மிர் சென்றால் அங்கு சொந்தமாக வீடு வாங்க முடியாது ! இதற்கு காரணம் காஷ்மீர் மக்களூக்கு 1947ல்   கொடுத்த  வாக்குறுதி ! அரசு சட்டத்தில் உள்ள அந்த 370 சரத்தை நீக்கி விட !வேண்டும் 

4. பகத் கால்நடை மருத்துவர் என்று சொன்னேன் ! அவருக்கு பசுக்கள் என்றால்  கொள்ளைப் பிரியம் !ஆகவே பசு வதை தடை   சட்டத்தை  கொண்டு வரவேண்டும் !

இதனை எற்றுக் கொள்பவர்களை பிரதமராக்குவேன்  என்றார் !

நரேந்திர மூதி சரி  என்கிறார் ! இன்று மாலை அவரை பிரதமர் வேட்பா:ளராக அறிவிப்பார் என்று சொல்கிறார்கள் !

பா.ஜ.க வில் பெரிய வக்கீல்கள்,டாக்டர்கள், பேராசிரியர்கள், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் ஆகியோர் இருக்கிறார்கள் ! 

"நீ யாருய்யா ? நீ ஏன் வர ! முதல்ல ஒங்க ஆர்.எஸ் .எஸ் ஆபிஸ்ல ஒரு ராமர் படத்தை மாட்டு ! பொறவு கோவிலுக்கு வா ? நு   சொல்ல அவங்களுக்கு தைரியமில்ல !   

அத்வானி கோயில் கட்ட தயார் ! எல்லா நிபந்தனையும் ஏற்க தயார் ! நரேந்திர மூதி வந்தா பா .ஜ.க வையும் அழிச்சுடுவரு!.

இந்தியாவையும் அழிச்சுடுவாரூ !" நு நினைக்கிறார் ! 

அத்வானிக்கு தவறான வழி காட்டப்படுகிறது ! அவரை சுத்தி பலர் இருக்காங்க ! அவங்க சொல்றத கேக்காரு ங்காங்க !

அதுலயும் குல்கர்னி நு ஒத்தரு இருக்காறாம் ! அவரு மத்திய பிரதேசத்துக்காரர்! ஆனாலும் முப்பது வருசத்துக்கு முன்னால மார்க்சிஸ்கட்சில இருந்தாராம் !












0 comments: