Thursday, February 13, 2014

அந்த காமிரா கலைஞனின் நினைவாக ........

சென்னையில் காமராஜர் அரங்கில் ரேவதி கிருஷ்ணன் வாசி த்துக்  கொண்டிருக்கிறார் ! எம். எஸ்.வி ,இளையராஜா , ஆகியோரின் மெலடிகளை பொழிந்து கொண்டிருக்கிறார் ! கண்களை முடிக் கொண்டு கேட்டால் உயிரும் சதையுமாக  ஒருவர் பாடிக் கொண்துடிருப்பது போல் தோன்றும் !

ஜேசுதாசின் "செந்தாழம் பூவில் " என்ற படலை வாசித்தார் ! அந்த "ஹம்மிங் " வாசித்த பொது அசுர சாகித்யம் என்று கத்தினேன் !

என் அருகி ல் இருந்தவர் "நான் நினைத்தேன் ! நீங்கள் வெளிப்படுத்தி விட்டிர்கள் " என்றார்! ! திரும்பிப்பார்த்தென் ! பாலு மகேந்திரா !!!

"சார்!  "  என்று ஆச்சரியத்தோடு கூறினேன் ! தளர்ந்த உருவம் ! அருகில் இருந்தவர் ஒரு டம்ளரை நிட்டினார் ! அதனை வாங்கிக் கொண்டே " மருத்துவ மனையில் இருந்தன் !அசதி   அதிகம் ! ரிலாக்ஸ் ஆக  கச்சேரிக்கு வந்தேன் !"என்றார்
இடையிடையே  பேசிக்கொண்டோம் ! "கலையை தன் வசப்படுத்திக் கொள்ளும்  கலை ஞர்களை பிடிக்கும் ! ரேவதி அப்படிப்பட்டவர் " என்றார்
"அப்படியானால் குன்னக்குடி ?"

"மகா கலைஞனாச்சே "
"அவருடைய காவேரி  ஆல்பம்  கெட்டிருக்கிறிர்களா? "
வாஞசையோடு என்கைகளை  அழுத்தினார் ! தலையை ஆட்டினார் !
 ஆடு தாண்டும் காவிரியிலிருந்து ,அகண்ட காவிரி, கல்லணை, சங்கமிக்குமிடம் வரை தன்  வில் முலம்   காட்சிப் படுத்துவார் குன்னக்குடி !

---------------------------------------------------------------------------------------------

சூப்பர் தனிக்கைஎதிர்த்து தா.மு.,எ.ச. போராட்டம் நடத்தியது ! திரைப்பட காமிரா ஒன்றை ஆக்டோபஸ் தன பல கரங்களை  நீட்டி அமுக்குவது போன்ற  படம் போட்டு இருந்தோம் ! கலைவாணர்  சிலையிலிருந்து ஊர்வலம் !
கமலா ஹாசன் தப்படித்து ஆரம்பித்து வைத்தார் ! அந்தகூட்டத்தில் உணர்ச்சி மிக்க உரையாற்றினார் பாலு ! ' என்வாழ்க்கையில் நான் உயிராகக் கருதுவது திரைப்பட காமிராவை ! அதனை ஆக்டோபஸ் கவ்வ கொடுக்க மாட்டேன் " என்று உணர்ச்சி பொங்க பேசினார் !

------------------------------------------------------------------------------------------------------

முள்ளும் மலரும் படத்தில் ஒரு காட்சி !  ஷோபா துரத்தில் தெரிவார் ! மேலே வானவில் தோன்ற பார்வையாளர்கள் கைதட்டி வரவெற்பார்கள் ! பிரமித்து கைதட்டியவர்களில் நானும் ஒருவன் !.
பின் நாளில் அது slide shot என்று தெரிந்து கொண்டேன் !
"பாலுசார் ! நீங்கள் இப்படிச் செய்யலாமா ?" என்று கேட்டேன் !
"அந்த பாராட்டை நான் ஏற்றுக் கொள்ளவில்லையே !"
"இருந்தாலும் "
"உங்களுக்கு எப்படி தெரியும் ?
"திரைப்பட ரசனை வகுப்பின் முலம் "
"யார் யார் வந்தார்கள் "
"dr சியாமளா வனரசே ,கவுல்,pk நாயர் "
"அப்புறம் ?"
"சதீஷ் பகதூர் !"
"என்னைப் பற்றி சொன்னாரா ? "
"சொன்னார் "
"என்ன சொன்னார் ?"
"he is a creative genius என்றார் !"
"அவ்வளவுதானா ?"
"மேலும் சொன்னார் !"
"என்ன சொன்னார் ?"
"சொல்லமாட்டேன் "
"என்ன சொல்லியிருப்பார் என்று தெரியும் !"
"பின் ஏன் கேட்கிறிர்கள் ?"

-----------------------------------------------------------------------------------------------------

பாலு சார் தா,மு,எ,ச,வின் மாநிலக்குழுவில் சிறப்பு அழைப்பாளராக
பணியாற்றினார் ! பின்னளில் தொடர்பு விட்டுப்போனது !

அவரிடம் காரணம் கேட்டேன் ! " தா.மு.எ .ச திரைப்பட விருது அளிக்கிறது! அது (விருது)பற்றி எனக்கு அழைப்போ .தெரிவிப்பதோ கிடையாது ! எதற்கு embrasment  என்று ஒதுங்கிவிட்டேன் "என்றார் !
---------------​​---------------------------------------------------------------------------------------------பாலு மகேந்திரா காமிரா கவிஞர் ! எழுத்தாளர் ! இயக்குனர் ! இசைஞர் !

எல்லாவற்றுக்கும் மேலாக திரை உலகின் அறிவார்ந்த பெரியோரில் ஒருவர் !

Red salute ! comrade !!!
































பிடிக்கும் ?

8 comments:

'பரிவை' சே.குமார் said...

மகா கலைஞனின் ஆத்மா சாந்தி அடையட்டும்..

”தளிர் சுரேஷ்” said...

சிறந்த கலைஞர்! ஆழ்ந்த இரங்கல்கள்!

இராய செல்லப்பா said...

பாலு மகேந்திரா உண்மையிலேயே அருமையான திறமையாளர். ஆனால் 26 படங்கள் மட்டுமே பண்ண முடிந்தது தமிழ் சினிமாவின் துரதிர்ஷ்டமே. அன்னாரின் ஆன்மா சாந்தி அடைவதாக.

அழகிய நாட்கள் said...

// கலைவாணர் சிலையிலிருந்து ஊர்வலம் !
கமலா ஹாசன் தப்படித்து ஆரம்பித்து வைத்தார் ! அந்தகூட்டத்தில் உணர்ச்சி மிக்க உரையாற்றினார் பாலு// த மு எ ச மா நில மா நாடு அது 1993 ஆம் ஆண்டு. அந்த ஊர்வலத்தில் நான் கலந்து கொண்டது நிழலாடுகிறது. கிருஷ்ண கான சபாவில் நடந்த அந்த மா நாட்டில் கோமல், சேர்ந்திசை ராஜேஸ்வரி, பாலு மகேந்திரா,ஏ கே வீராசாமி வாத்தியார் ராமன் வங்கி ஊழியர்களின் beat இசைக்குழு என ஒரு அமுது அது...
!

கரந்தை ஜெயக்குமார் said...

சிறந்த கலைஞருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்

கரந்தை ஜெயக்குமார் said...

சிறந்த கலைஞருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்

சிவகுமாரன் said...

அவர் இறந்த செய்தி கேட்டதும் என்னை அறியாமல் கண்ணீர் பெருகியது. .

சிவகுமாரன் said...
This comment has been removed by the author.