Thursday, March 20, 2014

ஹெண்டர்சன் அறிக்கையும் -

"இந்தியாவின் சீன யுத்தமும் "


இந்திய சீன எல்லைத்தாவா 1962ம் ஆண்டு ராணுவ மோதலில் முடிந்தது ! இலங்கை அரசு கூறிய யோசனையை ஏற்றுக்கொண்டு சீன ராணுவம்  பின் வாங்கி பேச்சுவார்த்தை துவங்கியது !

அப்போது ராணுவ நடவடிக்கை பற்றி ஆராய இந்திய அரசு லெப்.ஜெனரல் ஹெண்டர்சன் புருக்ஸ் -பிரிகேடியர் பர்வீந்தர் சிங் பகத் என்ற இரு ராணுவ அதிகாரிகளை கமிஷணாக நியமித்து விசாரணை நடத்தியது ! 

இந்த கமிஷன் அறிக்கை நாடாளுமனரத்தில்வைக்கப்படவில்லை ! ராணுவ அதிகாரிகள் ராணுவ நடவடிக்கையை ஆராய்வதோடு நிற்காமல் ,ராணுவத்தலைமையை ஆராய்கிறேன் என்ற பெயரில் இந்திய அரசியல் தலைமையை தன அதிகார வரம்பை மீரிவிமரிசனம்செய்திருந்தது !

அப்போது பாதுகாப்பு ஆமிச்சராக இருந்த ஒய்.பி சவான் அறிக்கையை நாடாளுமனறத்தில் வைக்கமுடியாது என்று அறிவித்து விட்டார் !

காங்கிரஸ் கட்சிக்குள்ளும், வெளியிலும் இருந்த வலது சாரிகள் அவ்வப்போது ஹெண்டர்சன் அறிக்கை, நேரு, சீன ஆக்கிரமிப்பு என்று கோஷமிடுவது வழக்கம் ! 

அதுவும் தேர்தல் வந்தால் நரி ஊளையிடுவது போல ஊளையிடுவார்கள் !

நேய்வலி மாக்ஸ்வல் என்ற பத்திரிகையாளர் 1971ம் ஆண்டு ஒருபுத்தகம் எழுதி வெளியிட்டார் ! "இந்தியாவின்  சீன யுத்தம் " என்பது பெயர் ! அதில் ஹெண்டர்சன் அறிக்கையின் சாராம்சம்  உள்ளது !

(80ம் ஆண்டுகளில் எல்.ஐ.சி.தோழர் தேவ பிரகாஷ்  இந்த புத்தகத்தை எனக்கு படிக்க கொடுத்தார் ) 
 ,
இந்திய சீன எல்லைதகராறு பற்றிய வரலாற்று ரீதியிலான ஆவணங்களோடு எழுதப்பட்ட நூல்  !
 
மாக்ஸ்வல் ஒரு மாவோயிஸ்ட் ! அவர் சீனாவுக்கு ஆதரவாக எழுதியுள்ளார் என்று இந்திய வலது சாரிகள் அந்த புத்தகத்தில் உள்ளவற்றைனிராகரித்து விட்டனர் !

அந்த புத்தகம் பற்றியோஅறிக்கைபற்றியொநான் எதுவும்கூறப்போவதில்லை 
 
வரலாற்று ரீதியாக உள்ள நிலைமைபற்றி மட்டும் நினைவு படுத்த விரும்புகிறேன் !
 
ஆங்கிலேயரின் செல்வாக்குக்கு உட்பட்டு இந்தியா ,சீனா பர்மா ,இலங்கை ஆகிய நடுகள்  இருந்த காலம் உண்டு 

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் ஒரு எல்லையை ஆங்கிலேயர்கள்போட்டனர் ! இதனை ஒரு "ஓவர்சியர் "  போட்டார் ! அவர் பெயர்"மக் மோகன் " ! நவீன ராணுவ உடையிலேயே சென்று வரமுடியாது நிலையில் மக்மோகன் அங்கு சென்று சர்வே செய்து எல்லையை வரைந்தாரா ? இந்த கேள்விக்கு பதில்  கிடையாது !

இந்த எல்லைக் கோடு சீனாவின் திபெத் பகுதிக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ளது !

பிரிட்டிஷ்- அமெரிக்க ஆதரவு சியான்-கே -ஷேக் இந்த எல்லையை ஏற்கவில்லை !

சீனாவிலிருந்து ஓடிவந்து ஐம்பது ஆண்டுகளாக நம் வரிப்பணத்தில் கஞசி குடித்து வரும் தலாய் லாமா ஏற்கவில்லை !

" மக்மோகன் எல்லையை அடிப்படையாக வைத்து அதிலிருந்து 12 மைல் வடக்கேயும் ,தெற்கேயும் துருப்புகளை நிறுத்துவோம் !  பின்னர் பேச்சு வார்த்தை நடத்துவோம் ' என்ற இலங்கையின் யோசனையை சீனா எற்றுக் கொண்டு உள்ளது !

1962ம் ஆண்டு இந்திய சீன தாவாவின் பொது தான் க்யூபாவில் அமெரிக்க மூற்றுகை  இட்டது ! பனிப்போரின் உச்சமாக   அணுயுத்த  அபாயம் வெடித்தது 

உலகசமாதான் இயக்கத்தின் தலைவராக இருந்த பெற்றண்ட் ரஸ்ஸல் இந்தியா -சீனா ,அமெரிக்க-ரஷ்யா ஆகியோரோடு பேசி சமாதானத்தை நிலை நாட்டினார் !

 அப்போது அவர் எழுதிய புத்தகம்தான் UN  ARMED  VICTORY என்பதாகும் ! அதில் இந்திய சீன சிக்கலும் விவாதிக்கப்பட்டிருக்கும் !












2 comments:

சிவகுமாரன் said...

அரிய செய்திகள்.
நன்ற் அய்யா

சிவகுமாரன் said...
This comment has been removed by the author.