Sunday, March 23, 2014

 ஒரு கூடை வெங்காயம்+ செருப்படி =தேர்தல் 


 ஒரு ஊரில் ஒரு    ராஜா இருந்தார் ! ஒரு குற்றவாளிக்கு தண்டனை கொடுத்தார் !

அவன் ஒரு கூடை நிறைய உள்ள வெங்காயத்தை திங்க வேண்டும் ! நிறுத்தாமல் திங்க வேண்டும் !

அல்லது செருப்படி பட வேண்டும் ! நிறுத்தாமல் அடிப்பார்கள் !

அவன் யோசித்தான் ! செருப்படி என்றால் வலிக்கும் ! நாம் தான் தினம் வெங்காயம் சாப்பிட்டுகிறோமே ! அதனால் ராஜாவிடம் வேங்காயம் திங்க ஒப்புக்கொண்டான் !

வெங்காயம் வந்தது ! அவனும் திங்க ஆரம்பித்தான் ! பத்து வெங்காயத்தைதின்றான் ! கண்களில் நீர் வர ஆரம்பித்து ! வயிறும் கலங்க ஆரம்பித்தது ! இனி வேங்கையம் தின்றால் செத்து விடுவோம் என்று பயந்தான் ! "ராஜா! நான் செருப்படி பட்டுக் கொள்கிறேன் !" என்று கூறி தண்டனையை மாற்றிக் கொண்டான் !

செருப்படி ஆரம்பமாயிற்று ! அடி விழ விழ அவனுக்கு வலி அதிகமாயிற்று ! இனிமேலும் அடிவிழுந்தால் செத்துவிடுவோம் என்று புரிந்தது ! "ராஜா ! நான் வெங்காயமே தின்கிறேன் !" என்று தண்டனையை மாற்றிக்கொண்டான் !

வெங்காயத்தை திங்க ஆரம்பித்தான் ! மறுபடியும் கண்களில் நீர் ! வயுற்றுப் பொருமல் ! "ராஜா ! நான் செருப்படியே வாங்கிக் கொள்கிறேன் ! " என்று கூறினான் !

இதே போல் தான் நாம் ஒவொரு ஐந்து வருடமும் மாறி மாறி செரூப்ப்டியோ 
வெங்காயமோ வாங்கிக் கொண்டிருக்கிறோம் !, 


(  "சத்யமேவ ஜெயதே " (23-3.14)  நிகழ்ச்சியில்  கேட்டது )





3 comments:

”தளிர் சுரேஷ்” said...

உண்மை சொன்னது! உண்மை ஜெயிக்கும் நிகழ்ச்சி! பகிர்வுக்கு நன்றி!

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மை ஐயா உண்மை

இராய செல்லப்பா said...

அனுபவஸ்தரான தாங்கள் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைச் சொல்லக் கூடாதா? செருப்பால் அடிக்காமலும், வெங்காயத்தைத் தின்னச் சொல்லாமலும் சில தேர்தல்கள் நடந்து முடிவதும் உண்டே!