Sunday, May 25, 2014

அகதிகள் அல்ல ....!!!

  நாடற்றவர்கள் .....!!!


அப்போது எனக்கு 12  அல்லது 13 வயது இருக்கும் ! "பாப்பாகுடி ":என்பது எங்கள் கிராமத்தின்பெயர் !நெல்லை மாவட்டம்  முக்குடலிலிருந்து  "முக்கா" மைலி ருக்கும் !

என் உறவினர் அங்கு sub postmaster ஆக இருந்தார் ! ஒரு போஸ்ட்மன் பிரமநாயகம் ! ஒரு "ரன்னர் " ஆண்டி உண்டு ! இருவருக்கும் 60 -70ரூ   சம்பளம் !
போஸ்ட் மாஸ்டருக்கு 10ரூ    honourorium !

கீழப்பாப்பகுடி,கவாலி வாரை , முக்கூடல்வடக்கு  என்று குக்கிராமனகாளுக்கு மணியார்டர் வரும்  !  மாதம் 200க்கும்மெற்பட்டு வரும் ! அந்த மக்களில் பெரும்பகுதியினர் தாழ்த்தப்பட்டவர்கள் ! சிலர் வெதக்காரர்கலானவர்கள் !

பகலில் வயல் வேலைகளுக்கு சென்று விடுவதால் மாலை 6 மணிக்கு மேல் போஸ்ட் ஆபிஸ் வந்து காத்திருந்து பணம் வாங்கிச் செல்வார்கள் ! 

எல்லமே "ஸ்லான் " லிருந்து வந்த மணிஆர்டர்கள் ! 20 ரூ அல்லது 30 ரூ !  இதில் செட்டியார் பலசரக்கு கடையில் உப்பு,புளி,வத்தல் என்று வாங்குவார்கள் ! ஒரு பாட்டில்  மண்ணெண்ணையும் வாங்கிக் கொளவார்கள் !

"ஸ்லான்" தேயிலைத்தொட்ட்த்தில் வேல   பார்க்கும் ஆண்கள் அனுப்பும் பணம்  அது!  

இது தவிர பாவூர்,கயத்தாறு, கடலாடி,அருப்புகோட்டை,புதுகோட்டை, தஞ்சை என்று பிழைப்பு நாடி "ஸ்லான் "சென்றவர்களும் உண்டு !

"ஸ்லான்" சுதந்திரம் அடைந்ததும் இவர்களை வெளியேற்ற வெண்டும் என்று குரல் எழுப்பப்பட்டது ! 

இவர்கள் இந்திய வம்சா வழியினர் ! ஆகவே இந்தியா இவர்களை அழைத்துக்கொள்ள வேண்டு என்றனர் !

இவர்கள் நூறு , இருநுறு ஆண்டுகளுக்கு முன்பே பிரிட்டிஷ் காரர்களால் கொண்டு செல்லப்பட்டவர்கள் ! இவர்களுக்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை ! என்று இந்திய அரசு கூறிவிட்டது !

இந்த தோட்டத் தொழிலாளர்களின் சந்ததிகள்" ஸ்லானி"ல்  அகதிகளாக இல்லை இல்லை நாடற்றவர்களாக எந்த  உரிமையும் இல்லாமல் !இருக்கிறார்கள் 

ஈழத்தமிழர்களும், நமது தேசீய குஞ்சுகளும் வாயத்திறப்பதில்லை !

"வேளி  நாட்டில் இருக்கும் "இந்து" கள் இந்தியாவிற்கு வரலாம் என்று புதிய பிரதமர் கூறியுள்ளதாக தெரிகிறது !

இலங்கையில் இருக்கும் தோட்டத்தொழிலாளர்கள் தலித்துகள் !!

அவர்களை இந்துக்களாக கணக்கிலெடுப்பாரா "மோடி'!!!





3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அவசியம் அவர்களையும் இந்தியாவிற்கு வர அனுமதிக்க வேண்டும் ஐயா

Kasthuri Rengan said...

அவர்கள் இந்தியக் குடிமக்களே
நாம் அவர்களுக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்..
http://www.malartharu.org/2014/05/100results-sslc.html

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

மனிதன் என்பவன்