Saturday, June 14, 2014

"செம்மொழி "


செம்மொழி   பற்றிய இடுகையின் போது புகைப்படம் போட முடியவில்லை ! நான் ஒரு "கம்ப்யூட்டர் மூடன்  " !  இன்று என் மின் அஞ்சலில் ஒரு படம் வந்துள்ளது ! எப்படி வந்தது என்பது தெரியவில்லை ! "அன்றாய்டு "  கை பேசியிலிருந்து வந்ததாக அதுவே சொல்கிறது !  ஒன்றும் புரியவும் இல்லை !

புது டெல்லியில்  "ஜந்தார் மந்தார் " லிருந்து ஊர்வலம் நாடாளுமன்றம் நோக்கி புறப்பட்டது ! சிறிது தூரம் சென்றதும்  ஊர்வலத்தை காவலர்கள் தடுத்தனர் ! அந்த இடத்திலேயே அமர்ந்து  மக்களிடையே பேசினோம் ! என்னை வடமாநில மக்களுக்கு புரிவதற்காக ஆங்கிலத்தில்பேஅச்  சொன்னர்கள் !

நான் பேசிக்கொண்டிருக்கிறேன் ! எனக்கு இடது புறம் மேலாண்மை பொன்னுச்சாமி நிற்கிறார் !

வலது புறம் மத்திய குழு உறுப்பினர் தோழர் கி.  வரதராசன்  நிற்கிறார் ! கருப்பு துண்டு அணிந்து கொண்டு  வை. கோ  அவர்களும் இருக்கிறார்கள் !
 




5 comments:

இராஜராஜேஸ்வரி said...

தகவல் மற்றும் புகைப்படப் பகிர்வுகளுக்கு பாராட்டுக்கள்..

Unknown said...

தோழமைக்குரியவரே,உங்களின் வலைத்தளத்தை கண்டுபிடித்த மகிழ்ச்சியில்...மதுரை..இளைய சௌந்தர்

அப்பாதுரை said...

யாராவது அனுப்பியிருப்பார்கள்.
என்ன் பேசினீர்கள்?

கரந்தை ஜெயக்குமார் said...

மனம் மகிழ்கிறது ஐயா
நன்றி

kashyapan said...

அப்பாதுரை அவர்களே! இது நடந்தது 2000 மா,2002 ஆ என்று நினைவில் இல்லை ! இந்த கொள்ளையில் பேசியது ....!!! "ஆட்சிமொழியாக இந்தியை புகுத்தி மற்ற இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு எதுவும் செய்வதில்லை ! கூட்டத்தில் சில சர்தர்ஜிகளைப் பார்த்தென் ! குருமுகி - பஞ்சாபி.உருது மொழிகள் எப்படி சவலைப் பிள்ளையாக இருக்கிறது என்றேன் ! தமிழ் மொழிக்காக மட்டும் நாங்கள் போராட வில்லை ! உங்கள் மொழிக்காகவும் போராடுகிறோம் ! என்றேன் ! நினைத்தபடியே சர்தார்ஜிகள்கைதட்டினார்கள் ! ஒரு ஓரத்தில் சஞ்சல் சவுகான் நின்று கொண்டிருந்தார் ! இந்தி-உருது எழுதாளர் சங்க தலைவர் அவர் ! அது மட்டுமல்ல ! டெல்லி பல்கலைக்கழக ஆங்கில துறை பேராசிரியரும்கூட ! வாலை சுருட்டிக் கொண்டு என் ஆங்கில பேருரையை முடித்துக் கொண்டேன் ! ---காஸ்யபன்.