Friday, June 20, 2014

இந்தி மொழி பற்றி .....!!!???


1996 ம் ஆண்டு தேர்தலின் போது மதுரையிலிருந்தேன் ! மேற்கு வங்கம்,திரிபுரா,வாரணாசி ,சிம்லா, டெல்லி, வார்தா , பீடர் ,என்று ஒரு சுற்று சுற்றி  மார்க்சிஸ்டு கட்சி போட்டியிடும் தொகுதிகளை பார்க்கலாம் என்று கிளம்பினேன் ! இந்தி மொழி கைவராத நிலையில் மொழிபெயர்ப்பாளர் முத்துமீணாட்சி அவர்களையும் கூட அழைத்துச் சென்றிருந்தேன் ! 

சென்னையிலிருந்து கல்கத்தா செல்வது ! அங்கு பார்வையிட்ட பிறகு திரிபுரா செல்வது என்பது திட்டம் ! 
 கல்கத்தா சென்றதும் திரிபுரா செல்ல விமான டிக்கட் வாங்க உதவுமாறு "கணசக்தி " பத்திரிக்கை அலுவலகம் சென்றேன் !

டிக்கட் கிடைக்கவில்லை ! அவ்ர்கள் இரண்டு நாள் கல்கத்த தேர்தலை பார்வையிடுமாறு யோசனை சொன்னார்கள்  ! அப்பொதுஅங்குசட்டமன்ற தேர்தலும்    நடந்தது !

முதல்வர் ஜோதி பாசு "சத்காசியா" தொகுதியில்போட்டியிடுகிறார் ! அன்றுமாலை  தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்குகொள்கிறார் !மாலை  மூன்று மணிக்கு  வந்தால் அவருடைய வாகனங்களோடு "ஜீப் "ல் செல்லமுடியும் என்றனர் ! கசக்குமா ! கிளம்பிவிட்டோம் !

அலைபாயும் மக்கள் வெள்ளத்தின் ஊடாக சென்றோம் ! கல்கத்தா நகரத்தை தாண்டியதும் எங்கள் வாகனம் வேறுபாதையில் சென்று அவருக்கு முன்பாகவே சத்காசியாவை அடைய புறப்பட்டோம் !

நாங்கள் முந்தி  விட்டதால்  வழியில் ஒரு கிராமத்தில் சாலை  ஓரத்தில் நின்றோம் ! கொஞசம் நடந்து கிராமத்து வயல்களையும் அங்கு வேலை செய்யும் விவசாயிகளையும் சந்திக்க விரும்பினோம் !

வயலில் வேலை செய்துகொண்டிருந்த ஒரு விவசாயியை அழைத்தோம் ! அருகில்வந்த் அவரிடம் முத்து மீனாட்சிஅவ்ர்கள்    இந்தியில்  கேட்டார்கள் !அவருக்கு "இந்தி" தெரியவில்லை ! 

எங்களுடன் வந்த தோழர் ஒடி வந்தார் !"இவர்களுக்கு இந்தி தெரியாது ! வாங்க மொழி மட்டும் தான் தெரியும் ! கலகத்தாவில் வேண்டுமானால் இந்தியில் சமாளிக்கலாம் ! கிராமப்புறங்களில்வங்க மொழிதான் " என்றார் !
அவருடைய உதவியோடு அந்த கிராமத்தி விவசாயியோடு பேசினோம் !

மீண்டும்  நாங்கள் சத்காசியா நோக்கி புறப்பட்டோம் ! அங்கு முதல்வர் வங்க மொழியில் பேசினார் ! குறிபெடுக்க முடியாது ! 

ndtv நிருபர் மோனிகா தீபா பானர்ஜி இடம் உதவி கேட்டோம் ! அவருடைய மகள்  வந்திருந்தார் ! அவர் பெங்காலியிலிருந்து இந்திக்கு மொழிபெயர்க்க முத்து மீனாட்சி அவர்கள் அதனை எனக்கு தமிழில் சொன்னார் !

மகாராஷ்ட்ராவின் உள் கிரமங்களில் "இந்தி"  பப்பு வேகாது ! 

வட கிழக்கு மாநிலங்களில் வண்டி ஓடாது !

ராஜஸ்தான்,மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், பிஹார் ஆகிய மாநிலங்களில் மட்டும் வண்டி ஓடும்!

ராஜஸ்தானிலிருந்து வரும் இந்தி மொழி பத்திரிக்கை "ராஜஸ்தான் பத்ரிகா" 
 !  உ.பி,மற்றும் ம..பியில் ஒரு பய வாங்க மாட்டன் ! அது வித்தியாசமான "இந்தி" ! 

ஹரியானாவில் பேசும் இந்தி "ஹரியான்வி " ! நான்தான் சுத்த இந்தி நு அவன் அருவாள எடுப்பான் !

தெரு நாய் சொரிஞ்சே தான் சாகும் !

சாகட்டும் !!! 




 





4 comments:

அப்பாதுரை said...

இந்தி திணிக்கப் படுகிறதா என்ன?

இந்தி ஒழிக என்றவரெல்லாம் இன்று இந்தி பேசி பழகி ஒன்றிவிட்டார்களே? இதென்ன இன்னொரு பூதமா?

இந்தி இனிமையான மொழி. பிடித்தவர்கள் ரசிக்கட்டும். மற்றவர்களுக்கும் சேர்த்து.

அப்பாதுரை said...
This comment has been removed by the author.
கரந்தை ஜெயக்குமார் said...

கட்டாயப் படுத்துதல் என்பது கூடாது என்பதே என் கருத்து ஐயா

sury siva said...

//இந்தி ஒழிக என்றவரெல்லாம் இன்று இந்தி பேசி பழகி ஒன்றிவிட்டார்களே? //

எங்கே ஒன்று பட வேண்டுமோ அங்கு ஒன்று பட்டு விட்டனர்.

அங்கே, ஜாதி, இனம், மொழி, எந்த வித்தியாசமும் இல்லை.

அப்பாதுரை க்கு ஜே.

சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com
www.subbuthatha.blogspot.com