Wednesday, August 27, 2014

வாஜ்பாய் அவர்களும் , 

யு.ஆர்.அனந்தமூர்த்தியும் ...!!


அனந்த முர்த்தி அவர்கள் மிகச்சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல ! சிறந்த சோசலிஸ்ட் ! ராம் மனோகர் லோகியாவின் சீடர் ! கர்நாடகாவில் லோகியா ஆதரவாளர்கள் அதிகம் ! குறிப்பாக அவருடைய சாதி மத எதிர்ப்பு பிரச்சாரத்தா ல் கவரப்பட்ட இளைஞர்கள் உண்டு !

அவசர நிலைமையை எதிர்த்தவர்களில் யு.ஆர்.அ முக்கியமானவர் !

அவருடைய படைப்புகள் இந்தி உட்பட பல்வேறு இந்திய மொழிகளில் வந்துள்ளன ! இலக்கியத்தில் ஈடுபாடு கொண்ட வாஜ்பாய் அவர்கள் அனந்த மூர்த்தியின்படைப்புகளை ஆழமாக படித்தவர்! யு.ஆர் .அ  அவர்களும் வாஜ்பாயின் கவிதைகளை விரும்பிபடிப்பவர்! இருவரும்  பரஸ்பர அபிமானிகள் !

பிரதமரானதும்  வாஜ்பாய் பங்களா தேஷ் சென்றார் ! அப்பொது அவரோடு பங்களா தேஷ்  சென்றவர் அனந்தமூர்த்தி !

பா.ஜ.கட்சி உத்தம சீலர்களின் கட்சி என்று நான் கூறமாட்டேன் ! காந்தி அடி களைக் கொன்றவர்களின் வாரிசுகள் தான் ! காந்தி மரணத்தை இனிப்பு கொடுத்து கொண்டாடியவர்கள் தான் ! 

அனந்த மூர்த்தி மரணத்தையும் பட்டாசு வெடித்து கொண்டாடி யுள்ளார்கள் !

கிறுக்குப்பிடிச்ச அணிகள் இருக்கட்டும் ! ஒரு தலைவனாவது "ஙப்பங்களா ! இப்படி செய்யாதீங்கனு !" சொன்ன மாதிரி தெரியலையே!

  




0 comments: