Thursday, October 30, 2014

விருந்தாளி வீட்டைக்  

கொளுத்தினால் .......!!!


மராட்டிய மாநிலதேர்தல்முடிந்தது ! நாளை பா.ஜ.க."மைனாரிட்டி " அரசு பதவி ஏற்கிறது !

எங்கள் ஊர்க்காரர் (நாகபுரி ) தேவேந்திர ப்ஃட்னாவிஸ் பதவி ஏற்கிறார் ! பத்திரிகைகள் (பா.ஜ.க ) ஒரு பிராமணர் முதல்வராகிறார் என்று வர்ணிக்கின்றனர் ! இதற்கு முன்னால்  மனோகர் ஜோஷி முதலவராயிருந்த பிராமணர் ! பா.ஜ.க ஆதரவோடு வந்த சிவசேனைக்காரார் !

வெள்ளிக்கிழமை பதவி ஏற்பு விழா ! "வாங்காடே " கிரிக்கேட்  மைதானத்தில்  ஏற்பாடு பிரும்மாண்டமாய் நடக்கிறது ! 

அண்ணன் "மோடி "  வருகிறார் !  மைதானம் சர்வதேச தரத்தில் உள்ளது ! மராட்டிய மாநிலத்தின் அற்புதமான கிரிகெட் வீரர்களில்" வினு மன்கட் " ,"போலி உம்ரிகர் "  ஆகியோர் பெயரில் இர்ண்டு வாசல்களுள்ளன !        

விழாவுக்கு அத்வானி ,எம்.எம்.ஜோஷி., ஆகியோர் வருவதைப்பற்றி செய்தி இல்லை ! 

"என்கொவுண்டர்" புகழ் அமித் ஷா வருகிறார் ! இவர்கள் வரும் வாயில்களில் "உம்ரிகர்,மன்காட்" பெயர் இருந்தால்      பொருத்தமாக இருக்காது ! அதனால் அதனை சியாமபிரசாத் முகர்ஜி என்றும் .தீனதயாள் உபாத்யாயா என்றும் மாற்றப்போகிறார்கள்!

இது பற்றிமனகாட் அவர்களின் மகன் ராகுல் மன்காட் " என்ன செய்யமுடியும். விருந்துக்கு வந்தவர் வீட்டை எடுத்துக்கொண்டால் !" என்று கூறினார் ! 

எனக்கு மகிழ்ச்சி தான் !

மராட்டிய மாவீரன் "நாதுராம் கோட்சே " என்றும் "வீர் சாவர்கர் " என்றும் மாற்றாமல் விட்டார்களே என்பதால் !






4 comments:

சிவகுமாரன் said...

நல்ல கொள்ளி அய்யா.

சுப்ரா said...

பொருத்தமான இடம்தான் . அரசியலும் ஒரு விளையாட்டுதானே இங்கே . வெளியில் இருந்துதான் பார்க்க இயலும் நம்மால் . - சுப்ரா .

S.Raman, Vellore said...

ஏற்கனவே இந்த மைதானத்தை இவர்கள் முன்னாள் கூட்டாளிகள் சேதப்படுத்தியது நினைவுக்கு வந்து தொலைக்கிறது

kashyapan said...

பாகிஸ்தானொடு விலையாடக் கூடாது என்று டெல்லி மைதானத்தை சேதப்படுத்தினார்கள் ! இவர்கள் பா.ஜ.க -சிவசேனை பதவி ஏற்கும்பொது நாவப் செரீஃப் அழைக்கப்பட்டார்!---காஸ்யபன்.