Monday, November 03, 2014

வென்னீரும் -காபி வாசனையும் ...!!!



இசை அமைப்பாளர் எம்.பி.சீனிவாசன்  மறைந்த தோழர் எம்.ஆர் .வெங்கடராமன் அவர்களின் சகோதரரின் மகன் !

இளம் வயதிலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்தோடு தொடர்பு கொண்டிருந்தவர் ! கட்சியின் மத்திய தலைமை அவ்ரை மாணவர் இயக்கத்தை கட்டி வளர்க்க தமிழகத்திற்கு அனுப்பியது!மதுரை மண்டையன் ஆசாரி சந்தில் கட்சி அலுவலகத்தில்தங்கி  பணியாற்றி வந்தார் ! அங்கு இவரைப்ப்போன்ற இளைஞர்களை  கட்டி மேய்க்க குருசாமி நாயனா இருந்தார் ! 

முழுநேர ஊழியர்களுக்கு கட்சி அலவன்சு கொடுக்கும் ! மாதம் 10 /-ரூ லிருந்து 15 /- ரூ  கொடுப்பார்கள் ! அது கொடுப்பதற்குள்"தாவு"தீர்ந்துவிடும் !  20தேதிக்குமெல்தான் அது பற்றியே பேசுவார்கள் !

எம்.பி எஸ் அவ்ர்களுக்கு அப்படி இல்லை ! அவர் மத்தியகமிட்டி ஊழியர் ! டெல்லியிலிருந்து மாதம் 20/- ரூ 8ம் தேதி மணியார்டர் வந்து விடும் ! அது பற்றி அவரே விவரிக்கிறார் :

" என் சேக்காளி தோழர்கள் அன்று காலையிலேயே குளித்து விடுவார்கள் ! கட்சி ஆபிசுக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடப்போம் ! இருப்பே கொள்ளாது ! வாசல எட்டி எட்டி பார்ப்போம் ! 12 மணிக்குபொஸ்ட்மான் வருவார் ! மணியார்டர் வந்து வாங்கியதும் நாங்கள் காணாமல் போய்விடுவோம் ! மண்டையன் ஆசார சந்திலிருந்து போனால் டவுன்ஹால் ரோடு ! அங்கு தேப்பக்குளத்தில்  கம்பி வேலி  போட்டிருப்பார்கள்அதையும்தாண்டிமேற்கேபோனால் சுல்தானியாஹோட்டல்! பிரியாணி ஒரு பிளேட் 12 அணா ! ஆளுக்கு அரைபிளேட்! சுக்கா வறுவல் 2 அணா ! சாப்பிட்டுவிட்டு சிகரெட்டு ! திருமலை  நாயக்கர் பேரன்கள் மாதிரி கம்பீர நடைபோடுவோம் "  

"இரவுகையேந்துபவன் ! ஒரு அணாவுக்கு இரண்டு இட்லி ! ஆளுக்கு எட்டு இட்லி விளாசுவோம் ! அன்று எல்லோருக்குமாக நாலு ரூ ஆகும் ! ஒரு நாலைந்து நாள் ஓடும் !"

"அப்புறம் !கிடைச்சா சாப்பாடு!

"இல்லைனா ?" 

"பைத்தியமே ! அது தாண்ட கட்சி  வாழ்க்கை ! " 

( 80 களின் பிற்பகுதியில் கோவையில் த\.மு.எ.ச.இசை பயிற்சிமுகாம் நடத்தியது ! அதை நடத்தி தந்தவர் எம்.பி எஸ் ! அப்போது அவரோடு நெருங்கி  பழகும் வாய்ப்பு கிடைத்தது )

இ ரவில் அரை பட்டினியோடுதன் படுப்போம் ! காலையில் எழவே மனசு வராது ! அழுக்குப்பாயில் புரளுவோம் ! காலையில் டீகாபி குடிக்க காசு கிடைக்காது !

"டேய் ! என்திங்கடா !"என்றுகுருசாமி நாயனா சத்தம் போடுவார் ! அவர் அடுப்பு பத்தவச்சு வென்நீர் போடும் சலனம் கேட்கும் ! அடி ச்சுப்பிடிச்சு எந்திரிச்சு முகம் கால் கழுவுவோம் ! மண்டையன் ஆசாரி சந்து வாசலில் நிற்போம் !" 

"உள்ளெ எட்டி எட்டி பாப்போம் !"

"நாயன ஒரு தட்டில் ஐந்து அலுமினிய டம்ளரோடு வருவார் !"

"கிருஷ்ணா காப்பில காபி பொடி அரைக்கான ? "

"வாசன தூள் பறக்குது நாயனா "

"அத மோப்பம் பிடிச்சுக்கிட்டே இந்த வென்னிய குடிங்கடா "

"நாங்களும் அதை குடிப்போமே "

( எம்.பி எஸ் அவர்களின் நேர்காணல் செம்மலரில் அப்போது வெளிவந்தது ! மிக விரிவாக அவர் சொன்னத எல்லாம் எழுதியிருக்கிறேன் )


  

5 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

காபி தூளின் வாசனையினை முகர்ந்து கொண்டே, வென்னீர் குடிப்பது
எப்படியெல்லாம் துன்பப்பட்டிருக்கிறார்கள்

puduvairamji.blogspot.com said...

அய்யோ... கண்ணீர் வரவழைக்கிறது தோழர்...!

kashyapan said...

வசதி மிக்க குடும்பம். சர்.சி.வி. ரமனுக்கு உறவினர் ! மாநிலக்கல்லூரியில் படிக்கும் பொதே மாணவரியக்கத்தில் இருந்தவர் !சுதந்திர பொராட்டவீரர் சைபுதீன் கிச்சுலுவின் மகள் ஜைதா கிச்சுலு என்ற இஸ்லாமியப் பெண்ணை காதலித்து மணந்தவர் ! மூன்ரு நாள் அவரொடு இருந்தேன் ! நிறைய சொன்னார் ! கொஞ்சம் தான் எழுதியுள்ளேன் ! "முத்தையா ! இப்படி ஒரு சங்கம் இருப்பது தெரியமல் போய்விட்டதே ! நூறு பசங்கள எங்கிட்ட ஒருமாதம் அனுப்பு ! அருமையான சேர்ந்திசை குழுவை உருவாக்கிதருகிறென்" என்றார் ! 88 எப்ரலில் நடத்தலாம் என்றும் யோசனை கூறினார் ! 88 மார்ச் மாதம் மாரடைப்பில் மறைந்தார்! ராம்ஜி அவர்களே ! வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன்.

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு ஐயா...
வாசத்தை முகர்ந்து கொண்டே வெந்நீர் குடிப்பது என்பது எவ்வளவு கொடுமை...

மோகன்ஜி said...

பசியிலும் பட்டினியிலும் வளர்ந்த இயக்கம்....

என் மாணவப் பருவத்தில் கண்கூடாய்ப் பார்த்தே வளர்ந்தேன்.

ஜீவா அவர்களைப் பற்றியும் விரிவாய் எழுதுங்கள் காஷ்யபன் சார்!