Wednesday, December 17, 2014

தோழர் அர்சுணனும் ,

நாடகமும் .......!!!


முப்பது வருடமாவது இருக்கும் ! மதுரையில் நாடகபயிற்சி வகுப்பு ! 

பல்வேறு குழுக்கள் நாடகம் நடத்தின ! 

ஆசிரியர்கள் போராடிக் கொண்டிருந்த நேரம் !

வத்தலான ஆசிரியர் தன குழந்தைகளுக்கு தினபதற்காக ஆரஞசுபழம் வாங்கிக்கொண்டு வருவார் ! ஒரு பழம் வாங்கினாலும் நான்கு குழந்தகளும் பங்கிட்டுக் கொள்ளவார்கள் அல்லவா! ஆசிரியர் அவ்வளவுதானே செலவழிக்க முடியும் !

அவரைப் பார்க்க நண்பர் ஒருவர் வருவார் ! வீட்டு வாசலில் ஆரக்ன்சுப்பழத்தோல் வீசி இருப்பதைப்பார்த்து பதறி விடுவார் !

"என்ன உடம்பு ? யாருக்கு உடம்பு சரியில்லை ? " என்று பதறிக்கொண்டு கேட்பார் !

உடல் நலமில்லை என்றால் தான் ஆரஞசுபழம் திங்க முடியும் என்ற அவல நிலையில் இருக்கும் ஆசிரியர்களைபடம்பிடிக்கும் "பாவனை:நாடகம்" !

ஸ்ரீவில்லைபுத்தூரிலிருந்து வந்த அந்த ஒல்லிப் பையன் ஆரஞ்சு விற்பவனாக நடிப்பார் !ஆரஞசுப்பழத்தை கையில் வைத்து உருட்டி,தூக்கிபிடித்து அசல் வியாபாரியாக அவர் பாவனை செய்து வந்த காட்சி கைதட்டல் பெற்றது !

அவர்தான் இன்று விருதுநகர் மாவட்ட செயலாளராக  வந்திருக்கும் தோழர்.அருச்சுனன் !

வாழ்த்துக்கள் தோழரே !





2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

எனது வாழ்த்துக்களையும் இணைத்துக் கொள்ளுங்கள் ஐயா

'பரிவை' சே.குமார் said...

தோழருக்கு வாழ்த்துக்கள் ஐயா...