Thursday, January 01, 2015

வசமான கை !!!


சமீபகாலங்களில் தொலைக்காட்சிகளில் அரசியல் மற்றும் சமுக பிரச்சினைகள் பற்றிய விவாதனகள் அதிகம் நடை பெறுகின்றன! 

வலதுசாரிகள் ,மற்றும் மதவாத  அணிகள் மத்தியில் ஆட்சியைப்பிடித்தபிறகு மக்கள் அதற்கு எதிரான கருத்தை தீவிர மாக விரும்புகிறார்கள் என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாள நண்பர் ஒருவர் கூறினார் !

சமீபத்தில்" பாரத ரத்னா " விருது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கும், மதன் மோஹன்மாளவியா  அவர்களுக்கும் அளிக்கப்பட்டது பற்றிய விவாதம் தனியார் தொலைக்காட்சியில் நடந்தது ! 

பேராசிரியர் அருணன்,பத்ரி சேஷாத்ரி, கோவை சேகர் (பா.ஜ.க.) மற்றும்காங்கிரஸ் சார்பில் ஜோதிமணி என்ற அம்மையார் பங்கு பெற்றார்கள் !

"When argument fails abuse "  என்று "கூறுவார்கள் ! சேகர் அதனை "கட்சி"தமாக செய்தார் ! அரசியல்,வரலாறு பற்றி எதுவும் அறியாத பாமரத்தனமாக அவரது வாதங்கள் இருந்தன!

அறிவார்ந்த தகவல்களோடு அம்மையார் பேசினாலும் அதில் சார்புத்தன்மை இருந்ததாலும், காங்கிரஸ்   கட்சியின் பலவீனமான கொள்கைகளை நிலை நிறுத்தமுடியாததாலும் அம்மையாரின் பேச்சு எடுபடாமல்பொயிற்று !

பத்ரி சேஷாத்ரி ஆரம்பத்திலேயே "பாரத் ரத்னா "விருது  தேவையற்றது என்று வாதிட்டார் ! அடிப்படையில் வலது சாரிக்கொள்கைகளை ஆதரிப்பவர் என்றாலும் அறிவார்ந்த பெருமக்களின் நன்மதிப்பை பெறுவதில் பத்ரி ஆர்வமாக இருக்கிறார் என்பதை விவாதம் சுட்டிகாட்டவே செய்தது !

பேராசிரியர் அருணன் அவர்களை 1969 ஆண்டிலிருந்து நான் அறிவேன் !அண்ணமலை பல்கலையில் படித்துக் கொண்டிருந்த காலத்திலிருந்தே மாணவர் இயக்கத்தில் இருந்தவர் ! மதுரை பல்கலையில் பணியாற்றிய பொதே பணி நேரம் தவிர மற்ற பொழுதுகளில் அங்குள்ள வாசக சாலையில் தான் இருப்பார் !

 மிகத்தீவிரமான படிப்பாளி ! படித்ததை பிறரோடு பகிந்துகொள்ளும் எழுதுக்கு சொந்தக்காரார் !

"'பாரத் ரத்னா " விருது பிரதமரால் சிபாரிசு செய்யப்படுவது ! அதனால் அது கட்சி மாச்சரியங்களுக்கு உட்பட்டுதான் இருக்கும் ! இந்தவிருது தேவையற்ற ஒன்று !"என்றார் ! 

"இந்து மகா சபை "என்ற  மதவெறி அமைப்பை ஆரம்பித்தவர்களில் மதன் மோகன் மாளவியா ஒருவர் ! தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு என்று வரும் போது அதனை கடுமையாக எதிர்த்தவர் ! அண்ணல் அம்பேத்கருக்கும், மாள வியாவுக்கும் நடந்த விவாதத்தை முடிவுக்கு கொண்டுவர காந்தியடிகள் உண்னாவிரதம் இருந்தார் ! இறுதியில் அம்பேத்கருக்கும்,மாளவியாவுக்கும் ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகுதான் காந்தியடிகள் உண்ணா விரதத்தைமுடித்துக் கொண்டார் "

அருணன் வரலாற்றுத்தரவுகளை  அள்ளி வீசினார் !

சுப்பிரனனீயம்சாமி ராஜபச்சேவுக்கு பாரத ரத்னா விருது கொடுக்கவேண்டும் என்று சொன்னதையும் ,1997ம் ஆண்டுகளில் வாஜ்பாய் பற்றி  அவர் விமரிசித்தையும் பற்றிபேராசிரியர் அருணன் கூறியதும் பாவம்  சேகரின் ரத்தம் தலைக்கேறிவிட்டது !

அதே போல் சமீபத்தில் திருமாவளவன், பெரியவர் நல்லகண்ணு, ஆகியோர்கலந்து கொண்ட கூட்ட மொன்றில் பேராசிரியர் அருணன்  "ஆர்.எஸ்.எஸ்  இயக்கத்தை கிழித்து நார் நாரா க்கி தூக்கி எறிந்தார் ! 

" ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில்பெண்கள் உறுப்பினராக முடியாது " என்பதை தோலுறுத்திக் காட்டினார் !  

பத்திரிகைகளிலும்சரி ,தொலைக்காட்சியிலும் சரி,பொது மேடைகளிலும் சரி  இந்து மத வெறியர்களின் கொட்டத்தை தடுக்க இடது சாரிகளின் சார்பாக வந்திருக்கும் "வசமான கை  "

பேராசிரியர் அருணன் !!!




காங்கிரஸ் சார்பில் 

1 comments:

'பரிவை' சே.குமார் said...

பத்திரிகைகளிலும்சரி ,தொலைக்காட்சியிலும் சரி,பொது மேடைகளிலும் சரி இந்து மத வெறியர்களின் கொட்டத்தை தடுக்க இடது சாரிகளின் சார்பாக வந்திருக்கும் "வசமான கை "... அருணன் அவரை வாழ்த்துவோம்...