Saturday, January 10, 2015

"ஜன விஞ்ஞான வேதிகா "

( மக்கள் அறிவியல் இயக்கம் )





தமிழகத்தில் அறிவியல் இயக்கம் இருப்பதைப் போல்  ஆந்திராவில் ஜன விஞ்ஞான வேதிகா என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர் ! 

ஹைதிராபாத்தின் மையமான பகுதியான மக்கள்பூங்காவில் (public garden )இவர்கள் நிகழ்ச்சிகளை நடத்துவார்கள் ! இங்குதான் சட்டமன்றமும் அமைந்துள்ளது ! 

சமீபத்தில் போலி சாமியார்கள் ,மற்றும் அவர்களின் ஏமாற்று வேலைகளை விரிவாக விளக்கி அதற்கான விளக்கஙகளையும் அளித்தார்கள் !

வடை சுடும் எண்ணை சட்டியிலோரு பெண் கையை நுழைத்து விட்டு எதுவும் ஆகாமல் இருந்தார் !அவர்கையில் எந்த கொப்புளமும் ஏற்படவில்லை !  அந்தப் பெண் சுடும்  எண்ணையில் கையை விடுமுன் குளிர்ந்த எண்ணையில் கையை முக்கி விட்டு பின்னர் வடைச் சட்டியில் கையை விட்டார் ! 

மற்றொரு பெண் அந்தரத்தில் எந்த வித மான தாங்கியும் இல்லாமல் படுத்த்ருந்தார் ! அவர் கையில் ஒரு தண்டம் மட்டும் இருந்தது !

அந்த தண்டம் இரும்பால் ஆனது ! அதன் கைப்பிடியில் சதுரமான இரும்பு பட்டை உண்டு ! தரையில் இரண்டு அடி ஆழத்தில்பதிக்கப்பட்டிருந்த அதனை  சாமர்த்தியமாக தன் காவி உடையால் மறைத்திருந்தார் !

நாக்கில் கொழுந்து விட்டு எரியும் தீயை ஒரு பெண் செய்து காட்டினார் ! நாக்கில் பெரிய கட்டி "கற்பூரம்" எரிந்து கொண்டிருந்தது ! கற்பூரம் எரியும் வரை நாக்கில் நெருப்பு படாது என்பதை விளக்கினார்கள் !

வேதிகாவின் கிளைகள் ஆந்திரா,தெலுங்கானா மாநிலத்தின் எலா மாவட்டங்களிலும் செயல்படுகிறது !

இதன் பொறுப்பாளர் தி.வி ராவ் வந்திருந்த மக்களூக்கு போலி சாமியார்களின் மோசடிகளை அம்பலப்படுத்தினார் !

7000 ஆண்டுகளுக்கு முன்பாகவே விமானம் இருந்தது என்று கூறப்படுவது பற்றி சொல்லும் போது அப்படியானால் அதனை  ஏன் ஓலை சுவடியில் எழுதி வைக்க வேண்டும் என்றும் கேட்டார் ! 

ஹைதிராபாத்தில் உள்ள "சுந்தரய்யா விஞ்ஞான கேந்திரம் " இவர்களுக்கு பின் பலமாக இயங்குகிறது !




அளித்தார்கள் !

0 comments: