Sunday, October 11, 2015

(தீக்கதிர்(12-10-15) பத்திரிகையில்  இலக்கிய சோலையில் வந்த கட்டுரை

 

நிஜ நாடகமும் 

நானும...........!!!

மதுரையில்" ஃபென்னர் -காகில் "என்று ஒரு கம்பெனி இருந்தது. பிரும்மாண்ட மான இயந்திரங்களின் சக்கரங்களை இயங்கச்ச்செய்யும் உறுதியான பெல்ட்டுகளை தயாரிக்கும் தொழிற்சாலையாகும் அது.மதுரை மில் நிர்வாகதோடுஇனைந்து செயல்பட்டு வந்தது.

அதன் தோழிலாளர்களின் சங்கத்தலைவர்களில்

ஒருவர் தான்  தோழர் எம்.பி.ராமச்சந்திரன் . கலை இலக்கியதுறையில் ஆர்வம் உள்ளவர். நன்றாகப்படுவார். நடிப்பார். நாடகங்களை நடத்துவார். ஏழை எளிய மக்களின் துன்ப துயங்களை சிறு,குறு நாடகங்களாகப் போடுவார். கூட்டங்கள் ஆரபிக்குமுன், மேடை அலங்காரம் எதுவுமின்றி பாட்டாளிகளின்பாடுகளை சித்தரிப்பதாக அவை இருக்கும் .

உண்மையான (நிஜமான)சம்பவங்களை சித்தரிப்பவைகள் அவை. அதனால் அந்த நாடக குழுவுக்கு "நிஜ நாடக இயக்கம்" என்று பெயர் வைத்தார்.

மதுரை தெருக்களில் அவர் நாடகம் நடத்தாத சந்துகள் இல்லை என்றே சொல்லலாம்.

மதுரை நகரத்தில் நாடகத்தில் ஆர்வமுள்ள நண்பர்கள் நிறைய இருந்தனர். தோழர்கள் ஜெயந்தன், ப.ரத்தினம், பெராசிரியர் ஷாஜஹான் கனி, காஸ்யபன் மற்றும் மதுர பல்கலைகழக மாணவர்கள் ஆகியோரை வைத்து பேராசிரியர் ராமானுஜம் அவர்களும்,எஸ்.பி சீனிவாசன் அவர்களும் காந்தி கிராம பலகலைக்கழகத்தில் நாடக பட்டறை ஒன்றை தேசீய நாடக பள்ளியின் ஆதரவோடு நடத்தினார்கள் .

பி.விகராந்த்,பிரெமா கராந்த்,சங்கர குரூப்,சிவராம கராந்த் ,ஆத்யம் ரங்காசாரிஆகிய முன்னோடிகள்வகுப்புகளை  நடத்தினார்கள்.

இப்படி பயிற்சி பெற்ற நண்பர்களை ஒருங்கிணைத்து மதுரையில் நிஜ நாடகக் குழு ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. பலரும் பல்வேரு அலுவலகங்களில் பணியாற்றிக் கொண்டிருந்ததால் பலகலை மாணவர் ஒருவரைகொண்டு குழுவை நடத்த முடிவு செய்யப்பட்டது.

மதுரை ராஜஜி பூங்கா,சாந்தி நகர் ,பாத்திமா கல்லூரி,மற்றுமுள்ள வளாகங்களில் இந்த குழு நாடகங்களை போட்டு வந்தது.        

ஒருகட்டத்தில் ,எம்.பி.ராமசந்திரனின் நிஜநாடக இயக்கமும், நிஜ நாடகம் போடும்குழுவும் நகரத்தில்   நாடகங்களை நடத்திவந்தன. 

இது குழப்பத்தை உண்டுபண்ணும் என்று நினைத்த குழுவினர் இயக்கத்தின் பெயரை மாற்றமுடியுமாஎன்று கேட்டனர்.

 இது பற்றி நான் பெராசிரியர் ராமானுஜம் அவர்களிடம்விவாதித்தேன்.

" நிஜ நாடகம்" என்பது ஒரு "misnomer"!  நான் வகுப்பு எடுக்கும் பொது செய்த தவறு. உலகப்ப் உகழ் பெற்ற நாடக வியலாளர் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி நாடகவியலில் பல பரிசோதன முயற்சிகளை செய்தவர். திரைச்சீலை ஆகியவற்றைபயன்படுத்தாமல் காட்சிகளை மேடைகளில் அமைத்தால் என்ன? என்று நிணைத்தார். ரஷ்யாவின் செல்வாக்கு மிக்க குடுமபத்தை சேர்ந்த அவர் தன் நாடகத்தில் வரும் ஒரு காட்சிக்கு கோட்டை கொத்தளம் தேவையாக இருந்தது.நிஜமான பழையகோட்டை ஒன்றிலிருந்து மதில் சுவரைபெயர்த்து மேடையில் வைத்தார். இதற்கு

"Real theatre "   வகைப்படுத்தி கூறினார். 

மக்கள்கூட்டம் கூட்டமாகவந்து காட்சியப்பர்த்து பிரமித்தனர். மகிழ்ச்சி அடைத்த ஸ்டானிஸ்லாவ்ஸ்கி அவர்களிடம் நாடகம், ,கருத்து ஆகியவற்றை பற்றி கேட்டார்.நாங்கள் கோட்டையைத்தான்பார்த்தோம். நாடகத்தை எங்கே பார்த்தோம் என்றார்கள். அதிர்ச்சி அடைந்த அவர் மீண்டும் பரிசோதனையில் இறங்கினார்.

பிரும்மாண்டமான அரண்மனையை சித்தரிக்கவேண்டியதிருந்தது.மிகவும் வேலைப்பாடுள்ள   "அழகான பெரிய ஜன்னல் " ஒன்றை செய்து , அதனை மேடையில் வைத்தார். பார்வையாளர்களே இந்த ஜன்னலே இவ்வளவு அழகாக இருந்தால் அரண்மனையை உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறென்.என்றார். இதனை "symbolictheatre " என்று அவர் வகைப்படுத்தினார். வகுப்பில் "real theatre" நிஜ நாடகம் என்று நான் குறிப்பிட்டது தான் இந்த குழப்பத்தைற்குகாரணம். "நிஜ   நாடகம்" என்பது உருவம் சார்ந்தது."நிஜ நாடக இயக்கம் 

" என்பது உள்ளடக்கம் சார்ந்தது ." என்று பேராசிரியர் ராமானுஜம் விளக்கினா

1 comments:

மோகன்ஜி said...

சுவாரஸ்யமான நினைவு மீட்டல் காஸ்யபன் சார்! நலம் தானே?