Monday, December 28, 2015

ஜோதி பாசு 

பதவி ஏற்றபோது ,

13 லட்சம் பேர் கூடினர்....!


1972ம் ஆண்டு . மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில  இந்திய மாநாடு நடந்தது. 
எனக்கு கடைசிநாள் பேரணியில் தான் கலந்து கொள்ள முடிந்தது. மேற்கு வங்கத்திலிருந்து "பயோனிர் " பத்திரிகையின் நிருபர் வந்திருந்தார். அவர் கட்சி உறுப்பினரும்  ஆவர்..
தைக்கால்தெரு தாண்டி கிழ்பாலம் இறக்கத்தில் ஊ ர்வலத்தில்கலந்து கொண்டோம் , மனம் மகிழா வாய் நிறைய கோஷம் போட்டேன். புன்னகை யோடு அந்த வங்காளியும் மழலை தமிழில் கோஷம் போட்டார்.கிழ்பாலத்தில் பாதிதுரம் சென்றிருப்போம். "காம்ரேட் ! ரன் அப் ! கமான் ! "என்று ஓடினார்>நானும்  ஓடினேன்.. மீனாட்சி கல்லுரி தாண்டி மேம்பாலத்தில் நின்று கொண்டு ஊர்வலத்தை படம்பிடித்தார்.  செங்கொடி அசைந்தாட ஊர்வலக் கட்சி ரம்யமாக இருந்தது.

நான் இரண்டு லட்சம் பேர் இருக்கும் என்று கணித்தேன்.மறு நாள் இந்தியன் எக்பிரசில் "mamooth gathering " என்று போட்டிருந்தார்கள்..

மேற்கு வாங்க நண்பரிடம் நான் சொன்ன பொது  வாய் கோண சிரித்தார். நீங்கள்  எவ்வள்வு என்று செய்தி அனுப்பினீர்கள் ?

"25000 என்று அனுப்பினேன். "என்றார்

"நீங்கள் செய்தது அநியாயம்" . என்றேன்.

"தமிழ்நாட்டு காரர்கள் எதிலும் உணர்ச்சி வசப்படுபவர்கள்."
"எப்படி?"

"இதைவிட ப்ரும்மான்டமான் பெரணிகளை பார்த்தவன் நான் "நாங்கள்  பேரணியின் புகைப்படத்தை வைத்து அளவிடுவோம்.கூட்டத்தின் அடர்த்தி, அதில் உள்ள வெற்றிடம், படத்தில் 10x 10 சதுரத்தில்  எத்துணை பேர் நிற்கிறார்கள்  மைதானம் எவ்வள்வு பெரியது என்பதை கணக்கிடுவோம். அது  கிட்டத்தட்ட சரியாக இருக்கும்".என்றார்.. 

"அண்ணல் காந்தியடிகள் இறந்த போது அஞ்சலி செலுத்த வந்த மக்கள் 8லட்சம்பேர்,
குருசேவும் புல்கானினும் இந்தியா வந்த போது மேற்கு வாங்க மக்கள் அளித்த வரவேற்பில் கலந்து கொண்டவர்கள் 11லட்சம் பேர் .

ஜோதிபாசு இடதுமுன்னணியில் முதலமைசராக பதவி ஏற்றபோது வந்த மக்கள் 13 லட்சம் பேர்.

இப்போது டெசம்பர் 2015 பேரணிக்கு வந்தவர்கள் கட்சியின் எதிர்பார்ப்பு 10 லட்சத்தையும் தாண்டிவிட்டது..(மம்தா போலிசு 2லட்சம் என்று கூறியுள்ளது)

தமிழகத்தில் அண்ணா  மறைந்த பொது கூடியவர்கள் 6லட்சம்.. 

அழகர் ஆத்தில் இறங்கும் போது வரும் கூட்டம் சில ஆயிரங்கள் தான் .தமிழ் பத்திரிகைகள் லட்சக்கணக்கில் என்று எழுதினாலும்..

0 comments: