Sunday, December 27, 2015

தோட்டக்காரா , தோட்டக்காரா ,

அதோ வருகிறார்களே , அவர்கள் 

காலடியில் என்னை போடு !!!



சதந்திர போராட்ட காலத்தில மாகன் லால் சதுர்வேதி என்ற கவிஞர் எழுதிய வரிகள் இவை :

நந்த வனத்தில் மலர்ந்த பூக்கள் சொன்னதாக கவிஞர் கூறுகிறார்:


தோட்டக்காரா! தோட்டக்காரா ! 
தினமும் காலையில் என்னை பறிக்கிறாய் !
மாலையாக தொடுக்கிறாய் !
ஈஸ்வரன் கழுத்தில்போடுகிறாய்  !
எனக்கு அதில் மகிழ்ச்சி இல்லை !

சுதந்திர போராட்ட வீரர்கள் வருவார்கள் !
கரடு முரடான பாதை கல்லும் முள்ளும் குத்துமே !
அதோவருகிறார்களெ !
அவர்கள் காலடியில் போடு !
அவர்கள் பாதங்கள் நோகாமல் பார்த்துக் கொள்வேன் !
அதுதான் எனக்கு மகிழ்ச்சி !!!


நேற்று காலை பத்து மணியிலிருந்து  ஆனந்த் பஜார் பத்திரிகை தொலைக்காட்சிமுன் அமர்ந்து விட்டேன்..
அவர்கள்  கொஞ்சம் கொஞ்சமாக அந்த மை தானத்துக்குள் வந்து  கொண்டிருந்தாரகள்.உழைப்பாளிகள், விவசாயிகள் , ஆசிரியர்கள்,அரசு உழியர்கள் ,சிப்பந்திகள், ஆயிரம் ஆயிரமாக ,இல்லை பத்தாயிரம்பத்தாயிரமாக,இல்லை லட்சம்லட்சமாக அவர்கள் தலைமை மார்க்சிஸ்டகட்டி கேட்டுக்கொண்டதற்காக  .வருகிறார்கள்.

பிமன் தாதா என்ற அந்த சிங்கம் மேடையில் ஏரி எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரி பார்க்கிறது.

புத்ததேவ் அவர்கள் தலைமையில் பேரணி கூட்டம் துவங்குகிறது . பிமன், பிருந்தா, மாணிக் சர்க்கார்,முகம்மது சலீம், மாநில செயலாளர் டாக்டர் சுர்யகாந்த மிஸ்ரா கொடியேரிபாலகிருஷ்னண் ,  என்று பேசுகிறார்கள்

இறுதியில் சித்தாராம் எச்சூரி பேசுகிறார்.

"வங்கம்  இன்று நினைப்பதை இந்தியா நாளை  நினைக்கும் .   
மம்தாவை பதவியிலிருந்து இறக்குவோம்" வங்கத்தை காப்போம் !
மோடியை இறக்குவோம் .இந்தியாவை காப்போம் "

என்று கர்ஜிக்கிறார்.
 பத்துலட்சம் பேர் விண்ணைமுட்ட ஓரே குரலில் 
குரலெழுப்புகிறார்கள்.!!!

கண்கள்கசிய ,நெஞ்சம் விம்ம 
பார்த்தேனே!!!

0 comments: