Saturday, January 16, 2016

"ரிஷி " மூலத்தையும்,

"ஞானி " களின் மூலத்தையும் ,

பார்க்கக் கூடாது ...!!!


1975ம் ஆண்டுக்கு முன்  நான் அடிக்கடி காந்தி கிராம பல்கலைகழகம் செல்வேன். தோழர் ராமானுஜம், மற்றும் ஆங்கில பேராசிரியர் பால சுப்பிரமணியம்  ஆகியோருடன் உரையாடிவிட்டு வருவேன். 
ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் பற்றி  பல   அரிய விஷயங்களை  அலசுவோம்.

ஷேக்ஸ்பியர் நாடகங்கள் பிரபுக்களுக்காக பகலில் தான்  நடத்தப்படுமாம். இரவுக்காட்சிஎன்றால்அதனைஅர்த்தப்படுத்த அரங்கத்தின் இரண்டுபக்கமும்மெழுகு வர்த்தியை ஏற்றி வைப்பார்களாம். இப்படி பலவிஷயங்கள் கிடைக்கும்.

எங்களோடு பேராசிரியர் ஒருவர் கலந்து கொள்வார். கிராமீய பாடல்களை தொகுத்து  சேகரித்து வருகிறார் கிராமீயகலைகள் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார்.

அவரிடம் இருந்த இசைதட்டுகளை பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தது.
இதே போன்று விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் என்ற அம்மையாரும் கிராமிய பாடல்களை சேகரித்து அவை அழிந்துவிடாமல் இருக்க இசை தட்டுகளில் சேமித்து வைத்திருந்தார்; நமது பேராசிரியர் அந்த அம்மையாரின் இசை தட்டுகள் சிலவற்றையும்போட்டுக்காட்டினார்

அதிலொரு பாடல் "மச்சான பாத்தீங்களா - மலைவாழ  தோட்டத்திலே" என்ற பாடல். 

அந்த இசைதட்டை வாங்கிபார்த்தேன்.

Music  composed by vijayalatsumi  Balakrishnan 

Orchestration by Ilayaraaja 

என்று அச்சடித்திருந்தது.

மறைந்த இயக்குனர் K .சுப்பிரமணியம் அவ்ர்களின் முத்த புதல்வர் பெயர் பாலகிருஷ்ணன். இசை அமைப்பாளர் sv ரமணன் அவர்களின் சகோதரர்.

 ராமாயணத்தை உருவாக்கியவர்  மகரிஷி வால்மீகி .

அவருடைய பூர்வசிரம பெயர் ரட்சன் என்பதாகும்

அவருடைய பூர்வாசிரம தோழில்

"கொள்ளை அடிப்பது "

ரிஷி மூலத்தையும்,

"ஞானி".மூலத்தையும் தேடக்கூடாது என்பார்கள்.

தயவு செய்து தேடாதிர்கள் !!!













4 comments:

Kasthuri Rengan said...

அவர்கள் என்ன புரிதலில் அப்படி அச்சிட்டார்கள் என்பது இன்னொரு ரிஷி மூலத் தேடுதல்..

என்னதான் உயரத்திற்கு போனாலும் நாம் அங்கே சுய திறமை இல்லை என்றால் நிற்க முடியாது ...

உங்கள் செய்திப்படியே ராஜா உயரங்களுக்கு சென்றது வேண்டுமானால் கேள்விக்குரியது என்று எடுத்துகொண்டாலும் இன்றய அவரது நிலை - ?

சுய திறமை படைப்பாற்றல் இல்லாத ஒருவர் இவ்வளவு நாள் இவ்வளவு எதிர்ப்புகளை மீறி கீழ்மைகள் நிறைந்த திரையுலகில் நிலைக்க முடியும் என்று நீங்கள் கருதுகிறீர்களா ..?

ஓபன் யுவர் ஐஸ் ஜென்டில்மேன்...

நிகில் குறித்து சில செய்திகள்

சரவணன் said...

ஐ.மா.பா. பற்றி இளையராஜா விஜய் டிவி பேட்டியில் சொல்லியிருப்பது பற்றி? உங்களுக்கு இந்த விவகாரம் (கட்சி ஆபிசில் அறையை ராஜாவுக்குக் கொடுக்க மறுத்தது) பற்றித் தெரிந்திருக்கும். அதை எழுதுங்களேன்.

ஸ்ரீராம். said...

சில பாடல்களை "இதை நாங்கள் நாடக மேடையில் போட்டது" என்றும் 'மாங்குயிலே பூங்குயிலே' போன்ற பாடல்கள் அவர் அம்மா நாட்டுப்புறப் பாடல் போல அந்த மேட்டில் பாடிக் கேட்டது என்றும் கங்கை அமரன் ஒரு பேட்டியில் சொல்லியிருந்த நினைவு.

Vaasi engira Sivakumar said...

Sir
Orchestrization ilayarajaன்ணுதான போட்டிருக்கு....இந்தம்மா ராஜா சார் மேல எவ்வளவு மரியாத வெச்சியிருக்காங்கண்ணு அவங்க கூடவுள்ளவங்க கிட்ட கேளுங்க..please see conductor John Scott webpages(RPO conductor)...real music persons...Budapest ஆளங்கள கேளெங்க...i went to a hospital in German where after a case raja thiruvaasagam regular ....i have photo with that ficor...i will give his mobile number too....please stop crutizicing him..இவரொட திருவண்ணாமலை வீடியோ பாருங்க....like ordinary man singing with general public... Please dtop