Wednesday, June 01, 2016






அந்த மூன்று குரங்குகளும் .....!!!







அண்ணல் காந்தி அடிகள் சொர்க்கத்தில் தன பிரார்த்தனைக் கூட்டத்தை முடித்ததும் காமராஜரை அழைத்தார் "

"காமராஜ் ! நான் வைத்திருந் மூன்று குரங்கு பொம்மைகளும் பூமியில்பத்திரமாக இருக்குமல்லவா ? என்று கேட்டார்.

"பாபுஜி ! இன்றைய நிலைமை எனக்கு தெரியவில்லை ! வேண்டுமானால் சி.என்.அண்ணாதுரையிடம் கேட்டு சொல்கிறேன் " 

"நான் அதைபார்த்திருக்கிறேன் ! ஆனால் இன்றைய நிலைமை தெரியவில்லை .தந்தை பெரியாரிடம்கேட்கட்டுமா ?என்றார் .அறிஞர் அண்ணா .

பெரியார் ராஜாஜியை கேட்க ராஜாஜி படேலைகேட்டார்.

படேல் "நன்றாகவெ இருக்கிறது..எதற்கும் தற்போது பிரதமராக இருக்கும் மோடி இடம் கேட்கிறேன் "என்றார்.


மோடி பதில் சொன்னார் . " கண்ணை மூடிகொண்டிருக்கும் குரங்கை நீதிபதி ஆக்கிவிட்டோம்."

"காதை  முடிக்கொண்டிருக்கும் குரங்கை அரசாங்கத்திற்கு பொறுப்பாக்கி விட்டோம்."  

"வாயை மூடிக்கொண்டிருக்கும் குரங்கை என்ன செய்தீர்கள் ? என்று இடைமறித்தபோது 

"அதனை மக்களாக்கிவிட்டோம்" என்று கூறியவர் விமானத்தில் ஏறி அமேரிக்கா சென்றுவிட்டார். 

( இன்சுரன் ஊழியர் சங்க தலைவர் தோழர் தண்டபாணி அவர்கள் கூ றி ய கருத்தினை  தழுவி )  

0 comments: