Wednesday, June 15, 2016






"ஏட்டி  ! பல்லை தேய்க்கவா ?

ஊறுகாய் போடவாட்டி ?...."





எங்க கிராமத்துல எங்க வீடு எட்டு பத்தி கொண்டது கடைசில உள்ள எட்டாம் ப த்திய "கொட்டில் " என்போம். மாடுகளை கட்டிவைக்க பயன்படுத்துவதால "மாட்டுக் கொ ட்டில்  "என்போம். இர்ண்டு பசுமாடு. உழவை மாடு  ரெண்டு இருக்கும் லீவுக்கு வந்தா அதுங்களுக்கு வைக்கப்போர்லைருந்து வைக் கலை புடுங்கிபோடரதுல இருந்து.புல்லுமேய குளிப்பாட்ட நாங்கதான்பாத்துகணம்.

கொட்டில்ல   பட்டய கல்  பாவி இருப்பாங்க 1 மாட்டு கொழம்பால  தரையை சகதியாக்காம இருக்க !பகல் நேரத்துல காத்தாட பின்னால  இருக்கற மரத்தடில கட்டுவோம்.

கலபாவின தரைல சில்லு சிலுனு காத்தடிக்கும். பாட்டி அதுல நாலு மரக்கால் உமியைபோட்டு உமிக்கரி போடுவாள். அது கருகின பொறவு உரல்ல போட்டு கு த்திருவாள்.. அதோட கொஞ்சம் கல் உப்பையும் போடுவாங்க . அதை ஒரு சிறிய கல் தொட்டில வாரி வைப்பாங்க அது தான் ஆண்டுபூறாவும் எங்களுக்கு பல்விளக்க !

1937ம் ஆண்டு பமாய் பக்கத்துல ஒருலட்சம் ரூ போட்டு அமெரிக்க ஒரு கம்பெனி ஆரம்பிச்சுது. "கோல்கேட் " கம்பெனி பல்லு தேய்க்க பசையும், ப்ர்ஷ்ஷும் தயாரிக்கற கம்பெனி.

"கரிய வச்சு பல்தெக்காதீங்க " "இகர் " புண்ணகிடும்" "இந்தியாவுல வர வியாதில பாதி வாயுலதான் ஆரம்பிக்குது." "வாயை சுத்தம் பண்ணினா வியாதியே வராது." அப்படின்னு டாக்டர்களை சொல்ல வச்சான் .

இன்னைக்கு 120 கொடில 100 கோடி ப்பேறு காலைல எந்திச்சதும்  ப்ர்ஷ்ஷும் கோல் கே ட்டுமா  நிக்கம். கோடிக்கணக்குல வித்து வரவு.

டெல்லி பம்பாய் கல்கத்தனு இருக்க ர தமிழர்களுக்கு நினவு இருக்கும். அப்பமெல்லாம் தனியார் ரயில்வேதான்  டெல்லி போணும்னா .msm ரயில்வே ,bnr ரயில்வே நு தான் டிக்கட்டு வாங்கணும்.

டெல்லி  ருட்ல சாந்தா நு ரயில் நிலையம். .காட்டு பகுதி.அங்க  காலைல 6மணிக்கு போகும்.வனகுடிமக்கள் வேப்பம் குச்சி,ஆலம் குச்சி ஆகியவற்றை வெட்டிகட்டுப் போட்டு பல்விளக்க விப்பாங்க.இப்பம் குச்சியும் கிடையாது சாந்த  நிலையமும் கிடையாது.அத சந்தர்பூர் ஆக்கிட்டாங்க.

சமீபத்துல டிவில விளம்பரம்பாத்தேன். ஒத்தன் இகர்ல ரத்தம் வருது. சாயம் போன நடிகை ஒத்தி வானத்திலேருந்து குதிக்கா ! "ஓம் பேஸ்டுல உப்பு இருக்கா ? எலுமிச்சை இருக்கா ? நு கேக்கா !

"ஏட்டி ! நான் பல்லு தேய்க்கவா ? ஊறூகாய் போடவா வுட்டி  ?"நு கத்தினேன் . 

"அணைச்சுராத !  சினிமா பாத்துக்கிட்டு இருக்கேன் " எங்க அக்கா எச்சரிக்கா !

 


1 comments:

”தளிர் சுரேஷ்” said...

கம்பெனிகளின் வணிக உத்தி காலத்திற்கேற்றவாறு மாறுகிறது! நாம் தான் ஏமாறுகிறோம்!