Thursday, September 29, 2016






"surgical strike "






இந்திய ராணுவம் தீவிர வாதிகளின் முகாமுக்குள் புகுந்து அழித்தது . இது முற்றிலும் உண்மை.

இந்திய ராணுவம் எங்கள் எல்லைக்குள் வரவில்லை என்று பாகிஸ்தான் கூறி  உள்ளது .இதுவும் உண்மை . 

காஷ்மீரில் ஒவ்வொரு ஐந்து ஆண்டும் தேர்தல் நடக்கிறது. தேர்தல் கமிஷன் மொத்தமுள்ள  124 தொகுதிகளுக்கும் அறிவிக்கும். தேர்தல் 100 தொகுதிக்கு மட்டுமே நடக்கும். மிசமுள்ள 24 தொகுதிகள் பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீர் பகுதியிலுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் 24 தொகுதிகளில் தேர்தல்நடத்தமுடியவில்லை என்று தேர்தல் கமிஷன் "பைலை" மூடிவிடும்.70 ஆண்டுகளாக இது  தான் நடக்கிறது.

பஞ்சாபிலிருந்து கராசி  போனால் சர்வதேச எல்லையை கடக்கவேண்டும். ராஜஸ்தானிலிருந்து சிந்துமாகாணம் போக சர்வதேச  எல்லையை கடக்க வேண்டும். காஷ்மீரின் குப்வாராவிலிருந்து கட்டுப்பாட்டு எல்லையை  தாண்டினாலே  ஆஜாத் காஷ்மீர் வந்து விடும் .இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கும் புகவில்லை  என்பதும் உண்மை .ஏனென்றால்   ஆஜாத் காஷ்மீரும் இந்திய பகுதிதான்.அது தாவாவில் இருக்கிறது.

பாகிஸ்தான் தலைமையும்-இந்திய தலைமையும் ஆட்டும் ஆட்டம்  தான் இது. குமரியில்,கோவை யிலும்,திருப்பூரில் நாலு விடலைகள் "பாரத் மாதா கி ஜெ' என்று கோஷம்போடமாட்டுமே  உதவும்.

அப்படியானால் காங்கிரஸ் கடசி ஏன் இதனை செய்யவில்லை ?

2007ம் ஆண்டிலிருந்து 2013 ஆண்டுவரை இரண்டு முறை இந்திய ராணுவம் "surgical  strike  நடத்தி இருக்கிறது . முந்தாநாள் இரவு முழுவதும் மோடி தண்ணீர்குடிக்காமல்  நல்ல செய்திக்காக முழித்திருந்ததாக ஒரு தொலைக்காட்ச்சி புலம்புகிறது. ஆனால் மன்மோகன் சிங் நன்றாக தூங்கினார். இது சாதாரணமாக நடப்பது என்பதால். அதே சமயம் 1971ம்ஆண்டுநடந்தவங்கதேசவிடுதலையை மறக்க முடியாது.

அமெரிக்க enterprice கப்பல் இந்துமகாசமுத்திரத்திற்குள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நுழைந்த பொது, "வங்க விரிகுடாவுக்குள் நுழையாதே நுழைந்தால் உலக யுத்தம் தான் " என்று சோவியத் யூனியன் எசரித்தது  இந்திய ராணுவமும் வங்கதேசமக்களும் வீரம்செறிந்த விடுதலைப்போரை நடத்னதினர்அதற்கு மேற்கு வங்க மக்கள்  முழு ஆதரவையும் தந்தனர். 

அதன் பிறகு இந்திய நாடாளுமன்றம்  கூடியது. இந்திரா அம்மையார் நாடாளுமனறத்திற்குள் நுழைத்த பொது பிரும்மாண்டமான கரகோஷம் எழுந்ததுதலைவர்கள்பாராட்டினர்.அப்பொதுக்குட்டி தலைவராயிருந்த வாஜ்பாயாய் கூறினார்.

" கம்பிரமாக பிரதமர் வரும் பொது நான் இந்திரா அம்மையாரை பார்க்கவில்லை ! துர்கா தேவியை தரிசித்தேன். she Made history and also geography " என்றார். இந்திய துணைகாண்டத்தில் பூகோளத்தையே மாற்றினார்கள்.

சக்கரத்தின் "டயரில் " காற்றுபோய்க்கொண்டிருக்கிறது.

"பஞ்ச்சர் "பார்ப்பதால்பயனில்லை.

புதியதாக வாங்குவோம் !!!

1 comments:

'பரிவை' சே.குமார் said...

அரசியல் என்னவோ...
இந்திய இராணுவத்தை வாழ்த்துவோம்.