Saturday, September 16, 2017




மதமாற்றம் முடியும் !


சாதி மாற்றமும் முடியும் !!




ஒரு இந்து கிறிஸ்துவராக முடியும். இஸ்லாமியராக முடியும். ஆனால் ஒரு தேவர் அய்யராக முடியுமா ? 


நம் பொதுப்புத்தியில் முடியாது என்றே பதிந்துதுள்ளது.ஆனால் நிதர்சன வாழ்க்கையில் இது நடந்தே வருகிறது.


நான் வசிக்கும் பகுதியில் எனக்கு தெரிந்த கர்நாடக மாநில குடும்பம் வாழ்ந்து வருகிறது. தீவிரமான கிருஷ்ன பக்தர் ! காலையில் good morning என்று சொல்ல மாட்டார். "அரே கிருஷ்ணா " என்பார் . ஒருநாள் என்னிடம் வந்து நான் பிரமணனாகப்போகிறேன் என்றார். அவர் பிராமணர் அல்ல என்பது கூட அவர் சொல்லித்தான் இப்பொது தான்  தெரியும். இப்படி அவர் பலதடவை,பல மாதங்களாக சொல்லியிருக்கிறார்.


திடீரென்று ஒருநாள் அவருடைய நடை உடை பாவனையில் மாற்றம் . இடையில் பஞ்ச்கச்சம். ஜிப்பா தலையில் பின் பகுதியில் நீளமாக உச் சிக்குடுமி !  என்னிடம் "நான்பிராமணனாகதீட்சை பெற்றுக்கொண்டேன்"   என்று கூறினார் .அவர் மனைவியும் மாறியிருந்தார் எனக்கு ச்சரியமாக   இருந்தது.



பிரபு பாதர் என்று ஒரு மகான் இருந்தார்.அவர் தீவிரமான கிருஷ்ண பாக்தர். கிருஷ்ணர் ஒருவர் தன தெய்வம் வேறு தெய்வம் இல்லை என்று நம்பும் ஒரு மதத்தை  நிறுவினார். அமெரிக்காவிலும்,ஐரோப்பாவிலும், ஆஸ்திரேலியாவிலும் பரப்பினார் ஏராளமான வெள்ளைக்காரர்கள் இதில் இணைந்தனர்.


இந்த மதத்திற்கு INternaational society for Krishna conciusness (இஸ்கான் ) என்று பெயர். வெள்ளைக்கார கிருஷ்ண பக்தர்கள் பூணுல்.உச் சிக்குடுமி ,பஞ்ச்கச்சம் கட்டிக்கொண்டு வாழ்ந்தனர்> பிரபு பாதர் இவர்களுக்கு தீ ட் சை அளித்தார்.


வெள்ளைக்கார ஹென்றி பிராமணனாக லாம் என்றால் இந்தியர்கள் என் முடியாது?


நமதுகர்நாடக நண்பர் குடும்பமும் தீட்சை பெற்றது .




எனக்கு ஒரு யோசனை ! 


டாக்டர்கிருஷ்ணசாமி பேசாமல் தீட்சைபெற்று பிராமாணராகிவிட்டால்..!! 


இடஒதுக்கீடு பிரச்சினையே  வராதே !!!  










 

0 comments: