Sunday, July 21, 2019

(நாடக விழாவை முன் நிறுத்தி )


பி.ஆர் அவர்கள் 

நடித்த  

நாடகம்...!!!




1947 ஆகஸ்டு 15ம் தேதி இந்தியா விடுதலை பெற்றது. அந்த விடுதலைக்காக போராடி,அடிபட்டு மிதிபட்டு பிரிட்டிஷ்  போலாரிஸாரின் அடக்குமுறையால் சிறையில் அடைக்கப்பட்ட காங்கிரஸ் காரர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அதேசமயம் சிறையில் இருந்த கம்யூனிஸ்டுகள் ஆயிரக்கணக்கில் அந்த ஆகஸ்டு 15 ம் தேதி சிறையில்தான் இருந்தனர்.

பல்வேறு வழக்குகளில் அவர்கள் சிறைத்தண்டனை  வழங்கப்பட்டு சிறையில் இருந்தனர்.அந்த இளம் தோழர்களின் மன உறுதியை தளரசசெய்வதுதான் ஆட்ச்சியாளர்களின் நோக்கம் .

இதனை மாற்றி அமைக்க சிறைக்குள்ளே கடசி தலைவர்கள் பலநடவடிக்கைகளை  எடுத்தார்கள்.

தன வாழ்க்கையில் 9வருடம் சிறையிலும் மூன்று வருடம் தலைமறைவாகவும் இருந்து வாழ்ந்தவர ஐ.மாயாண்டி பாரதி . அவரருகில் அமர்ந்து பணியாற்றும் வாய்ப்பு பெற்றவர்களில் நானும் ஒருவன்.

"சாமா ! ரயில்ல ஏறினா "பெயில் ". "வான் " ல ஏறினா " ஜெயில் "அதுதான் அன்றைய வாழ்க்கை .என்பார் ஐமாபா. 

"எழுத படிக்க வகுப்புகள் நடக்கும். தமிழ் தெரியும்னா இங்கிலீஷ வகுப்பு நடக்கும். பாட  சொல்வாங்க . பாடல் எழுத சொல்வாங்க. கவிதை  போட்டி, கட்டுரை போட்டி, பேச்சு பொட்டி  நடத்துவாங்க." 

"சு.பாலவிநாயகம் னு ஓத்தார் இருந்தாரு.நெல்லை மாவட்டத்துக்கறாரு .தர்க்க வியல் பொருள்முதல் வாதத்தை குழந்தைக்கு பாலாடைல போட்டு தரமாதிரி வகுப்பை எடுப்பரூ. நம்ம என்.எஸ், பி ஆர் னு எல்லாரும் வகுப்பு எடுப்பாங்க ."

"நான் சும்மா இருப்பேனா. நாடகம் போடணும்னு ஆரம்பிச்சென் . பகத்சிங்  பற்றி எழுதி இருந்தேன். அத போடணும்னு ஆசை. எஸ்.பி.வி கிட்ட சொன்னேன்> அது பி ஆர் காதுக்கு போயிட்டு."

"நாடகம் புதுசா எழுத சொன்னாரு. நம்ம பெரிசு தான் எழுதித்து"

"யாரு பி;ஆரா?"

"இங்க பெரிசு யாரு. முத்தையா தானே "

"அவரும் அப்பா ஜெயிலதான் இருந்தாரு."

"9 சீன் வரமாதிரி ஒருமணிநேர நாடகத்தை எழுதினார். நடிகர்கள் வேணுமே. அப்பம் பி.ஆருக்கு 35 அல்லது 40 வயசுக்குள்ள இருக்கும். ஜம்முனு இருப்பாரு. ரெண்டு உதடும் சேர்ந்துக்கிட்டு மூக்குமுழியுமா இருப்பாரு,முகத்துல ஒரு சுழி இருக்கும்.என்ன ? கால்கள்தான் கொஞ்சம்  விந்தி நடப்பது. மற்றப்படி நடிக்க முடியும். நான் சும்மா யிருக்காம கதாநாயகன் பி ஆர் னு சொன்னேன். கூட இருந்தவங்க புறாவும் கைதட்டல் ஆதரிசங்க."

"பின்னால 60கள்ல  முத்தையா90 சீன்  கொண்ட   நாடகமாக்கி அபுத்தகமா போட்டாரு." என்று ஐமாபா முடித்தார்.

1968-69 ம் ஆண்டு பி.ஆர் அவர்களின் அறுபதாம் ஆண்டுவிழா  நடந்தது .அந்தவிழாவில் மதுரை ஓவியர் புத்தன்  அதேநாடகத்தை மூன்றுமணிநேரம் நடத்தினார். 

"செவ்வானம் " என்ற அந்த நாடகம் பற்றி அடுத்து எழுதுகிறேன்.

   

 

 

0 comments: