Saturday, July 27, 2019

(நாடக விழாவை முன் நிறுத்தி )






SAP  அவர்கள் ,

எழுதிய நாடகம் ,

"ரத்த புமி "...!!!



1946 லிருந்து 1951ம் ஆண்டுவரை நிஜாமின் தெலுங்கானாவில் விவசாயிகள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்தினர். அந்த தள நாயகன் பி.சுந்தரய்யா இந்த விவசாய பெருங்குடி மக்களுக்கு "தளபதியாக " இருந்து செயலாற்றினான் ."The Thelugana Strugle என்ற நூலையும் எழுதினான்.

அதனைப்படித்த தோழர்  SAP அதிலிருந்து ஒரு சிறு பொறியை எடுத்து வீரமிக்க நாடகமாக்கினார்.அதுதான் "ரத்தபூமி " .

நிஜாமின் ஆடசியில் விவசாயிகள் ரயத்துவாரி,மற்றும்ஜமிந்தாரி முறையில் இருந்தனர். ஜமீன்தார்,ஜாகிர்தார்,நவாபுகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரர்கள்.அந்த நிலத்தில்ப்பாயும்,நதி,நீர்நிலைகள் ,மலைகள்,மரங்கள்,காடுகள் ,விலங் குகள்,பறக்கும் பறவைகள், ஏன் வாழும் மனிதர்கள் உட்பட அவர்களுக்குச சொந்தம்.

அந்த மனிதர்கள் கொடூரமாக சுரண்டப்பட்டனர். பெண்டு பிள்ளைகள் சீரழிக்கப்பட்டனர். அப்படி வாழ்ந்த ஒருகிரமாத்து சிறுவன் இந் தகொடுமை பிடிக்காமல் எழுகிறான்> "குமரய்யா "  என்ற  அவன் வா லிபனாகும் பொது இவர்களை எதிர்த்து ஆயுதம் தாங்கி போராட முடிவு செய்கிறான்.

ஆரம்பத்தில் நிஜாமின் கூலிப்படையை எதிர்த்து போராடும் அந்த மக்கள்  சுதந்திரம் பெற்ற பிறகு, இந்திய ராணுவத்தை எதிர்த்து போரிடுகிறார்கள்.

குமரய்யாவின் போராட்டத்தை சித்தரிக்கும் நாடாகம்தான் "ரத்த பூமி "

தீர மிக்க இந்த நாடகத்தை எம்பிஆர்  இயக்கி இருந்தார்.உணர்சசி கரமான வசனமும் கதை அமைப்பும் கொண்டிருந்தாலும் , தமுக்கம் கலையரங்கின்  "போதாமை"யால் நாடகம் சோபிக்காமல் போயிற்று.

ஆனாலும் எம்பிஆர்  முழு நீள நாடக வடிவத்தையும் கைக்கொண்டார் என்பதற்கு "ரத்த பூமி" சாடசியாக திகழ்கிறது.  

இந்த சமயத்தில் தான் 1971ம் ஆண்டு மார்க்சிஸ்ட்  கட்ச்சி தன அகில இந்திய மாநாட்டை மதுரையில்  நடத்த முடிவு செய்தது.

அதனையொட்டி"People's  Theatre "மக்கள் நாடக மன்றம் என்ற குழு ஒன்றும் உதயமாகியது.


0 comments: