Sunday, July 28, 2019

(நாடக விழாவை முன் நிறுத்தி )



கட்சி காங்கிரசும்,

பீப்பிள்ஸ் தியேட்டரும் ....!!!




1971ம் ஆண்டு கடசி காங்கிரசைமதுரையில் நடத்த முடிவு செய்தது. "இநதியா புராவிலும் இருந்து பார்வையாளர்கள் வருவார்கள்>.தமிழகத்தின் கலாசார பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் விதமாக காலை நிகழ்ச்ச்சிகள் அமைய வேண்டும். ஒரு அருமையான நாடகத்த்தை போட வேண்டும் "என்று செயற்குழு உறுப்பினர் கே.முத்தையா அ வர்கள் கூறினார்கள்.

மாவட்டக் குழு எல்.ஐ.சி தோழர் நாராயண் சிங் அவர்களிடம் இந்த பணியை செய்யும்படி கேட்டுக்கொண்டது.

தனபால் பாண்டியன் ,மூ த்த எழுத்தாளர் ப.ரத்தினம், உபேந்திரநாத் ஜோஷி, காஸ்யபன்.மதுரை மில் , தொழிலாளிகள் துரைராஜ்,சேதுராமன்,  என்று ஒரு ஜாமாவை அழைத்து கே.எம் தலைமையில்  கூட்டம் போட்டார்.சிங்  அண்ணன் . 

இறுதியில் ரத்தினம் அவர்கள் எழுதிய திய நாடகத்தை போடுவதும்.அடா காஸ்யபன் இயக்குவது என்று முடிவு செய்தார்கள். 

நாடகத்தை ஒருகுழுவாக அமைத்து கடசி பின்புலமாக இருந்தால் நீடித்து நிலைக்கும் என்று காஸ்யபன் குறிப்பிட்டார்..

தனபால்பாண்டியன் தலை வராகவும், உபேந்திரன் செயலாளராகவும் குழு அமைக்கப்பட்டது.

வங்க நாடக நடிகர் உட்பல்  தத் அவர்களை பாலா ஈர்ப்பு கொண்ட காஸ்யபன் இந்த குழுவுக்கு "P eople's Theatre " என்றுபெயர்  வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.   

எல்லாரும் ஏற்றுக்கொண்டு அந்த பெயரில் குழு ஆரம்பமாகியது.

ரத்தினம் அவர்களை எழுதிய நாடகம் தான் "நெஞ்சில் ஒரு கனல்" என்ற முதல் நாடகமாகும்.

தனபால் பாண்டியன் கதாநாயகனாக வும்,துரைராஜபண்ணையாராகவும் நடித்தார்கள் . காஸ்யபன், சேதுராமன்,மின்வாரிய சுந்தரம்,கே.பி ஆறுமுகம் , ரங்கராஜ், என்று பலர் சேர்ந்தார்கள். ஒத்திகை மூன்று மாதம் நடந்தது.

அப்போது தன வங்கதேச விடுதலை போராட்டம் கடுமையான நிலையை அடைந்ததால் கடசி காங்கிரஸ் ஒத்திவைக்கப்பட்டது. நாடகக்குழு செய்வதறியாது திகைத்தது. குழுவின் மனதறிந்த நாராயண் சிங் இந்த நாடகத்தை வசூல்  நாடகமாக எட்வார்டு அரங்கத்தில் பட முடிவு செய்தார் .

அரங்கேறிய நாடகத்தை பத்த்ரிக்கைகள்புகழ்ந்தன. குறிப்பாக இந்தியன் எக்ஸ்பிரஸில் வி.டி. தாமஸ்  அவர்கள் மிகவும்சிறப்பான விமரிசனத்தை ழுடி இருந்தார்.பாரவையாளர்களின் பாராட்டும் சேர்ந்து கொண்டது .

இந்த நாடகத்தில் பிணமேடையை கவனிக்க எல்.ஐ சி தோழர்கள், ராஜகுணசேகர்,எஸ்.பி.கலயாணசுந்தரம், ராஜகோபால் ஆகியோர் வந்தனர்.பின்நாளில் ராஜ் குணசேகர்,நடிகராக ,சீஸை அமைப்பாளராக,இயக்குனராக பரிணமித்தாரா. கலையானி நடிகராக ,ஒப்பனைகலைஞராக மாறினார். 

பல்வேறு மாவட்டக்குழுக்கள் நாடகத்தை போட விரும்பின. கரூர் ,கோவை,திருப்பூர்,சேலம், தஞ்சை , நெல்லிக்குப்பம், நாகர் கோவில் என்று குழு தமிழகம் முழுவதும் அறிமுகமாயிற்று.   

பின் மேடை,திரைசீலை இசை ஒப்பனை என்று எல்லாவற்றையும் குழுவே செய்து கொண்டதால், மிகவும் குறைத்து சிலவில் நாடகங்களை போட முடிந்தது. இசைத்துறையில் சிறப்பாக பணியாற்றும் சந்திர சேகரன் (lic ) வந்து சேர்ந்தார்.

Lic  ஊழியர் சங்கத்தின் தலைவராக பணியாற்றியவர் சந்திர சேகரன்.

   




0 comments: