Tuesday, October 15, 2019

(அவர் நினைவில் )



ப.ரத்தினம் எழுதிய ,

சிறந்த நாடகம், 


"ஒரு கல் கனி கிறது " ...!!!




1977ம் ஆண்டு வாக்கில் தேசிய நாடக பள்ளி காந்திகிராம பல்கலையில் நாடக பயிற்சி முகாமை நடத்தியது. தமுஎச விலிருந்து  பரத்தினம் அவர்களும் நானும் கலந்து கொண்டோம்.

ஜெயந்தன்,அன்றைய மாணவர் மு.ராமசாமி,வேசங்கரன் ,என்ற ஞனி ,கலைஇயக்குனர் கிருஷ்ண  மூர்த்தி என்று பலர் கலந்து கொண்டனர்.

ஆத்யம் ரங்காச்சாரி, சிவராம கரந்த்  , பிரசன்னா, பி.வி கரந்த்,பிரேமா கர ந்த ஆகியோர் வகுப்பு எடுத்தனர்.பேராசிரியர் ராமானுஜம்,எஸ்.பி சீனிவாசன் ஆகியோர் நடத்தினர்.

ஸ்தானிஸ்லாஸ்க்கி யிலிருந்து,டென்னஸி வில்லியம் வரை, உத் பல்தத்,பதால்  சர்க்கார், பாசி, விஜய் டெண்டுல்கர் என்று நாடக ஆளுமையாக்களின் பரிசியம்முதன் முதலாக கிடைத்தது.

 குழந்தையின் ஆச்சிரியத்தோடு   ரத்தினம் அவர்கள் குறிப்புகளை எடுத்துக்கொண்டார்.

டெண்டுல்கரில் ஒப்பற்றநாடகம் "சகாராம் பைண்டர் ." மரத்தியநாடகத்தி ன் உச்சம் அந்த நாடகம்.

சகாராம் ஒரு லும்பன். சகல கேட்ட பழக்கங்களும் உள்ளவன்.நகரத்தின் கேடுகெட்ட ரவுடி. அவன்வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவம் அவனை புரட்டிப்போடுகிறது. மிகசிறந்த மனிதனாக அவனை மாற்றுகிறது. இதுதான் நாடகம்.

பிரத்தினம் மனதை பாதித்தஇந்தநாடகத்தை "ஒரு கல் கனிகிறது "என்ற அற்புதமான நாடகமாக எழுதினர்.

மதுரை பீப்பிள்ஸ் தியேட்டர் அரங்கேற்றினார்கள். 

எல்.ஐ.சி  ஊழியரான நீல கண்ட ஜோஷி இதனை இயக்கினார்.

இந்த குழு அரங்கேற்றிய முக்கியமான நாடகங்களில் இதுவும் ஒன்றாகும்.

 















1 comments:

ஸ்ரீராம். said...

இனிய நினைவுகள்.