Sunday, November 10, 2019




உச்ச நீதிமன்ற தீர்ப்பும் ,

 பாபர் மசூதியும்....!! 



மசூதி இடிக்கப்பட்டு இரண்டு சமூகங்களுக்கு இடையே பிரசசினை  உண் டான பொது இதனை பேசி தீர்க்க வேண்டும் என்று  இடது சாரிகள்  கருதினர் . அப்படி முடியாவிட்டால் இரண்டு கடசியினரும் நீதிமனறத்தின் தீர்ப்பினை  ஏற்றுக்கொள்வது தான் சரியாக இருக்கும் என்றும் குறிப்பி ட்டனர் .

இப்போது திப்பு வந்துள்ளது. முதலில் அமைதிகாப்பது மிகமுக்கியம் . தீர்ப்பை  அலசுவது என்பது ஒருபக்கம் நடக்கட்டும். நாட்டின் அமைதி என்பது மிகமுகக்கியமான ஒன்றாகும்.

தீர்ப்பின் முக்கியமான வற்றை  பார்க்கலாம்.

1992ம் ஆண்டு மதவெறியர்கள் பாபர் மசூதியை    இடித்தது ஒரு கிரிமினல் குற்றம் என்று தீர்ப்பு கிறுகிறது . அப்படியானால் அந்த குற்றமிழைத்தவர்களுக்கு என்ன தண்டனை ?

1949ம் ஆண்டு தொழுகை நடந்து கொட்டிருக்கும் கட்டிடத்திற்குள்  இரவு ராமர் பொம்மையை கொண்டுவைத்தது குற்றம் என்று தீர்ப்பு குறிப்பிடுகிறது. வைத்தவர்களை என்ன செய்ய ?

1991ம் ஆண்டு இந்திய அரசு ஒரு சட்டம்  கொண்டுவந்தது. அதன்படி இந்தியா சுதந்திரம் பெற்ற பொது எந்தெந்த வசுழிபாட்டு தலங்கள்  எந்தெந்த மதத்தினரிடம் இருந்ததோ அது அப்படியே இருக்க வேண்டமென்று அந்த சட்டம் குறிப்பிடுகிறது. பாபர் மசூதி மட்டும் அதிலிருந்து விளக்கு அளிக்கப்பட்டது> இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்கிறது தீர்ப்பு.. 

மசூதி இடிக்கப்பட்ட இடம் சர்சசைக்குரியதாக அறிவிக்கப்பட்டது யாருக்கு சொந்தம் என்பது வழக்கு. மசூதி கட்டப்படுவதற்கு முன்பு அங்கு கோவிலை இருந்தாக சொன்தை நீதிமன்றம் ஏற்க வில்லை . அதேபோல் நிலம் மசூதிக்கு சொந்தம் என்பதையும் ஏற்கவில்லை.

ஆகையால் நிலம் அரசுக்கு சொந்தமானது என்று தீர்ப்பு கூறுகிறது. 2.7 ஏக்கர் நிலத்தை அரசுக்கு சொந்தம் என்று தீர்ப்பு குறிப்பிடுகிறது. . இஸ்லாமியர்களுக்கு மசூதிக்காட்ட 5 ஏக்கர் நிலத்தை அவர்கள் விரும்பும் இடத்தை தேர்வு செய்து கட்டித்தரவேண்டும் என்கிறது தீர்ப்பு.

இறுதியாக அரசு வசம்  வந்துள்ள நிலத்தை  ஒரு அறக்கட்டளை அமைத்து அதன் மூலம் அங்கு  ஒரு கோவில் கட்டி  கொடுக்க வேண்டும் என்பதும் தீர்ப்பாகும். இது பெரும்பாண்மை இந்துக்களின் நாம்பிக்கை யை அடுத்து எடுத்ததாக தெரியவந்துள்ளது.

இந்த திப்பினை எதிர்த்து மாறிய பரிசீலனை செய்ய மீள்வார்கள் என்றும் குறைப்படுகிறது.

ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒருமனதாக தீர்ப்பு சொல்லியிருக்கும் பொது மறு  ஆய்வு நிராகரிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.


0 comments: