Saturday, November 23, 2019




ராமாயணம்,மகாபாரதம் , ஏன் ?

கிரேக்க புராணங்களும் 

என் பாட்டன் சொத்துதான் ...!!!




என் பால்ய நணபர் ஒருவர் கேட்டார் . 

பகவத் கீதை பற்றி  நீ என்ன நினைக்கிறாய் ?

"காலங்களில் வசந்தம் என்றும் ,மாதங்களில் மார்கழி என்றும் காண்ணதாசன் சொல்லும்போது வியாசன் கீதையில் பத்தாவது அத்தியாயத்தில் முப்பத்தி ஐந்தாவது பாடலாக அதையே சொன்னால் ஏற்கத்தான் வேண்டும்."என்றேன்.

"கீதையின் தத்துவ விசாரணையில் எனக்கு விருப்பம் உண்டு. அறிவு என்றால் என்ன என்ற கேள்வியை வியாசன் எழுப்புகிறான். அனுபவத்தின் சாறு தான் அறிவு என்கிறான். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இதக்கூறியுள்ளான்.  இது பகுதி உண்மை"

"மதுரையிலும்மாஸ்க்கோவிலும் சாலைகள் உள்ளன. புது தில்லியிலும் நியூ யார்க்கில் சாலைகள் உள்ளன. சமந்தரையில் தான் அவை அமைந்துள்ளன. பூமி தட்டையாக உள்ளது என்பது நமது அனுபவம்.. ஆனால் உண்மையில் பூமி உருண்டையாக   இருப்பது தான் யதார்த்தம்."

அனுபவம் மட்டுமே அறிவாகுமா ?

மகாபாரதம்,ராமாயணம் மட்டுமல்ல  கிரேக்க புராணங்களும், அரேபிய இரவுக்கதைகளுக் என் பாட்டனின் சொத்து> தட்ஷசீல பல்கலை மாணவன் விஷ்ணுதத்தன் எழுதிய "பஞ்சதந்திர கதை"களும்,எனக்கு பாத்தியதாயானவை."

கிரேக்க மொ ழி,பாரசீகம் ,அரபி,ஸ்வகிலி  ஆகியவற்றின் கொச் சைவடிவத்தை ஆராய்ந்து  பாலி , பிராகிருதம் ஆகிய பேச் \சு மொழியை சீர்திருத்தி  ஒரு செம்மொழியை உருவாக்கிய பாணினி என் முப்பாட்டன்"

கம்பனின் வெண்பாவும் ,வள்ளுவனின் முப்பாலும்,சிலப்பதிகாரம்,சீவக சிந்தாமணி,குண்டலகேசியும் என் ரத்தமும்  சதையுமாகும்.

இவற்றை மதவெறியர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பதை நான் ஏற்கவில்லை.  

எனக்கும் அவர்களுக்குமொரு வித்தியாசம் உண்டு. நான் கடவுளை   யும்,காதலையும் ஏற்கவில்லை. ஆனால் உலகத்தின் மிகசிறந்த காதல்  தம்பதியர் என்றால் ஜென்னியையும்  மார்க்ஸையும் தான் கூறுவேன் 

அந்த ஜெர்மன் நகரத்து அழகிகளில் ஒருவர் ஜென்னி. கன்னங்களிலும் தாடையிலும் கதுப்பாக சதையைக்கொண்டவன் மார்க்ஸ்..

உன் அழகுக்கு இவனை விட அழகன் கிடைத்திருபானே ஜென்னி என்று தோழிகள் ஜென்னியிடம் கூறு வார்களாம்.

இன்னும் ஆயிரம் ஆண்டுகளானாலும் இப்படியொரு அறிஞன் பிறக்கப்போவதில்லை என்ற என்  மார்க்கஸுக்கு காதலியாக மனைவியாக இ ருக்கரண்டி பைத்தியக்காரிகளே என்று பதிலளிப்பாராம் ஜென்னி. 

வறுமை அவளை வாட்டியது> பட்டினியா இருந்தாலும் ம் பிள்ளைக்கு பால்கொடுப்பாள் .பால் குடிக்கும் பிள்ளை முகம் பார்த்து பசிமறைப்பாள் " என்றான் கவிஞன் .

ஜென்னி மார்க்ஸைவிட ஐந்தாறு வயது மூத்தவள்.முயங்கும்  பொது "மார்க்ஸ் ரெம்ப வெட்கப்படாதே. நீ ஜெட்டி கூ ட போடாமல் மணியாட் டிக்கொண்டு ஓடும் போதே உன்னை  பார்த்தவள் நான். " என்பாளா ம் ஜென்னி  .இருகைகளாலும் மார்க்ஸ் முகத்தை முடிக்கொள்வானாம்.வெட்கத்தில்.

இவர்கள் வறுமையை அறிந்த நன்பர் கொங்சம் கோதுமைமாவும் சில ஷில்லிங்குகளையும் எடுத்துக் கொண்டு அவர்களை பார்க்கசென்றிருக்கிறார.அங்கு அவர்பார்த்தக்காட்ச்சி அதிர்சசி அளித்துள்ளது.

ஷேகஸ்பியரின் ரோமியோ ஜூலியட் நாடக வசனத்தை மார்க்ஸ் ரோமியோவாகவும் ஜென்னி ஜூலியட்டாகவும் பேசி நடித்துக்கொண்டிருக்க குழந்தை பெற்ரோரைப்பார்த்து சிரித்துக்கொண்டிருந்ததாம்.

ஜென்னியை மறக்க முடியாது. !

மார்க்ஸையும் மறக்க முடியாது !!

மார்க்சிசத்தையும் தான்!!!








2 comments:

vijay said...

ஐயா உங்களின் பதிவுகளை தவறாமல் படித்து வருபவன்.நீண்ட நாட்களாய் தங்களின் புதிய பதிவுகள் எதுவும் வரவில்லை.தாங்கள் நலமாய் இருக்கின்றீர்கள் தானே.உங்களின் எழுத்துக்களுக்காய் பார்த்திருக்கின்றேன்.நன்றி.

சிவகுமாரன் said...

நலமா அய்யா