Thursday, June 09, 2011

இதனை இவன் கண் விடல் ........

இதனை இவன் கண்விடல் .....
எந்த ஒரு காரியத்தையும் அது வெற்றி பெற வேண்டுமானால் தகுதியான நபரிடம் விடவேண்டும் . ஒரு குறிப்பிட்ட விஷயத்தில்வெற்றியடைபவர்வெறு விஷயத்தில் அனுபவமின்மையால் சொதப்பிவிடலாம்.அதனால் தான் " குறைந்த விஷயம் பற்றி அதிகமாகத் தெரிந்தவனே நிபுணன் "என்கிறார்கள் . An expaert is one who knows more and more about less and less . கண்வைத்தியரிடம் இதய நோய்க்கு மருந்து கெட்பதில்லை.
கள்ளப்பணம் பற்றி பாபா ராம்தேவ் பெசிவருகிறார்.இந்த நெரத்தில் கள்ளப்பணம் பற்றி அதனுருவாக்கம்பற்றி தெரிந்து கொள்வது நல்லது.வங்கிகள் முலமாக. . வங்கிகளால் நடத்தப்படுகிறது . personnel Banking என்று இருக்கிறது நம்முடைய தொலை பெசிகட்டணம் மின் கட்டணம் சொந்தமாக கடன்,மற்றும் தனிப்பட்ட பணம்செலுத்தும் கடமை களை வங்கிகளே செய்து அதற்காக சிறு தொகையை வாங்கிக்கொள்வார்கள் இதுதான் நமக்குத் தெரிந்தது . .
உங்கள் பணம் வெள்ளையா, கருப்பா,என்று கெட்காமல் ,அதனை கண்ணை இமை காப்பது பொல காத்து வரி இலா நாட்டில் சேர்த்து அங்கு அதைக்குட்டி பொடவைக்கும் வங்கிகள் உள்ளன. City Bank . போன்ற வை இதில் சிறந்தவை.இப்படி ஒருவங்கி சேவை அமெரிக்காவுக்கு தேவைப்பட்டது .அமெரிக்கக் கம்பெனிகளின் நலனை பாதுகாக்க அரசியல்தளைவர்கள், பொம்மை ஆட்சியாளர்கள் , சர்வாதிகாரிகள் என்று அவர்களுக்கு வாக்கரிசிபோட சி ஐ ஏ உருவாக்கிய திட்டம் தான் இது.
தென் அமெரிக்காவிலும் ,மத்திய அமெரிக்காவிலும் இவர்கள் ஆரம்பித்த கூத்தின் பலனை அனுபவிக்கிறோம்.சரித்திரம்படித்தவர்களுக்கு தெரியும் .மத்திய அமெரிக்காவில அன்னாசிபழம் அபரிமிதமாக விளையும்.தென் அமெரிக்காவில்வாழை பழம் விளையும் .இவற்றை வாங்கி விற்பவை அமெரிகக்கம்பெனிகள் இந்தக் கம்பெனிசொல்லும் நபர்கள் த ன் இந்த நடுகளின் ஜனாதிபதி, பிரதமர் அதனால் இவற்றிர்க்கு அன்னசிபழகுடியரசு என்றும் வாழைப்பழ குடியரசு என்றும் கூறுவார்கள். இந்த தலைவர்கள் உள்நாட்டில் கொள்ளை யடித்த பணத்தை பாதுகாக்க உருவாக்கப்பட்டது தான் புதிய வங்கி சேவைகள்.இன்று அவை பட்டைதீட்டி நன்கு பளபளபாக்கப்பட்டுள்ளன.
காலப்போக்கில் பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகள் அந்தந்த நாட்டு தலைவர்களுக்கு போட்ட வாக்கரிசிதான் இவை.இதனை அரைத்தலைப்பா மன்மோகனாலோ , அரைவழுக்கை சிதம்பரத்தாலோ நினத்தாலும்திருப்பி கொண்டுவர முடியாது.(காரணம் !!!!!)
பின்பாபா ஏன் இந்தத்தாவு தாவுகிறார்.
இவர் ஹரியானாவை சேர்ந்த யாதவகுல சீலர். தற்போது 1000கோடி சொத்துக்காரர். ஸ்காட்லந்து அருகில் சொந்தமாக ஒரு குட்டிதீவு . சொந்தமாக இரண்டு விமானங்களுள்ளன. இவருக்கு ஆலோசகர்களாக அரியானா உயர்நிதி மன்ற ஒய்வுபெற்ற நீதிபதி பிரீதம்பாலும்பத்திரிகையாளர் தெவெந்திர சர்மாவும் உள்ளனர். முன்னாள் உளவுத்துறை தலவர் அஜித் தொவில் இருக்கிறார். பத்திரிகையாளர் வெதபிரகாஷ் (ஆர்.எஸ்.எஸ்.) இருக்கிறார்.பக்கா ஆர்.எஸ்.எஸ்.காரரான குருமூர்த்தி இவருக்கு ஆலோசனை அளிக்கிறார்.
எல்லாவற்றிர்க்கும் மேலாக உமாபாரதியின் சேக்காளியான கோவிந்தாசார்யாதான் இவருடைய நெருங்கிய நண்பர் .அவருடைய பாரத் ஸ்வபிமான் அறக்கட்டளையும்,ஆர்.எஸ்.எஸ். இரண்டு அமைப்புகளும் தான் இந்த ராம் லீலா கூட்டத்தை கொண்டுவந்தது.
திருடன் ஓடும் பொது "திருடன் திருடன்"என்று ஊவிக்கொண்டு பொவான். நாமும் அவன்பின்னே ஒடி களைத்து விழுவோம்.
பாபாவின் மொழிக்கொள்கை என்ன? சட்டங்களை இந்தியில் கொண்டு வர வேண்டும். .இந்திதன் ஆட்சி மொழியாக வேண்டும்
அயொத்தியில் ராமர் கொவில் கட்ட வேண்டும். அதற்காக சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கத்தயார்.
குஜராத் கலவரம் சரிதான்.
பாபா இந்துத்வா வாதி அல்ல. அவர்.ஆர்.எஸ்.எஸ் .அல்ல என்று அவரே கூறியிருக்கிறார்.அவர் பா.ஜ.க அல்ல. அதவானி சொல்கிறார்.நம்புவோம்

3 comments:

அப்பாதுரை said...

இது எல்லாமே புதிது. ராம்லீலா சாமியார் யோக்யரா? மைதானத்திலிருந்து பாதி ராத்திரியில் மக்களைத் துரத்தி அடித்தது உறுத்துகிறது.

hariharan said...

எல்லாமே நாடகமாத்தான் தெரியுது, ஒருவேளை கார்ப்பரேடுகளும் அவர்களோட மீடியாவும் சேர்ந்து காங்கிரஸை வீட்டுக்கு அனுப்பி மாத்தா மதவெறி கும்பலை கொண்டுவர முயற்சி பண்ணுறாங்களோ?

சிவகுமாரன் said...

என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது...