Tuesday, November 20, 2012

அந்த மருமகனின் நூறாவது  ஆண்டு இது .....! (2)



அந்த மறுமகனின் நூறாவது ஆண்டு இது......! (2)










தெற்கு குஜராத்திலிருக்கும் பரூச் மாவட்டத்திலிருந்து பமபாய் வந்த ஜஹாங்கீர் ஃபர்தூன் காந்தியின் ஐந்தாவது மகன் தான் ஃபரோஸ். கப்பல் கட்டும் தளத்தில் இஞ்சினியராக இருந்த தந்தை இறந்ததும் தன் தாயுடன் அலகாபாத்தில் இருக்கும் சித்திவீட்டில் தங்கி படித்தார்.காந்தி என்பது அவர்கள் குடும்பப் பெயர்.



தம்பதியர் அலகாபாத்தில் வசித்தனர் மத்திய மாகாணத்தில் (தற்பொது உ.பி).விவசாயிகள் குத்தகை,வாரம் ஆகியவ்ற்றால் படும் துன்பத்திலிருந்துமீட்க அவர்களுக்காக பெராட்டத்தில் இறங்கினார் ஃபெரோஸ். 1944ல்மகன் ராஜீவ் பிறந்தான்.1946ல் இரண்டாவது மகன் சஞ்சய் பிறந்தான்.மத்திய மாகாண சட்டமன்ற உறுப்பினராக ராஜ்கர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். மாமனாரோடு (நேரு) சமரசம் ஆனது. அவர் ஆரம்பித்த Natinal herald பத்திரிகையை கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.



சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலில் ரே பரேலி தொகுதியிலிருந்து நாடாளுமன்றம் சென்றார்.புதிய இந்தியாவின் தொழில் வளர்சிக்கு பொதுத்துறை தான் சரி என்ற நம்பிக்கை கொண்டிருந்த அவருக்கு இந்திய முதலாளிகளின் தகிடுதத்தங்களை ஏற்கமுடியவில்லை.முதலாளிகள் ஒவ்வொருவரும் ஒரு வங்கி,ஒரு இன்சூரன் கம்பெனி வைத்துக்கொண்டு சூரையாடுவதை தடுக்க விரும்பினார்.



"Banking is dealing with some bodies money.Insurance is dealing with no bodies money" என்றார்.



டாடவுக்கு சென்ரல்வங்கியும்,நியூ இந்தியாவும்,பிர்லாவுக்கு யூகோ வங்கியும்,இன்சூரன் கம்பெனியும்,செட்டியாருக்குஇந்தியன்வங்கியும்.யுணைடெட் இந்தியாவும் என்று கர்ஜிப்பார்.ராமகிருஷ்ண டால்மியா வங்கிப்பணத்தையும்,இன்சூரன்ஸ் பணத்தையும் மோசடியாக களவடி Beennat column co (இன்றய டைம்ஸ் ஆஃப் இந்தியா) வாங்க முயன்றதை தடுத்தார்.இந்திய வரலற்றில் முதலும் கடைசியுமாக ஒரு முதலாளியை ராமகிருஷ்ண டால்மியாவை சிறைக்கு அனுப்பி "களி" திங்க வைத்தவர் ஃபேரோஸ்.



1956ம் ஆண்டு இன்சூரன் துறைதேசியமயமாகாப்பட்டு ஏல்.ஐ.சி. உருவாக முக்கியமானவர் அவர்

அதன் பிறகும் முதலாளிகள் மறைமுகமாக இன்சூரன்சில் சூதாடுவதைக் கண்டு .வெகுண்டார் நாடாளுமன்றத்தில்குரல் எழுப்பினார். அப்பொது நிதி அமைசராக இருந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி "பிரதமரின் மடியில் இருந்து கொண்டு நாய் குட்டி குலைக்கிறது. நான் காங்கிரசின் தூண்" என்றார்.



"ஒரு தூணைப் பார்த்தால் நாய் என்ன செய்யுமே அதனை செய்கிறென்" என்றார் ஃபெரோஸ். " முந்திரா" ஊழலை அம்பலப்ப்டுத்தி டி.டி.கிருஷ்ணமாச்சாரியை ராஜினாமாசெய்யவைத்தார்.



இந்திய எண்ணை வளத்தை முதலாளிகள் சூரையாடாமல் தடுக்க இந்திய ஆயில் கார்ப்பரேஷனை உருவாக்குவதில் அவருடைய பங்கு மகத்தானது..



1960ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடந்தார்.



1912ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ம் தெதி பிறந்த ஃபேரோஸ் ஜஹங்கீர் காந்தி இந்திய மக்களின் செல்ல மறுமகனும் ஆவார்   

1 comments:

அப்பாதுரை said...

கொஞ்சம் கூட அறியாத விவரம். ஊழலும் சுயநலமும் குடும்பத்தில் எங்கிருந்து வந்தது? தாய் வழிச் சீதனமா?