Thursday, September 19, 2013

"நாத்திகம் " எப்போது தோன்றியது ......?

சீத்தாராம் எச்சூரி விளக்கம் !!!


"நாத்திகம் " எப்போது தோன்றியது என்ற கேள்வியை எழுப்பி அதற்கான விளக்கத்தையும் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் சீத்தாரம் எச்சூரி விளக்கம் அளித்துள்ளார் !

"இந்துஸ்தான் டைம்ஸ் " பத்திரிகையில் மூட நம்பிகையை எதிர்த்து போராடிய நரேந்திர தபோல்கர் பற்றி அவர் எழுதியுள்ள காட்டுரையில் நாத்திகம் பற்றி விவரிக்கையில் அதன் தோற்றம் பற்றி விளக்கியுள்ளார் !

"பகுத்தறிவாளர்களையும், மூட நம்பிக்கை எதிப்பாளர்களையும் இவர்கள் கடவுளுக்கு எதிரானவர்கள் என்று பிரச்சாரம் செய்தே மதத்தை தங்கள் ஆளுமையில் வைக்கிறார்கள் ! "நான் மத நம்பிக்கையை எதிர்ப்பவன் அல்ல " என்று தபோலகர் அறிவித்தும் அவரை சுட்டுக் கொன்று விட்டர்கள் ! மக்களிடையே மூட நம்பிக்கையை வளர்த்து அதில்குளிர்காய நினைக்கும்போலி சாமியார்களை  எதிர்த்தே நான் போராடுகிறேன் என்று அறிவித்தவர் தபோல்கர் !

பகுத்தறிவு வாதம் என்பது இந்திய தத்துவ மரபில் இருந்தே வந்துள்ளது ! மாயாஜாலங்கள் மூலம் மக்களை ஈர்ப்பது தவறு என்று புத்தர் கூறியுள்ளார் !
பௌத்தர்களின் வாழ்க்கை முறையை நெறிப்படுத்தும் "பால-விநய- தீபிகா என்ற நூலில் இது குறிப்பிடப்பட்டுள்ளது !

புலன் கடந்த அறிவியல் தோன்றிய(Metaphysics ) போதே பகுத்தறிவும் தோன்றியது என்கிறார் " சித்திரம் எச்சூரி ! மேலும்

" மேற்கத்திய தத்துவ ஞானிகள் கி.மு 6 ம் நூற்றாண்டில் துருக்கி நாட்டில் மெலிடஸ் நகரில் வாழ்ந்த " தேம்ஸ் " என்ற அறிஞர்தான் இதன் மூலவர் என்று கருதுகிறார்கள் !

இந்திய வலாற்றாளரான தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா கி.மு 10-7ம்நூற்றாண்டிலேயெ நாத்திகக் கருத்துகள் உருவாகிவிட்டதாக கருதுகிறார்!
 இதற்கு சான்றாக "சத் பத  பிரம்மனா " என்ற நூலை சுட்டிக்காட்டுகிறார் ! இந்த நூலில் "உட் டலக அருணி " என்ற அறிஞர்   பற்றி கூறுகிறார் ! இவர் அறிவுக் கோட்பாட்டை உருவாக்கியவர் ! எந்த ஒன்றையும் "உற்றுநோக்கி " அறிந்து கொள்ள வேண்டும் என்பது தான் அறிவியல் கோட்பாடு !

புத்தர் காலத்திற்கு முன்பே நாத்திகக் கருத்துகள் இருந்தன என்றும் அதற்கு சான்றாக "சந்தோக்கிய " உபநிஷத்தை சுட்டிக் காட்டுகிறார் சட்டோபாத்தியாயா!  "என்று சீத்தாராம் எச்சூரி  கூறியுள்ளார் !!

(முழுமையான கட்டுரையின் தமிழாக்கம் தீக்கதிர் பத்திரிக்கை 19-9-13 ல் வந்துள்ளது )









4 comments:

'பரிவை' சே.குமார் said...

அழகாகச் சொல்லியிருக்கிறார்.
பகிர்வுக்கு நன்றி ஐயா.

கரந்தை ஜெயக்குமார் said...

அறியாத செய்திகளை அளித்தமைக்கு நன்றி ஐயா

hariharan said...

தோழர், அறிஞர் ‘தேல்ஸ்’ என்பதை தேம்ஸ் என்று குறிப்பிட்டுள்ளீர்களா?

kashyapan said...

நன்றி தோழர் ஹரிஹரன் அவர்களே! இந்தியா வந்து விட்டீர்களா ? ---காஸ்யபன்.