Monday, September 09, 2013

பாரதியின் 

மரணம் அவனைக் காப்பாற்றியது ......!!!!

இந்திய சதந்திரப் போராட்டத்திலும், கங்கிரஸ் கட்சியின் வரலாற்றிலும்"சூரத் " நகரில் நடந்த மாநாடு மிக முக்கியமானது !
படித்த மத்தியதர மக்களுக்கும் ,சட்டம் பயின்ற இந்தியர் (natives ) களுக்கும் அர்சுபதவி,முன்சீப்பு,மாஜிஸ்டிரேட் , நீதிபதி பதவிகளை தரவேண்டும் என்று தீர்மானம் போட்டுக் கொண்டிருந்த மகாசபைதான் காங்கிரஸ் !

"முட்டாள்களே! இது  நம்நாடு ! எதற்கு வெள்ளைக் காரனிடம் கெஞ்சவேண்டும் ! என் நாட்டை நானே ஆண்டு கொள்கிறேன் ! சுதந்திரம் என் பிறப்புரிமை அதனை வாங்குவோம் !" என்று சூரத் காங்கிரஸில் கர்ஜித்தார் பாலகங்காதர திலகர்!

இதனை  ஆதரித்து திலகரோடு நின்றவர்கள்  வ.உ.சிதம்பரம் ,பாரதி ஆகியோர்  மாநாட்டில் இவர்கள் குரல் எடுபடவில்லை ! படித்த காங்கிரஸ் தலைவர்கள் இவர்களை ஆதரிக்கப் பயந்தார்கள் ! எற்கனவே தீவிர வாதிகள்,மிதவாதிகள் என்று இருந்தது வெளிப்படையாக வெடித்தது !

சுதந்திரம் கேட்டவர்கள் தீவிர வாதிகள் !!!

கேட்டால் ஆட்சியாளர்களின் கோபத்திற்கு ஆளொவோம் ! பதவியோ பட்டமோ கிடைக்காது ! ராவ் பகதூர்,திவான் பகதூர் ஆகமுடியாது ! முன்சீபு,மாஜிஸ்டிரேட் கனவு நனவாகாது !என்று வாயை பொத்திக்கொண்டிருந்தவர்கள் பெரும்பான்மையினர் !

அதுமட்டுமல்ல ! சுதந்திரம் வேண்டியவர்களை "தீவிரவாதிகள் என்று ஒதுக்கி வைத்தனர் ! இதுதானே பிரிட்டிஷ் அரசுக்கு வேண்டும் !

சுதந்திரம் வேண்டியவர்களைபிரிட்டிஷ் அரசு பலவகையிலும் துன்புறுத்தியது ! அவர்கள் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ,தேச விரோத நடவடிக்கையில ஈடு பட்டார்கள் என்று வழக்கு போட்டது ! 

பாலகங்காதர திலகர் மீது தேசத் துரோக வழக்கு போடப்பட்டது !
காங்கிரஸ் வக்கில்கள் யாரும் அவருக்காக வாதாட முன்வரவில்லை !பயம் ! "பிடிச்சு  உள்ள போட்டுட்டான்ன்ன !"

அப்போது தைரியமாக  திலகருக்காக ஒரு இளைஞர் வாதாட வந்தார்! 
அவர் தான் முகம்மது அலி ஜின்னா !!!

 தமிழ்நாட்டில் சுதந்திரம் என்பிறப்புரிமை என்று கர்ஜித்தவர்களிம் வ.உ.சி,பாரதி, சிவா ஆகியோர் ! 

வ.உ.சி.மீதும் தேசத்துரோக வழக்கு போடப்பட்டது ! சிவா மீது வழக்கு ! பாரதி தப்பி பாண்டிச்சேரி சென்றுவிட்டார் !

சிவாவும், வ.உ.சி.யும் தண்டிக்கப்பட்டனர் ! வ.உ.சியின் பட்டம் பறிக்கப்பட்டது ! இரன்டுகப்பலுக்கு சொந்தக்காரரான அவருடைய கப்பல் கள் ஏலம்போடப்பட்டன  ! சிறையிலிருந்து வந்த வ.உ.சிக்கு நிற்க நீழலிலை ! நெல்லை மாவட்டத்திற்குள் போகாக்கூடாது என்று உத்திரவு !

இரண்டு குழந்தைகளோடும்,மனைவியோடும் சென்னை வந்த வருக்கு சோறு போட ஆளில்லை !
பலசரக்கு சாமான்களை வாங்கி வீடுவீடாக விற்று ஜீவனம் !
ஒருகட்டத்தில் தள்ளு வண்டியில்  "மண்ணெண்ணை " விற்றார் !

மைலாப்பூர் காங்கிரஸ் வக்கீல்கள் எவரும் எட்டிப்பார்க்கவில்லை !

நீதிக்கட்சிக்காரரகள் அவர் மகனுக்கு அரசு வேலை  தர ஆசைகாட்டினார்கள் ! 
தேச துரோக குற்றத்தில் சிறை சென்ற என்மகனுக்கு பிரிட்டிஷ் அரசு உத்தியோகமா ? என்று வியந்தார்  வ.உ.சி.! பெரியாருக்கு கடிதம் எழுதுங்கள் ! எல்லாம் நல்லபடியாக முடியும் என்று ஆலோசனை சொன்னார்கள் !

எழுதினார் ! சேலத்தில் நடக்கும் மாநாட்டில் வந்து பேசுங்கள் ! என்றர் பெரியார் ! சேலம் போனார் ! மாநாட்டில் பேசச்  சொன்னர்கள் ! " இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கக் கூடாது  ! அப்படியே கொடுத்தாலும் dominian அந்தஸ்து மட்டும்கொடுங்கள்  " என்று அவர்களுடைய கொள்கையை ஆதரித்து பேசினார் !

நல்லகாலம் ! பாரதி இல்லை !

இருந்திருந்தால் ஐந்தாம்  ஜார்ஜ் மீது  பிள்ளைத்தமிழ் பாடி காலில் விழச் 
செய்திருப்பார்கள் !

இந்த அவலத்திலிருந்து பாரதியின் மரணம் அவனைக் காப்பாற்றியது ! 










































































6 comments:

அப்பாதுரை said...

shocking!

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களுடைய தகவல் அதிர்ச்சியாக இருக்கின்றது ஐயா. சிறையில் இருந்து வெளிவந்ததும் வ,உ,சி பட்ட துயரங்களைப் படித்திருக்கின்றேன். ஆனால் சேலத்தில் பேசிய செய்தி அதிர்ச்சிதான் ஐயா.

சிவகுமாரன் said...

அதிர்ந்து போனேன்.
இறுதி வரிகள் மரண வலியைத் தந்தன.

'பரிவை' சே.குமார் said...

அதிர்ச்சித் தகவல்...

Unknown said...

Eirkhanavae Bharathicku Kavi Tagore udan oru poatti schinthanai irunthu kondu thaan irunthathu.Athu bengali vs tamil enkhindtra reethiyil kooda aminthirukalam. Tagore petra nobel parisai madurai victoria mandapaththil sabhaiyai kootti sabhai naduvil parisai vaippoam. naanum kavi paadukhiraen avarum kavi paadattum. Sabhaiyar yaarukhu theerppu sollukirarkhalo avarkhal parisai eduthu kollalam endtru sonnavar bharathi. Intha pottiyin uscham neenghal sollukira climaxkku kooda bharathiyai kondu vanthirukkalaam. VOC paesiya thakhaval enakku puthiya thakaval, mikuntha athirschi.

Unknown said...

Eirkhanavae Bharathicku Kavi Tagore udan oru poatti schinthanai irunthu kondu thaan irunthathu.Athu bengali vs tamil enkhindtra reethiyil kooda aminthirukalam. Tagore petra nobel parisai madurai victoria mandapaththil sabhaiyai kootti sabhai naduvil parisai vaippoam. naanum kavi paadukhiraen avarum kavi paadattum. Sabhaiyar yaarukhu theerppu sollukirarkhalo avarkhal parisai eduthu kollalam endtru sonnavar bharathi. Intha pottiyin uscham neenghal sollukira climaxkku kooda bharathiyai kondu vanthirukkalaam. VOC paesiya thakhaval enakku puthiya thakaval, mikuntha athirschi.