Monday, February 24, 2014









பள்ளி பாட புத்தகம் - குஜராத் மாடல் !!!



1.அக்டோபர்  30 ம் தேதி காந்தி இறந்தார் !
2. இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் அமெரிக்காமீது அணுகுண்டை வீசியது !
3.தாதாபாய் நவ்ரோஜி,சுரேந்திரநாத் பானர்ஜி , கோபால கிருஷ்ண கோகலே ஆகியொர் "டெரரிஸ்ட்டு "கள் !
4.1947ம் ஆண்டு இந்தியாவை பிரித்து இந்துகுஷ் மலையடிவாரத்தில் இஸ்லாமாபாத் என்ற நாட்டை இஸ்லாமியர்களுக்காக  உருவாக்கினார்கள் !

எட்டாம் வகுப்பு ஆங்கில வழி கல்விபயிலும்மாணவர்களுக்கான புத்தகத்தில் எழுதப்பாட்டுள்ள சில சாம்பிள்கள் ! social  science english medium )

எல்லாம் அந்த குஜராத் மாநிலத்தில் தான் !

அந்த பள்ளிப்பாட புத்தக போர்டு தலைவரிடம் " ஏல ! அம்புட்டும்தப்பா  இருக்குடா ! புத்தகத்தை வாபஸ் வாங்கிங்கல ! " நு சொன்னா '"இவ்வளவு நளைக்கிபொறவு அது எப்படி முடியும் ! தவறுகள சுட்டிக்காட்டி "இண்டர்னெட்ல  போட்டுவிடுகிறோம் "நு சொல்லிவிட்டாரு ! அந்த கெட்டிக்காரன் பேரு  நிதின் பெதானி !

இப்பமாவதுகுஜராத்தோட   போச்சு அண்ணே !

சவத்துப்பய இந்திய பிரதமரானா நம்ம வூட்டு பிள்ளைகளும் இதத்தான படிக்கணும் !

நாகர்கோவில்ல  நமோ பேரவை ஆரம்பிச்சுருக்கான்களாமே! அவங்க  கிட்ட பிள்ளைகள  டிவிஷன் படிக்க அனுப்பலாம் ! 

ஆனா பயமாயிருக்கு !!

நமோ டிக்கடைல டீ அடிக்க விட்டுருவாங்களோனு !!!
























   




 

4 comments:

அப்பாதுரை said...

ஹா..ஹா.. சிரிப்பு வரலே.. ஹார்ட் அடேக் வருது.

இது போல் பாடம் படித்த பெற்றோர்களும் ஆசிரியர்களும் பிள்ளைகளுக்கு என்ன சொல்லிக் கொடுப்பார்கள்?

நாலு கை வச்சுக்கிட்டு உலகத்தைக் காப்பாத்துறாரு நாராயணன்னு சொல்லிக் கொடுக்குற மாதிரி தான்.

கரந்தை ஜெயக்குமார் said...

இவ்வளவு அபத்தங்களா
இது வரலாற்றின் போக்கினையோ மாற்றிவிடும் முயற்சியாக அல்லவா தெரிகிறது.

'பரிவை' சே.குமார் said...

இத்தனை அபத்தமா?

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

வணக்கம் காஷ்யபன். நலம்தானே? இந்த குஜராத் பாட விவகாரம் தமிழ்நாட்டில் யாருக்குமே தெரியலயே! வேற என்னென்ன இருக்குன்னு தெரிவிச்சிங்கன்னா முழுவதுமாக என் வலைப்பக்கத்திலாவது போடலாம். உங்கள் வலைப்பக்கத்தை என் இணைப்பில் தந்திருக்கிறேன் பார்க்க வே்ண்டுகிறேன். நன்றி