Wednesday, December 09, 2015

ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு ,

"சாந்தா" என்ற அக்கா உண்டு !!!.



தசரதனுக்கும் கோசலைக்கும் முதலில் பிறந்தது  ஒரு பெண் குழந்தை ."சாந்தா " என்று பெயரிட்டு   கோசலை  வளர்த்து வந்தாள். தசரதனுக்கு அதன் பிறகு குழந்தை பிறக்க வில்லை.அதனால் அவன் குழந்த சாந்தாவை வெறுத்தான்.இதனால் கோசலை  தசரதனை ஒதுக்க ஆரம்பித்தாள்.

ஆண் வாரிசுக்காக தசரதன் சுமித்திரை ,கைகேயி ஆகிய ஒரு பெண்களை மணந்தான்.எதுவும் பலிக்க வில்லை . வசிஷ்டரிடம் ஆலோசனை கேட்டான்.
விபாந்தகன் என்ற முனிவருக்கும் ஊர்வசிக்கும்பிறந்த குழந்தை ரிஷ்யசிருங்கர் என்று வளர்வதாகவும்கூறினார் விபந்தகன் தன்மகனுக்குபெண்வாசனையெ காட்டாமல்வளர்த்து வரவதாகவும் அவன் வந்து புத்திர காமேஷ்டி யாகம் செய்தால் தசரதனுக்கு ஆண்வாரிசு பிறக்க வாய்ப்பு உண்டு என்று கூறுகிறார்.

தஸ்ரதநின்மகள்  "சாந்தா" அழகான அரசிளம் குமரியாக நிற்கிறாள். தன் தந்தையின் ஆசை நிறைவேற ரிஷ்ய சிருங்கரை மயக்கி,மணந்து புத்திர காமேஷ்டி யாகத்தை செய்விக்க  உதவுகிறாள்..

கோசலைக்கு ராமனும்,கைகேயிக்கு பரதனும், சுமத்திரைக்குலட்சுமணன்,சத்துருக்கனன்  என்று இரண்டு  குழந்தைகளும்பிறக்கிறார்கள்.

என்னகாரணமோ ? தசரதன் தன மகன்களிடம் அவர்களுக்கு ஒரு மூத்த சகோதரி உண்டு என்பதை கூறாமல் விட்டு விட்டான்.

இது உனக்கு எப்படி தெரியும் என்று கேட்காதீர்கள்.!

"ராமாயணத்தில்  புதிய உறவுகள் " என்று ஒரு தொலைக்கட்சி தொடர் வரப்போகிறது.


மோகன் பகவத், நரேந்திர மோடி, எல்லாரும் பார்க்கத்தான் போகிறார்கள்.

நம்ம ஊர் வீரத்துறவி நேரடியாக பார்க்க மாட்டார்.

ஒளிந்து இருந்து பார்ப்பார் !!!

1 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

இதுவரை அறியாத செய்தி ஐயா