Wednesday, March 22, 2017






"அறிவு சார் உரிமையும் ,

அதன் பின்  வந்த சர்ச்சையும்.. "





முகநூலின் எந்த பக்கத்தை திருப்பினாலும் இளையராஜாவையோ, SPB யையோ குறிப்பிடாமல் எந்த பதிவும் வருவதில்லை என்ற நிலைமை உள்ளது. Intelectual Property Rights பற்றி தெரிந்தவர்கள்     மவுனம் காக்க மற்றவர்கள் அவர்கள் மனம் போன போக்கில் நிலைத்தகவலிட்டு வருகிறார்கள்.


வரலாற்றின் இண்டு  இடுக்குகளில் தேடிப்பார்த்தால் இதற்கான விடை கிடைக்கிறது


சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் Dr .பி.வி .கேஸ்கர் என்ற அமைசர் ஒளிபரப்புத்துறை அமைச்சராக இருந்தார்> லண்டன் சென்று ஓ ளிப்பரப்புத்துறையில்படித்தவர். அப்போதெல்லாம் மாதமிருமுறை "வானொலி "என்ற பத்திரிக்கை  வரும்.சென்னை,திருச்சி , கோழிக்கோடு,திருவனந்தபுரம் வானொலி நிலையங்களின் நிகழ்ச்ச்சி நிரல்கள் தேதி .நேரம் ஆகியவற்றோடு வரும். நிமிஷக்கணக்கு கூட தவறாமல் ஒளிபரப்பாகும். திரை பாடல்கள் என்றும் அதில் வரும்.ஒளிபரப்பப்படும் திரைப்பாடல்களுக்கான உரிமைத்தொகையாக படத்தயாரிப்பாளர்களுக்கு பாடலுக்கு ஒரு ரூ விதம் அனுப்பப்படும் .


உப்புமா கம்பெனி தயாரிப்பாளர்கள் என்றால் அனுப்பமுடியாது . பாடிய நலிந்த இசை கலைஞர்களுக்கு எதுவும் கிடைக்காது.


அகில இந்திய அளவில் இந்த கலைஞர்களுக்காக  இசை இயக்குனர் நௌஷாத் ஒரு அமைப்பை துவக்கினார்.எதோ கொஞ்சம்  உதவி செய்ய முடிந்தது. இந்த அமைப்பின்  தமிழக பிரிவில் மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர்  எம்.பி. சீனிவாசன் செயல்பட்டார்.அவரே ஒரு புகழ் பெற்ற இசை அமைப்பாளரும் கூட .

பின்னணி இசை ,மற்றும் பாடல்கள் பிரபலமாகும் பொது தயாரிப்பாளர்கள் கொழுத்த பணம் பெறறார்கள். இந்த சமயத்தில் தான் Performing Artist சங்கம் உருவானது. இசைஅமைப்பாளர்கள் தாங்கள் கஷ்டப்பட்டு இசை அமைக்க அதன் பணப்பயனை சம்மந்தமே இல்லாத தயாரிப்பாளர்கள் கொண்டு போவதை எதிர்த்தார்கள். வழக்கு நடந்தது> கிழக்கிந்திய  சலனப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் நிகழ்த்து கலைஞர்களுக்கும் நடந்த வழக்கில் நீதிபதி கிருஷ்ணய்யர் மிகவும் முக்கியமான தீர்ப்பினை கொடுத்தார்.   


(கொஞ்ச்ம பழைய கதை )


"பவளக்கொடி " என்ற படத்தில் M K T நடித்தார்.பாடல்கள் சக்கை போடு போட்டன. வெளிநாட்டு கிராம போன் கம்பெனி அதனை வெளியிட்டது.அநியாயத்துக்கு லாபம் கிடைத்தது>இதற்கிடையே சிந்தாமணி,சிவகவி,என்று MKT யின் புகழ்  உயர்ந்தது. அவர் தனக்கு ராயல்டி அதிகம் வேண்டும் என்று கம்பெனியிடம் கேட்டார்>கம்பெனி மறுத்தது.அவர் பாட மறுத்தார்.அந்நிய கம்பெனி தன வேலையை காட்டியது."ராஜ கோபாலசர்மா " என்பவரை பாடவைத்தது .சர்மா mkt போன்றே அச்சு  அசலாக பாடுவார்.

"Mk தியாகராஜபகவதர் 


போல்

பாடிய  படப்பாடல்கள் " என்று வெளியிட்டது .



நீதிபதி கிருஷ்ணய்யர் தயாரிப்பாளர்களின் உரிமையை ஏற்றுக்கொண்டார். அதே சமயம்  இசை அமைப்பாளரின் திறமையும் மதிக்கப்படவேண்டும் என்று கூறினார். பாடல்கள் திரை இடப்படும்போது உரிமை தயாரிப்பாளருக்கு>அதே பாடல்கள், தனியாக ஒளிபரப்பப்பபடுமானால், ( படசேர்க்கை  இல்லாமல்) உரிமை இசையமைப்பாளருக்கு என்று கிருஷ்ணய்யர் விளக்கினார். திரைப்பட ,தயாரிப்பாளர்,இசை அமைப்பாளர்,பாடகர்வாத்தியக்காரர்கள் என்று ஒவ்வொருவர் பாங்கினையும் விவரித்து கிருஷ்ணய்யர் கொடுத்த தீர்ப்பு சர்வதேச புகழ்  பெற்ற தாகும்..  

மதுரையில் சத்குரு சங்கீத கல்லூரி என்று உள்ளது. அதில படித்த மாணவி சங்கீதத்தில் MA முடித்தார் . அன்னை தெரசா பல்கலையில் MPhil காண ஆராய்சசியில் இறங்கினார் . legal aspects of musicology என்ற தலைப்பில் கட்டுரை எழுதினார் .

மனித குலம் கூட்டாக வாழ்ந்த காலத்தில் தோன்றிய சேர்ந்திசையிலிருந்து ஆரம்பித்து, உபரிஉழைப்பு , சொத்து,தனி உரிமை என்று மாறி இசையும் தனிநபர் சொத்தாக மாறியதை கட்டுரையில் சுட்டி இருந்தார் அந்த மாணவி .

பல்கலை பேராசிரியர்கள் அந்த மாணவியை பாராட்டி நீ ஏன் நலிந்த இசை கலைஞர்களின் வாழ்நிலையை மாற்ற முயற்சிக்கக் கூடாது என்று ஆலோசனைகூறினார்கள். மாணவி அதனை ஏற்று BL  படித்தார். பின்னர் ML முடித்தார் . Intelectual property பற்றி ஐக்கிய நாடுகள் சபை நடத்தும் சிறப்பு தேர்வினையும் எழுதினர் .

தற்போது பெண்களின் உரிமை,மற்றும் IP சட்டம் சார்ந்த (குறிப்பாக இசை சம்மந்தப்பட்ட ) துறையில் advocate ஆக திருச்சியில்பணியாற்றுகிறார்.


அவ்வப்போது தினமலர், தீக்கதிர், குமுதம் போனற பத்திரிகைகளில் இவை பற்றி கட்டுரைகளை Advocate ஹன்ஸா என்ற பெயரில் எழுதி வருகிறார் .

0 comments: