Thursday, July 06, 2017




மாட்டிறைச்சியும் 


மாடுகளின் எண்ணிக்கையும் ...!!!





"மாட்டிறைச்சி பற்றி மத்திய அரசு சில முடிவுகளை அறிவித்து உள்ளது. மாடு வளர்ப்பு பற்றி அனுபவம் இல்லாதவர்கள் கொள்கை முடிவுகள் எடுப்பதால் வந்து வினை இது " என்கிறார் டாக்டர் ஜான்செல்லதுரை !

மகாராஷ்டிரா -குஜராத் மாநில எல்லையில் உள்ள "ஜலகான் " என்ற ஊரில் காந்தி அறக்கட்டளை என்ற நிலையத்தில் பணியாற்றும் டாக்டர் ஜாண் நெல்லை மாவட்டத்தில் உள்ள சேரன்மாதேவியைச்  சேந்தவர். குஜராத் வித்யாபீடத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். 51 வயதாகிய ஜாண்  என்னுடைய குடும்பத்தில் ஒருவர் . என்னை பார்க்க குடும்பத்தோடு வந்திருந்தார் .

"இந்தியாவில் தற்போது எருமை,மாடுகளையும் சேர்த்து 20 கோடி மாடுகள் இருக்கலாம் .  அவ்ற்றில் பாதி காளை  மாடுகள். பால் கறக்கும்  மாடுகள் சுமார் பதினைந்து ஆண்டுகள்,அல்லது பதினெட்டு ஆண்டுகள் பால் சுரக்கும். இதற்குள் எட்டு முறை அவை கன்றினை "ஈன " வேண்டும் ,இவற்றில் காளை கன்றுகள்   60 சதமாகும்."

 "க  ன்றுகளை மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகள் வளர்ப்பான்> முந்தி மாதிரி அவனுக்குஉழ  மாடுங்க தேவை இல்லை . அதனால் அவற்றை விற்று விடுவான்> அவனுடைய பணத்தேவையை அது நிறைவேற்று.ம் கன்று 3000 /- ரூ யிலிருந்து  5000 /-ரூ வரை போகும் நல்ல சாதி  என்றால் 8000/- ரூ லிருந்து 10000/- ருவரை போகும். அவன் சந்தையில் யார் வாங்குகிறார்கள் ,என்ன செய்யப்போகிறார்கள் என்பதை கவனிக்க மாட்டான்."

"பசுவிற்கே தீவனம் கொடுக்க முடியாமல் இருக்கிறான்  பசும்புல் கொடுத்தால்  பால் அதிகம் சுரக்கும் . இருக்கும் பசுவிற்கு அவனால் பசும் புல் கொடுக்க முடியவில்லை புல்வெளிகள் இல்ல> அதற்கு பதிலாக புண்ணாக்கு,ஊசி என்று போகிறான்.

 ் பசு"ஈன "  வேண்டும் காளை  மாட்டை கசாப்புக்கு அனுப்பக்கூடாது.இன்னும் ஐந்து ஆண்டுகளில்மாடுகளின் எண்ணிக்கை 30 கொடியை தாண்டலாம். "

" கிராமப்பொருளாதாரம் என்னவாகும் என்பதை நினைத்தால் பயமாக இருக்கிறது. வெளிநாட்டினர் நம்மை கேவலமாக பேசும் காலம் விரைந்து கொண்டிருக்கிறது "

டாகடர் ஜாண் அவர்களோடு பேசும் பொது கிடைத்த தகவல் இவை !

இன்னும் நிறைய நிறைய இது பற்றி எழுத இருக்கிறேன் !!!




.

0 comments: