Monday, July 17, 2017






பா.ஜ .க வின் "பளபளப்பு "

மங்கத்தான் செய்கிறது ...

ஆனாலும் ....!!!



ஆங்கிலத்தில் sheen என்பார்கள். இல்லாத பளபளப்பை  பாஜக வுக்கு ஊடகங்களும் கார்ப்பரேட்களும் பூசி  வைத்தார்கள். அது மங்கி போய்க்கொண்டிருக்கிறது . 

சென்ற ஆண்டு அவர்க ள்  "செல்லாநோட்டு " என்று அறிவிப்பதற்கு முன்பே அது ஆரம்பமாகிவிட்டது. தீவிர வாதிகளுக்கு நிதி செல்வதை தடுப்போம் என்றார்கள் . ஐ எஸ் தீவிரவாதிக்கு நிதி சேகரித்ததாக சென்னையில்    கைது என்று செய்தி கூறுகிறது. கள்ளப்பணத்தை ஒழிக்க  என்கிறார்கள்  500/- 1000/- ரூ  நோட்டுகளை மாற்ற காலஅவகாசம் கொடுங்கள் என்று நேற்று நிதிமன்றம் கூறியுள்ளது . 50/- 100/- என்ற "சிறுவாட்டு" காசைக்கூட வாங்கி மூலம் தான் எடுக்கவேண்டும் என்று ஆக்கிவிட்டார்கள் . 5/-ரூ யை எடுக்க 3/-ரூ சேவை என்று .வசூலிக்கிறார்கள் . சொல்லவும்  முடியாமல் மக்கள்  தவிக்கிறார்கள் .

மாடு வளர்க்காதவர்கள் , மாட்டுக்கறி விற்பனை பற்றி கொள்கை முடிவு எடுக்கிறார்கள் என்று டாக்டர் ஜாண் செல்லத்துரை குறிப்பிடுகிறார். சரிதான்.பா.ஜ.கவின் குடுமி மோடி இடமிருக்கிறது .மோடியின்குடுமி ஆர்.எஸ்.எஸ்  இடம் இருக்கிறது .ஆர்.எஸ்.எஸ் குடுமி மோகன் பகவத் அவர்களிடம் இருக்கிறது . மோகன் பகவத் கால்நடை பல்கலையில் படித்து Msc  பட்டம் பெற்றவர். மாடுகளை வெட்டக்கூடாது என்றால் என்ன ஆகும் தற்போது 20 கோடி கால்  நடைகளிருக்கின்றன. இன்னும் ஐந்து வருடங்களில் இது 30 கொடியாகிவிடும் .பசுவுக்கு புல்  கொடுக்க புல்வெளி இல்லை . இந்தகொள்ளை யில் கறவை நின்ற மாடுகளையும் காளை மாடுகளையும் வைத்துக்கொண்டு விவசாயி என்ன செயப்போகிறானா. வெகு விரைவில் வெளி  நாட்டார் காரி துப்பும் நிலை வரத்தான் போகிறது.  

சுங்கவரி, காலால் வரி ,விற்பனை வரி,என்று வரிக்கு மேல் வாரிபோட்டார்கள். இதனைகுறைத்து வர்த்தகர்களுக்கு நிவாரண மளி த்து  ஒரேவரியாக நாடுமுழுவதும் கொண்டுவரப்போகிறேன் என்று காங்கிரஸ் அறிவித்தது.சரக்கு சேவை வரி என்று gst பெயரும் வைத்தது .

இதனை ஏற்கமாட்டேன் என்று குதித்தவர் குஜராத் முதலமைசராக இருந்த மோடி அவர்கள். பிரதமரானார். அதே சரக்கு சேவை வரியை நடைமுறைப்படுத்தி உள்ளார் .வரியா குறைக்க இல்லை.இதற்கு முன் வரியே போடாத 500 பொருட்கள் மீது வாரிபோட்டுள்ளார் .பல பொருட்கள் மீது 18 சதத்திலிருந்தது   28 சுத்தமாக்கி உள்ளார் . தக்காளி இன்று 100 /-ரூ கிலோ. சின்ன வெங்காயமும் அப்படியே . மக்கள் திகைத்து நிற்கிறார்கள்.

பா.ஜ க வின் பளபளப்பு மங்கிவிட்டது .இது தான் தருணம் !

ஆனாலும்...

சுதந்திரத்திற்கு முன்பு உன் எதிரி யார் ? என்று இந்தியனிடம் கேட்டால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் என்று காஷ்மீரிலிருந்து குமரிவரை உள்ள இந்தியன் கூறுவான் !

இன்று நிதிஷ் குமார் லாலுபிரசாத் யாதவை காட்டுகிறார் .அவருடைய துணை முதல்வர் நிதிஷ் ஏறும் மேடையி எற மறுக்கிறார் !

மமதா அம்மையார் கூர்கா மாநிலம் கேட்பவர்கள் என்கிறார் .முலாயம்சிங் தன மகன் அகிலேஷ் என்கிறார் . 

தமிழகத்து அறிஞர்கள்  பண்பாடு ,கலாசாரம் , பார்ப்பனீயம் ,மனுநீதி என்கிறார்கள் .

கேரளத்து சென்னிதாலா பினராயி விஜயன் என்கிறார் .

2019ல் தேர்தல் வரட்டும். நாங்கள் ஜெயித்தால் ஆடசி செய்கிறோம். நீங்கள் ஜெயித்தால் நீங்கள் ஆடசி செய்யுங்கள் என்று பா.ஜ.க தலைவர்கள் திமிரோடு கூறுகிறார்கள்.

மோடி ஒருரூபாய் நோட்டை அதானியிடம் கொடுத்து அழகாக  சட்டம் போட்டு 5/-ரூபாய்க்கு  விற்கசொல்கிறார். வாங்கி நாம் தேசபக்த்தர்கள் என்று நிரூபிக்க  வரும் நாடாளுமனற கூட்டத்தில் சட்டம் கொண்டுவர யோசிக்கலாம் .

நாம் என்ன செய்யப்போகிறோம் !!!  


    






0 comments: