Wednesday, March 01, 2017







"முருகன் திரு "


என்ற "சின்னப்பையனுக்கு "......!!!


தொழார் மருதன் அவர்கள் டெல்லி மாணவர்கள்போராட்டம் பற்றி அருமையான கட்டுரையை எழுதி இருந்தார்கள்.. அதற்கு பின்னுட்டமாக வந்ததில் முருகன் திரு என்ற சின்னப்பையன் "குண்டக்க மண்டக்க " எழு தி இருந்தா(ர்)ன் .


ஒரு கட்டத்தில் பதிலடி கொடுத்தல் தான் நிறுத்தப்படும் என்ற அளவிற்கு நிலைமை போயிற்று. கூட்டணி பற்றி,திமுக,அதிமுக வோடு  கம்யூனிஸ்டுகள்   சேர்ந்தது பற்றி எல்லாம் விமரிசனம என்ற பெயரில் அபத்தமான குற்ற சாட்டுகளை வைத்து எழு தபட்டிருந்தது .


இந்துமகா சபையாகவும்,ஆர்.எஸ்.எஸ் ஆகவும், ஜனசங்கமாகவும்,பா.ஜ.காவாகவும் அவதாரம் எடுத்த கச்சி எப்படி எல்லாம் வேஷம்கட்டியது என்பதை  இந்த சின்னத்துகளுக்கு தெரியாது.


இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் 370 சரத்தை பூண்டோடு  எடுக்கவேண்டும் என்பது பா.ஜ.கவின் முக்கிய மான கோரிக்கை. காஷ்மீரில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என்ற வேட்கையில் கூட்டணிக்காக ஆட்களை தேடியது ப.ஜ .க.


மெஹபூபா அம்மையாரும் கூட்டணிக்காக அலைந்து கொண்டிருந்தார். பா.ஜ.க அவரை நாடியது.  "பாகிஸ்தான்  பற்றி பேசக்கூடாது. ஆர்டிகிள் 370 பற்றி மூசசு விடக்கூடாது.பொத்திகிட்டு இருக்கணும் சம்மதமா ? ' என்கிறார் மெஹபூபா ! மேல்வாய் மட்டுமல்ல . நவதுவாரத்தையும் பொத்திக்கிடுதேன் னு சொல்லி கூட்டணி வைத்து பதவியில் இருக்கிறார்கள் பா.ஜ .க வினர். 

கேரளாவில் இடது முன்னணியும்,காங்கிரசும் கிட்டத்தட்ட சமபலத்தில் இருக்கின்றன. இரண்டுக்கும் வாக்கு வித்தியாசம் என்பது 1% தான். 2014 ஆண்டு தேர்தலில் இடது முன்னணி அதிக இடங்களை பெரும் வாய்ப்பு இருந்தது. கம்யூனிஸ்டுகள் வரக்கூடாது என்பதற்காக  பா.ஜ .க தன்னுடைய வேட்பாளர்களுக்கு கூட வாக்களிக்காமல் காங்கிரசுக்கு வாக்களித்ததை கண்டு, உலகமே காறித்துப்பியது .

பிஹாரில்.மத்திய பிரதேசத்திலும் சமயுக்த  விதாயக் தளம் என்று அமைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்ச்சியோடு ஆடசியா பகிர்ந்து கொண்டவர்களும் இவர்கள் தான். 


"வெட்கம் மானம் சூடு  சொரணை  " என்றெல்லாம் எழு தியுள்ளார் .உங்கள் தலைவர்களின் சூடு சொரணை பற்றி சுப்பிரமணியம் சாமியிடம்கேட்டு தெரிந்து கொள்ளலாம்.


சீன தூதரகத்தில்  உங்கள் . அமைசர் போதையில் நடத்திய கூத்து பற்றியும் அவரிடம் கேட்டால் சொல்லுவார் . 

தம்பி ! முருகா ! வேண்டாம். ! வம்பில் மாட்டிக்கொள்ளாதே ! திருசசி     "குங்கும பொட்டு" தலைவரிலிருந்து கிழித்து தொங்கவிட நேரிடும் .


1 comments:

சரவணன் said...

/// பிஹாரில்.மத்திய பிரதேசத்திலும் சமயுக்த விதாயக் தளம் என்று அமைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்ச்சியோடு ஆடசியா பகிர்ந்து கொண்டவர்களும் இவர்கள் தான். ///

அப்ப கம்யுனிஸ்டுகளுக்கு புத்தி எங்கே போச்சு?