Sunday, October 01, 2017






"காலந்தோறும் ,


தர்ம நியாயங்கள் ....!!! "





மனிதன் தோன்றிய போதே சமூகமனிதனாக உருவாகவில்லை. தாங்கள் மனிதர்கள் என்ற பிரக்ஞை  கூட  இல்லாமல் இருந்தார்கள். சிறுத்தை போல ஒருவருக்கொருவர் சிறுவதும்,நாய்களைப்போல கடித்துக் குதறுவதுமாகவே இருந்திருக்கிறாரகள் . எந்தவித கட்டுப்பாடு,நியா தர்மங்கள் பற்றிய புரிதல் இல்லாமல் வாழ்ந்திருக்கிறார்கள்.


அப்போது தான் அவர்களிடையே ஒரு மகான் தோன்றினார்.நாம் காட்டுமிராண்டிகளல்ல.நாம் கடவுளின் குழந்தைகள்.நமக்கு என்று  வகுத்த வழியில் வாழ்வோம் என்று உபதேசித்தார்


அந்தமகான் தான் ஆபுறகாம்   .

 உபதேசங்களை பலர் ஏற்றனர். கொஞ்சம்  கொஞ்சமாக  இவர்கள் வளர்ந்தனர். ஒருகட்டத்தில் இவர்கள் பேரவாரியாகவுக் நம்பிக்கையாளராகினர் .நம்பிக்கையற்று ஆப்றக்காமை ஏற்காதவர்கள் காட்டுமிராண்டிகளாக திரிந்தனர்.


அவர் காலத்திற்கு பிறகு நம்பிக்கையாளர்கள் தங்களை மேம்பட்டவர்களாக கருதிக்  கொண்டு  மற்றவர்களை அழித்து தாக்க ஆரம்பித்தனர்.இது அன்றய தர்மமாக கருதப்பட்டது.


இந்த நிலையை போக்க ஒருமகான் தோன்றினார். இனகு ழு  க்களாகஇருந்த மக்கள் ஒருவருக்கு ஒருவர் கூட்டம் கூட்டமாக அடித்து சாவதை தடுக்க விரும்பினார்.ஒரு குழு வை சேர்ந்தவன்  செய்த தவறுக்காக அந்தக்வைகுழுவையே  கொன்று குவிப்பது தவறு  என்று போதித்தார் ."ஒருவன் உன் கண்ணை காயப்படுத்தினால் அவன் கண்ணை சேதப்படுத்து. ஒருகண்ணுக்கு  ஒருகண்.ஒருக்காலுக்கு  ஒருகால் " என்று உபதேசித்தார் . அவர்தான் "மோசஸ் ". சில நூற்ராண்டுகல் கடந்தன.


மீண்டும்  ஒருமகான் தோன்றினார். "உன் எதிரியையும் நேசி>ஒருகன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை காட்டு.அமைதிவழி அகிம்சை வழியில் செல் " என்றார். அவர்தான் ஏசுபிரான்.

மனித வாழ்க்கையின்  உன்னதமான வழிமுறையை மனிதகுலம் கண்டெடுத்தது. ஆனால் வாழ்க்கையில் கடைப்பிடிக்க கடினமாக இருந்தது. அதில் ஒரு சிறு மாறுதலை கொண்டுவந்து அமைதி மார்க்கத்தை கொடுத்தார் மகான் நபிகள்நாயகம்.

ஆயிரம் ஆண்டுகளாகி விட்டது.இந்தமாற்றங்கள் ஏற்பட்டு 


அமெரிக்காவிலிருந்து ஜோன் என்ற தத்துவமேதை இந்தியாவந்தார்> இங்கேயே ஆசிரமம் கட்டி வாழ்ந்தார் .காந்தி அடிகளின் உபதேசங்களைக்கேட்டார்> ஆசிரமம் அமைத்து இங்கேயே தங்கினார்

காந்தியோடு விவாததித்தார் " காந்தியிடம் "ஐயா 1 உங்கள் அஹிம்ஸை வழியில் புதியதாக என்ன இருக்கிறது . இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏசுபிரான் உன் எதிரியையும் நேசி "என்று கூறிவிட்டார் ! அதைவிட நீங்கள் என சொல்லப்போகிறீர்கள். " என்று கேட்டார்.

அண்ணல் கைராட்டையை சுற்றிக்கொண்டு இருந்தார்>மெதுவாக நிமிர்ந்து ஜோன் அவர்களை பார்த்தார் .தூரத்து  அடிவானத்தை பார்த்துக்கொன்டே கூறினார் '

"எங்கண்ணுக்கு எதிரி யாருமே தெரியவில்லையே ! நான் என்ன செய்ய ? !"என்றார் அண்ணால்காந்தி அடிகள்

0 comments: